உரையாடல்.- 5 (x-group, சேகர்.)

x-group வலைப்பதிவில் இடம்பெற்ற உரையாடல்.

பெண் குழந்தைகளை முத்தமிடுவதில் எல்லை தேவையா?

பெண் குழந்தைகளை ஆண்கள் கொஞ்சும் போது, பெண்குழந்தைகள் தர்மசங்கடமாக உணர்கின்றன என்பது தெரிந்த உண்மை. தனக்கு பிடிக்காத வகையில் யாராவது தன்னைக் கொஞ்சினால் வெளியே சொல்லவே அச்சப்பட்டு, மனம் வெதும்பி, மன உளைச்சலுக்குக் குழந்தைகள் ஆளாகின்றன. இதே மனநிலையில் வழரும் போது, சில பெண்கள் ஆண்களைக் கண்டாலே வெறுப்பு ஏற்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

பெரும்பாலான ஆண்கள் தங்கள் எல்லையை மீறுவதில்லை. ஒரு சிலர், 'குழந்தை தானே...' என்று நினைத்து உதட்டைக் கிள்ளுவது, கன்னத்தில் முத்தமிடுவது உட்பட பல செயல்களை அவர்களையும் அறியாமல் செய்து விடுகின்றனர். மிகச்சில ஆண்கள், எல்லையையும் மீறுகின்றனர். குழந்தை என்று தெரிந்தே எல்லை மீறிச் செயற்படுகின்றனர்.

ஆனால், இதை பெற்ற தாய் தான் உற்ற கண்ணாக இருந்து குழந்தையை எச்சரித்தபடி பார்க்க வேண்டும் என்கின்றனர் அவர்கள். பல குடும்பங்களில் இதைக்காணலாம். 'அந்த அங்கிள் வந்தா, கிட்டே போகாதே. சட்டை போடாமல் வெளியே போகாதே. எல்லோர் எதிரேயும் சட்டையைக் கழற்றாதே..' என்று அறிவுரை கூறிக்கொண்டே இருப்பார்கள் பார்க்கும், கேட்கும் நமக்கு ஏதோ போல் தோன்றினாலும், யதார்த்தத்தை நினைக்கும் போது அதில் எதுவும் பிழையாக தெரியாது.

மனநல மருத்துவர்களும் பெண்குழந்தைகள் மனநிலை பாதிக்காத வகையில் எப்படி நடந்து கொள்வது என்று நிறைய அறிவுரை கூறுகின்றனர். சமீபத்தில் நடந்த குழந்தைகள் மாநாட்டில், 'பெண்குழந்தைகளை கொஞ்சுவதில் உறவினர்களுக்கு எல்லை வகிக்க வேண்டும்' என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளை கொஞ்சும் சாட்டில் சிலர் அதாவது ஆண்கள் எல்லை மீறி விடுவதால் ஆண்கள் என்றாலே குழந்தைகள் அருவருக்கத் தொடங்கி விடுகின்றனர். இது அந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தையே பாதிக்கத் தொடங்கி விடுகிறது. இதனால் சில குழந்தைகளின் மனநிலை பாதிப்புக்கும் உள்ளாவதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மகளிர் ஆணையத்தில் ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன. பெண் குழந்தை கல்வி கற்றால், அந்த குடும்பமே படித்ததற்கு சமம். ஒவ்வொரு குழந்தையும் ஏதோ ஒரு திறமை பெற்றுள்ளது. சுய சிந்தனையுடன் குழந்தைகள் உள்ளன. பெண்குழந்தைகளுக்கு கல்வி மட்டும் போதாது. தற்காப்பு கலைகளும் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஆண் ஆசிரியர் பிரம்பால் கையில் அடித்தால் வாங்குவது வேறு. ஆனால் கையால் தொட்டால், ஆசிரியருடைய கண்களைப் பாருங்கள். அவர் கண்ணில் கோபம், இரக்கம் அல்லது காமம் என எந்த உணர்வு இருக்கிறது என்பது தெரியும். பக்கத்து வீட்டில் வசிப்போரும், உறவினர்களும் கூட பெண் குழந்தைகளை கொஞ்சுவதில் எல்லை உள்ளது. இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

இவர்கள் சொல்வதில் எவ்வளவு உண்மை என்பது ஒவ்வொரு பெண்குழந்தைகளுக்கும் தெரியும். எனவே, பெண் குழந்தைகளுடன் நட்பு முறையில் பெற்றோர் பழகும் போது, தனக்கு நடக்கும் இது போன்ற தொந்தரவுகள் குறித்து உங்களிடம் பகிர்ந்து கொள்வர். சம்பந்தப்பட்ட உறவினர்களிடமே, அளவோடு பழகுமாறு கூறி விடுவது மிக மிக நல்லது.

நன்றி: வீரகேசரி.

பின்குறிப்பு:
ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பை மையமாக வைத்து, குழந்தைமை ஆய்வு நோக்கில் எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரைக்கு பெண்ணியல் நோக்கில் வேறுவிதமான பார்வைகளையும் விமர்சனங்களையும் வைக்க முடியும். பெற்றோரியல், உளவியல், உடல் நலவியல் போன்ற துறைகளின் பார்வை பெரும்பாலும் சமூக யதார்த்தக் கட்டமைப்புத் தளத்தின் மீது, அதன் பிரச்சனைப்பாடுகளை எதிர்கொள்ளும் விதமாகவே அமைந்திருக்கும். பெண்குழந்தைகள் மட்டுமல்லாது ஆண் குழந்தைகள் கூட பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களை எதிர்நோக்குகின்றனர். ஆண், பெண் என்ற வித்தியாசம் கடந்த சூழலை நோக்கிய சமூகப்பார்வையில் மேற்படி கட்டுரை தனது மதிப்பை இழக்கின்றது. ஆரம்ப பெண்ணியத்துக்கு பின்பான பெண் மீதானஆணதிகாரம் ஒரு கட்டத்தில் பெண்ணை 'கொண்டாடுவதன்' மூலம் நிலைநிறுத்தப்பட்டது. இன்றைய உலகு அதை தாண்டிய பரிமாறும் ஆண், பெண் இயல்புகள் உள்ள வெறுமனே பௌதீகஉடல் சார் ஆண், பெண் வேறுபாடு மட்டுமேயென்ற தளத்தில் தன்னை தகவமைத்துகொள்ள முற்படுகின்றது. ஆயினும் இன்னும் ஆணாதிக்க கட்டமைப்பும், ஆண், பெண் என்ற வித்தியாசமான அணுகுமுறையும் பெரும்பாலும் நிலைகொண்டுள்ள இலங்கை போன்ற சமூகத்தில் இக்கட்டுரையின் தேவையை நிராகரிக்க முடியாது.
இவ்விடயம் சார்ந்து ஆழமான உரையாடலை இணைய சமூகத்திடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.

x-group



சேகரின் பின்னூட்டம்.

சாதாரண சமூகச்சூழலை மையமாக வைத்து எழுதப்பட்ட கட்டுரை பிராய்டின் உளவியல் வரையான உரையாடலை எதிர்பார்த்து நிற்கின்றது. சமூகம் மீதான பிராய்டின் உளவியல் பார்வை என்பது தனியே பாலியலை மையப்படுத்தி முன்வைக்கப்பட்டதென்ற குற்றச்சாட்டு அதற்கு பின்வந்த எத்தனையோ உளவியலாளர்களால் வைக்கப்பட்டுவிட்டது. பூக்கோவும் அதற்கு பின்னான டிலீஸ்-கட்டாரியும் அதைப் புரட்டி போட்டுவிட்டனர்.
-Deleuze and Guattari's concept of sexuality is not limited to the connectivity of just male and female gender roles, but by the multi-gendered flows that a "hundred thousand" Desiring-Machines create within their connected universe.-
இன்னும் பெண்ணியம் சார்ந்து அதன் குறைபாடுகள் பெண்ணியர்களால் காரசாரமாக விவாதிக்கப்பட்டுவிட்டது. ஆணாதிக்க உலகு சார்ந்தே அவரது பார்வை முன்வைக்கப்படது. அதுவும் இன்று பலவகைகளில் மாற்றம் பெற்றுவிட்டது. இன்னும் சமூகம், கலாச்சாரம் சார்ந்து இதன் பார்வைகள் வெவ்வேறு பரிமாணம் எடுக்கக்கூடியவை. மேற்கில் வளரும் குழந்தையையும் ஆசியாவின் ஏதோ ஒரு பகுதியில் வளரும் குழந்தையையும் ஒரே பார்வைக்கு உட்படுத்திப் பார்க்க முடியாது. இருவகைத் தளங்களும் பார்வை நோக்கில் தாம் சமூகம் சார்ந்து இயங்கும் சுழற்சியின் மையப்புள்ளியினது 'அளவை' களை முக்கியமாக கவனத்தில் எடுக்க வேண்டும். மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் எனும் பார்வை வீச்சுக்குள்ளேயே இக்கட்டுரையை வகைப்படுத்திவிட முடியும். ஆயினும் பின்னூட்டங்கள் அவ்வீச்செல்லை தாண்டி ஈடிபஸ் மனச்சிக்கல் வரை வந்துவிட்டது. மேலே குறிப்பிட்டது போல பிராய்டின் உளவியல் பார்வைகள் பாலியலை மையப்படுத்தி துவித இருமைகளுக்குள் ஆட்பட்டவை. ஆண், பெண் என இரு புள்ளிகள் பற்றி அலைவுறுபவை. பிற்குறிப்பில் எக்ஸ்-குழு சொன்னது போல உலகம் அதை தாண்டி வெகு தூரம் வந்தாயிற்று.
இதில் நான் சொல்ல வந்தது ஈடிபஸ் சிக்கலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் சார்ந்தவை. ஈடிபஸ் என்ற பெயர் வரக்காரணமானதே சுவாரசியமான? கதைதான். ஈடிபஸ் கிரேக்க மன்னனாக இருந்தவன். இவன் தாயின் மீது காதல் கொண்டு தாயுடனான உறவின் மூலம் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டவன். பின் தகப்பனை கொன்று அரியாசனத்தை கைப்பற்றிக்கொண்டவன். அவனது பெயரை வைத்தே பின்னர் பிராய்டால் உருவகப்படுத்தப்பட்ட மனச்சிக்கல் அழைக்கப்பட்டது. சேக்ஸ்பியரின் புகழ்பெற்ற 'ஹம்லெட்' இனது கதையும் இவ் ஈடிபஸ் சிக்கலை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டது.
....This paper shows how the Oedipus complex theory can be applied to Hamlet, the main character of "Hamlet" by William Shakespeare and the issues that he faces concerning his mother and girlfriend. The paper shows that the intense rage that Hamlet projects onto Queen Gertrude (his mother), Ophelia (his girlfriend) and women in general compiles this version of Oedipus complex triangle. Hamlet finds himself strangely drawn to the act of matricide whether or not he blatantly expresses it, because he partially blames his mother for the circumstances leading up to his father's death, although he has a strange sexual affinity towards her. The paper describes how Hamlet releases his frustration about his father's death indirectly on Ophelia while raising to the surface strong undercurrents of an Oedipal complex with Gertrude as its center...
விளாதிமிர் நபகோவின் 'லொலிட்டா' எனும் புகழ்பெற்ற நாவல் 'எலக்ற்ரா' மனச்சிக்கலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே. தகப்பன் வயதை ஒத்த ஆடவனுடன் காதலுறும் சிறிய பெண் பற்றியது. இவ்வாறான மனச்சிக்கலை? கொண்டவர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றன என்கின்றன ஆய்வுகள். இன்னும் எல்லோருமே ஏதோவொருவகையில் இச்சிக்கலால் பீடிக்கப்பட்டவர்களே. அவரவர் பொறுத்து அதன் ஆளுகை வீதத்தில் மாறுபடுகின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள். இன்னும் ஜேம்ஸ் ஜோய்ஸ் ஐ இவ்விரு சிக்கல்களும் வாய்க்கப்பெற்றவரென சொல்வர். ஜேம்ஸ் ஜோய்ஸ் தனது தாயாருடன் உறவைப்பகிர்ந்து கொண்டவர் எனக்கூறப்படுகிறது. அதே நேரம் பிற்காலத்தில் தனது மகளுடனும் உறவைப்பகிர்ந்துகொண்டதாக கூறப்படுகிறது. சமப்பாலுறவுகள் போன்றே வரலாற்றின் நெடிய வழியெங்கும் புறநடையாக ஈடிபஸ்-எலக்ற்ரா சிக்கல்களும் நடைபோட்டு வந்துள்ளன. ஆயினும் சமப்பாலுறவுக்கு கிடைத்த அங்கீகாரங்கள் போன்று இவ்வகைமாதிரிகள் பெறவில்லையென்றே கூறவேண்டும். அதற்கு சிறுவர் உரிமை போன்ற விடயங்கள் காரணங்களாக இருந்து இருக்கலாம். லொலிட்டா போன்றவை பிற்காலத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டன. அவ்வகையில் china town, American Beauty போன்ற திரைப்படங்களும் இம்மையக்கருத்தில் வெளிப்பட்டன. அமெரிக்கன் பியூட்டி மனச்சிகலுக்கு உள்ளான சமுதாயமாகவே ஈடிபஸ் மனச்சிக்கல் சமூகத்தை காட்ட முயற்சித்தது. தனது தகப்பனிடம் காதல் வயப்படும் நண்பியையும் அவளையும் சுற்றிப் பின்னப்பட்ட கதையே அது. நமது தமிழ்ச்சூழலிலும் அது பற்றிய படைப்புகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. சாரு நிவேதிதாவின் உன்னத சங்கீதம் சிறுமியுடனான நடுத்தரவயது ஆணின் உறவை நியாயப்படுத்திச் செல்கின்றது. அவ்வாறே சோபாசக்தியின் 'ம்' கூட, (அது அரசியல் நாவல் என்ற போதிலும்) ஏதோ ஒரு வகையில் எலக்ற்ரா சிக்கலை நியாயப்படுத்தியே தமது பார்வையை முன்வைக்கின்றன. (கவனிக்க- வன்புணர்வு அல்ல.) ஆயினும் அவர்கள் விமர்சனத்தை எதிர்கொள்ள தவறவில்லை. அதை பற்றிய விவாதங்கள் இன்னும் தேவையானவையே. சமூகச்சூழலில், நியாயப்படுத்தல்கள் கொண்டுவரும் காரணங்கள் சிறுவர் மீதான பாலியல் வன்முறை அல்லது நிர்ப்பந்தத்திற்கான ஏதுவாய்களாக இருக்கமுடியும் என்பது உண்மைதான். முதிர்ச்சியடையாத சிறுவர் பாத்திரத்தை கதைக்களன் ஆக்குவது, சிறுவர் உரிமை தொடர்பான பிரக்ஞை உள்ளவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது தான்.
சோபாசக்தியின் 'ம்' இல் வரும் இக்கருதுகோள் தொடர்பான விடயத்திற்கு பொடிச்சி சொல்லும் காரணங்கள் ஏற்புடையனவே...
//...குழந்தையை புணர்ந்தவனை பெடோபைல் (pedophile) எனச் சட்டம் தரம் பிரிக்கிறது; அவனும் இச் சமூகத்தின் victim என்பதாக ஷோபாசக்தி. அவனுக்கு, வாழ்நாளெல்லாம் தேடிப் பெறாத ‘பரிசுத்தமான காதல்’ அவனது குழந்தையிடம்தான் இருக்கிறது. அவன் நிறைய சொல்கிறான். சொல்லிக்கொண்டேட இருக்கிறான். சிறுமி தனது பக்கத்தைச் பேசவே இல்லை. ''அவளது இருஇதழ்களின் நடுவே தோல் வளர்ந்தது”
வன்முறையாளரின் நோக்கிலிருந்து இந்த பிரதி பேசுகிறது; -இதில், முதிர்ச்சியற்ற, பரிசுத்தமானவளாய் இருக்கிற, பிரதியாசிரியரால், பேசுவதற்கு எவ் வார்த்தையும் அனுமதிக்கப்படாத, அந்த சிறுமியுடைய பக்கத்தை அவள்தானே சொல்ல முடியும்? அந்தப் பக்கத்திற்கான பதில், பிரதியில் அவளது மெளனம் மட்டுமே...//

சிறுமி என்னும் முறையில் அது அத்துடன் நிற்க,
இன்றைய தமிழ்ச்சூழலில் ஈடிபஸ் சிக்கல்/ இலக்கியம் என்பது பேசப்படாத பொருளாகவே இருக்கின்றது. (காமலோகம் தவிர்த்து- இளைய ஆண்களால் எழுதப்படும் பாலியல்பிரதிகளில் பெரும்பாலானவை நடுத்தர வயதுப்பெண்களுடனான உற்வைப் பேசுபவையாகவே இருக்கின்றன. இலக்கிய தரம் என்ற அளவில் அவற்றிற்கு ஏற்படும் தோல்விகளால் அவை வெறும் 'களவாக' வாசிக்கும் பிரதி வகைக்குள்ளேயே நின்றுவிடுகின்றன. இன்னும் ஷகீலா போன்ற நடுத்தரவயதுப்பெண்களை வைத்து திரைப்படங்கள் தயாரிப்பவர்களது முக்கியமான இலக்கு பதினம வயது பையன்களே. தமிழ்சமூகம் ஈடிபஸ் சிக்கல் வகைமாதிரியில் எவ்வளவு தூரம் தன்னை ஆட்படுத்திக்கொண்டுள்ளது என்பதற்கு வேறு உதாரணம் வேண்டுமா என்ன?) தமிழ்ச்சூழலில் பெண்ணியம் பேசுவோர் கூட பெண்ணை புனிதப்படுத்தி/ பெண்ணுடலைக் கொண்டாடும் வகைமாதிரியில் இருந்து வெளியில் வருவதாக தெரியவில்லை. (ஒரு சிலரைத் தவிர..) ஆக, இவ்வகை பிரதிகள் தமிழுக்கு இப்போது கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. ஈடிபஸ்- எலக்ற்ரா என இருவகை மாதிரியிலும் தமிழில் பிரதிகளைப் பெறக்கூடியதாக இருக்கின்ற போதும் அவை அனைத்தும் ஆண்களாலேயே எழுதப்பட்டுள்ளன. இது தொடர்பான பெண்ணின் பார்வை என்பது தமிழில் இல்லை என்றே சொல்லலாம். பெண்ணியம் சார்ந்து இதன் முக்கியத்துவம் என்னவென்றால், 'ஆண்' மீதான எதிர்ப்புணர்வு பெண்ணைக் 'கொண்டாடும்' இயல்புடன் வைக்கப்படுகின்றதென்பதற்கு அப்பால், ஈடிபஸ் மனச்சிக்கல் மீதான பார்வையற்ற நிலைமை ஏதோ ஒரு விதத்தில் ஆணதிகாரம் தன்னை 'பெண்' மீது நிறுவி நிற்கின்றதென கொள்ளமுடியும். சமப்பாலுறவு எனும் பார்வைக்கு முதல் 'ஆண்' மீதான மறுப்பு என்பதை நிறுவும் வழி பெண்களால் புனையப்படும் ஈடிபஸ் சிக்கல் வகைமாதிரியான பிரதிகளே. அது அடக்கும் 'ஆணை' மறுத்து அடங்கும் 'ஆணை' விரும்பி நிற்பது. ஆயினும் அவ்வகைத்தெரிவுகளுக்கு அப்பால் பெண்மை சமப்பாலுறவை தெரிவு செய்கின்றது. அதன்மூலம் தன்னை தகவமைத்துக் கொள்ள முயல்கின்றது. ஈடிபஸ் 'மனசிக்கல்?' தொடர்பான விவாதங்கள் இன்னும் எமக்கு அவசியமானவையே. ஆயினும்,
//..ஆண், பெண் என்ற வித்தியாசம் கடந்த சூழலை நோக்கிய சமூகப்பார்வையில் மேற்படி கட்டுரை தனது மதிப்பை இழக்கின்றது. ஆரம்ப பெண்ணியத்துக்கு பின்பான பெண் மீதானஆணதிகாரம் ஒரு கட்டத்தில் பெண்ணை 'கொண்டாடுவதன்' மூலம் நிலைநிறுத்தப்பட்டது. இன்றைய உலகு அதை தாண்டிய பரிமாறும் ஆண், பெண் இயல்புகள் உள்ள வெறுமனே பௌதீகஉடல் சார் ஆண், பெண் வேறுபாடு மட்டுமேயென்ற தளத்தில் தன்னை தகவமைத்துகொள்ள முற்படுகின்றது. ஆயினும் இன்னும் ஆணாதிக்க கட்டமைப்பும், ஆண், பெண் என்ற வித்தியாசமான அணுகுமுறையும் பெரும்பாலும் நிலைகொண்டுள்ள இலங்கை போன்ற சமூகத்தில் இக்கட்டுரையின் தேவையை நிராகரிக்க முடியாது..//
என்பது உண்மையே...

சேகரின் குறிப்புகள்.

1.
Q:-How do we know Sigmund Freuds comment on typical ?
sons have a natural attraction to there mom and daughters to there father? How do we know this isnt true? I mean i dont have one but here is the thing who would say they did? Nobody would tell that so how can one prove him faulse?

Ans:-Edipus and Electra complex - children are jealous about their parent of the other sex. I'm a girl, I'm sexually fascinated with my father and I hate my mother, because I find a rivalry between us. A child feels it being about 2-3 years old, completely unconsciously!!!, so nobody can remember it and tell you whether it really happens or not.But they say it does.
An anecdote: during the exam (theory of literature) my friend was asked about this task. He knew nothing so professor tried to remind it to him by talking about his childhood, etc. Of course, he couldn't answer the question as he said that he couldn't remember anything like that from his own experience - and he couldn't recall any information about Freud...Happens:)

2.
Oedipus Complex

The Oedipus Complex is a Freudian term named after a Greek myth in which a man kills his father and unknowingly sleeps with his mother.

Freud described how as a young child, a boy develops an unconscious infatuation towards his mother, whilst at the same time fearing his father and viewing him as a rival. None of this usually happens at a conscious level. It results in an unconscious conflict because the boy desires the love of his mother yet fears the consequences from his father -the unconscious mind at such an age lacks the wisdom to truly understand the situation.

Often, the unconscious will find a satisfactory way of dealing with this conflict. However, in many cases, the solution is far from perfect. The consequences are many fold and may include: a boy who becomes an over competitive man (wants really to beat his father), a man who finds it hard to combine love and sex, a man who wants his wife to mother him etc.

Women experience a similar conflict called the Electra Complex (during the time of formation they often dream of being pursued by a witch (their mother). An unresolved complex has similar consequences to those described for a man. Women will often seek out a man who treats them similar to their father, or who even shares similar physical characteristics. Sometimes, they will do exactly the opposite.

A leading UK hypnotherapist estimates that 75% of the population need to resolve their complex, and that 50% of all heart attacks are caused by these complexes.

It should be noted that many therapists dismiss such Freudian therapies these days. Indeed, many of Freud's theories have been found to be incorrect or outdated now. However, equally true is that he made a huge contribution to the development of psychotherapy and that some of his theories were very precise.

My experience is that the Oedipus and Electra complexes do very much exist and that a major benefit is reaped by resolving them.

3.
CASE STUDY THE 40 YEAR OLD BOY

When Alan (name changed) walked into my consulting rooms I estimated his age at 20. During the interview he revealed his age as 40.

He was unable to maintain a relationship for more than a week with any woman, had only had sexual relations a few times in his life, and still lived with his mother. It was apparent that he idolised his mother.

During the third session of therapy I explained the Oedipus complex to him, and he surprised me by saying that he was consciously in love with his mother, and that he had for no apparent reason always hated his father--in fact he had a violent wish to kill him.

The Oedipus session with Alan was the most extreme I have ever witnessed. He jumped out of the chair, threatened me (projecting his father onto me) and then fell on the floor, sobbing whilst banging his fists on the carpet. This went on for over an hour. Finally, he got up and walked out.

The next week he returned and was clearly a different man. He had a maturity about him, and his violent manner had been replaced with a calm confidence.

By the time we reached the end of therapy he had moved away from his mother's house and had been seeing a lady for 4 weeks. I heard from him a year later, just after his wedding.

Resolution of the Oedipus or Electra complex is not usually so dramatic. Typically though, clients do report a change in their relationships and indicate that they have found peace within themselves.

4.
Aksharya' என்ற சிங்களத் திரைப்படம் ஈடிபஸ்- மனச்சிக்கலை மையமாக வைத்து அசோக கந்தகம எனும் நெறியாளரால் நெறிப்படுத்தப்பட்டது. யதார்த்திற்கு புறம்பான வகையில் தாய்-மகன் மற்றும் தந்தை-மகள் உறவை மையப்படுத்தியிருந்ததென குற்றம் சாட்டப்பட்டு இத்திரைப்படம் சிறீலங்காவில் தடைசெய்யப்பட்டது. அது தொடர்பாக இணையத்தில் கிடைத்த குறிப்பு கீழே தரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நடந்த விவாதங்களையும் குறிப்புகளையும் பார்க்க விரும்பினால்,
இங்கேயுமஇங்கேயும் பார்க்கலாம்.


இத்திரைப்படத்தின் Trailer ஐயும் சில காட்சிகளையும் சொடுக்குவதன் மூலம்பார்த்துக் கொள்ளலாம்.

இன்னும்,
இப்படம் torrent இலும் காணக்கிடைக்கிறது.
இங்கே சென்று தரவிறக்கிப் பார்க்கலாம்

இவ் இயக்குநரின் பிற திரைப்படங்கள் பற்றி தமிழில் வெளிவந்த விமர்சனப்பிரதிகளை
இங்கே பார்க்கலாம்
டி.சே எழுதியது. மயூரன் எழுதியது

5.
Aksharya
This story is bizarre. The unexpectedly long movie begins with a poignant scene of a woman (Piyumi Samaraweera) demanding to have sex with her aged husband (Ravindra Randeniya) as their wide-eyed servant (Jayani Senanayake) watches. The hysterical woman pulls the man on to her body, and while doing this, hesitantly recalls how her mother watched them making love and the broken and terrified woman’s untimely death.

Piyumi plays the role of a tough Colombo-based Magistrate. Versatile actor turned politician, a former UNP MP, Randeniya is a prematurely retired High Court Judge, a pillar of high society.

Asoka Handagama’s latest movie, Aksharaya, erroneously translated as ‘A Letter of Fire,’ is a fearless effort to discuss a hitherto untouched adult theme. The unprecedented theme and Handagama’s boldness would trigger criticism, but I personally believe it would do a world of good to the struggling local cinema.

Handagama declared that he was ready to face criticism after the screening of the move at Cine City last Sunday. It brought an end to the five-day Bonjour Cinema 2006 jointly organised by Belgium, Canada, France, Romania and Switzerland in collaboration with the National Film Corporation. According to the organisers the event offered the local movie-goer "a collection of films that represent the richness and the diversity of the cinema industry of the French-speaking countries represented in Sri Lanka."

Although Bonjour Cinema 2006 was held at the Elphinstone Theatre, the special guest screening of A Letter of Fire was held at the adjoining Cine City and entrance was strictly on invitation

The two and a quarter hour movie could have been easily shortened by at least 30 to 40 minutes. But I did not notice anyone leaving the hall.

The story revolves around a disquieting scene where the magistrate takes off her 12-year-old son’s clothes as they discuss the boy’s love for rugby football. The boy wants to play rugby football as his distinguished father did at Cambridge. The mother insists that rugby football was for macho men and he should play chess. The boy gets into the bathtub. He looks confused as his mother takes off her bathrobe and gingerly steps into the bathtub. The scene surprised at least a section of the audience as bare-breasted, she sits across her wide-eyed son in a bubble-bath. It would have shocked any 12-year-old.

The boy demands to suck the mother’s nipples as he tries to assert his right. It was a powerful scene and implied regularity of such encounters between the two—a troubled woman and her son. This twisted motherly love destroys the boy.

Later, in school, when he looks at several photographs of nude women, prompting him to compare their breasts with the breasts of his mother, it underlines the disturbing effect the woman was having on her only son. He declares that his mother’s breasts are better.

Detected by a teacher, they flee the school after seeing the arrival of what they identify as a police jeep. Under weird circumstances, the magistrate’s son accidentally stabs a woman to death in an abandoned building they were hiding in.

Subsequently we are told the victim was a prostitute who served both men and women from all walks of life, particularly in the abandoned building. We are also told that among the clients were many respectable professionals including the boy’s father who unashamedly admits that he had slept with the woman on so many occasions that he could not remember exactly how many.

After stabbing the prostitute the boy ends up at the National Museum where he gazes at the shapely breasts of a statue, and befriends a teenage girl who happens to be the daughter of a crooked private security guard (Saumya Liyanage). The guard takes the boy to his one-roomed apartment on a high-rise. Here the story is predictable. On the boy’s advice the security guard phones the mother who immediately visits the apartment and offers him money to look after the boy. The boy’s father is kept out of this deal.

The boy, who is obsessed with his mother, draws a picture of a woman with big breasts on the floor under the bed and sleeps on it. The security guard’s daughter goes under the bed to give him warmth. Subsequently he demands that they bathe together as he had done with his mother, a demand flatly rejected by the girl. The young brat compares the teenager’s breasts with his mother’s as he struggles to cope with his mother’s unforeseen absence.

The boy urinates on a policeman cycling on the road. The scene reminds me of Handagama’s previous internationally acclaimed work. Incidentally, Handagama and some of his colleagues like Vimukthi Jayasundera are vigorously enjoying bashing the Sri Lankan State and its armed forces.

The mother quarrels with the security guard for leaving her son alone at the flat. The guard flatly refuses her suggestion of leaving his daughter with the boy. Their quarrel ends with the woman going on the rampage inside the National Museum. The fight ends with the security guard raping her. She is furious with the man for breaking her relationship with her son but is not angry about the violation itself. She lets the audience absorb the full measure of her misery without interruption as she reveals the secrets of her family’s twisted, sinister past. She reveals a drug-like love for influence derived from what she sees as the manipulation of her husband as she shares her secret with the security guard. A stunned guard hears that the lady shared her husband with her mother and she, in fact, was his own daughter. She flees the museum to die in the hands of her son, who accidentally (again) stabs her as she rushes in to take him and hand him over to law enforcement officers.

The father reveals his inability to satisfy his wife/daughter to the servant who complaints about not being given details. Till then, he maintains a form of composure under great strain. With the revelation of his loss of virility the house of cards come tumbling down.

Several scenes set off giggles in the audience. These scenes are compatible with the seriousness of the issue. It was particularly comical to see the servant squeezing the testicles of a policeman who comes in search of the missing boy on the magistratedirective.

The lady magistrate must have decided on a tryst at the museum when the security guard admits that he allows prostitutes to operate there for a fee.

She is found by her husband with a dagger embedded in her abdomen shortly after her son flees the scene with the security guard’s daughter.

Then we are treated to another group of students entering the museum with one boy gazing at the breasts of a huge statue that was being moved into the premises. Is he another victim of a mother’s too exclusive love?

Produced by Upul Shantha Sanasgala who also produced Sulanga Enu Pinisa, A Letter of Fire is a movie not to be missed. Filmed in Kalutara and Colombo, the movie draws immense strength from Harsha Makalanda’s music.

உரையாடல்.-4 (x-group, சுதன், சேகர்)

x-group வலைத்தளத்தில் சிறுவர் ராணுவம் தொடர்பாக சுதனுக்கும் சேகருக்கும் இடம்பெற்ற உரையாடல்களே இத்தொகுப்பில் காணப்படுகின்றன.

சிறுவர் இராணுவம.

சர்வதேச ரீதியிலான சட்டத் தடை இருந்தபோதிலும் தற்சமயம் குறைந்தது 20 நாடுகளில் யுத்தத்திலும் ஆயுதம் தாங்கிய சண்டையிலும் சிறுவர்கள் இராணுவத்தினாராக நிறுத்தப்பட்டுள்ளனர். சிறுவர் உரிமைகளுக்கும், மனித உரிமைகளுக்குமான அமைப்புக்களின் கூட்டினால் வெளியிடப்பட்ட சிறுவர் இராணுவம் பற்றிய சர்வதேச அறிக்கையின் பெறுபேறே இதுவாகும்.

'சிறுவர்களை இராணுவத்தில் சேர்ப்பதில் உள்ள சட்டரீதியான தடையை நடைமுறைப்படுத்தவேண்டும' என்று இந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. சிறுவர்களை இராணுவத்தில் சேர்ப்பவர்களுக்கெதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவேண்டும் என்றும் இந்த அமைப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.

2001 ற்கும் 2004 ற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நடைபெற்ற யுத்தம் அல்லது சண்டையில் குறைந்தது இருபது நாடுகளில் சிறுவர்கள் யுத்தகளத்தில் இராணுவத்தினராக நிறுத்தப்பட்டனர். இந்த நாடுகளாவன: ஆப்கானிஸ்தான்,அங்கோலா, புறுண்டி, கொங்கொ ஜனநாயகக் குடியரசு, கொலொம்பியா, Cote d Ivoire (Ivory Coast), கென்னியா, இந்தியா, ஈராக்,இஸ்ரேல்-பாலஸ்தீனாவின் சுயாதீன எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்கள், இந்தோனேசியா, லிபேறீயா, மியன்மார்(பர்மா), பிலிப்பைன்ஸ், றஷ்சியக் குடியரசு, றுவண்டா, இலங்கை, சொமாலியா, சூடான், உகண்டா.

இவற்றில் அதிகமான இராணுவச் சிறுவர்கள் விடுதலை இயக்கங்களின் இராணுவத்தினராக அரசுகளுக்கு எதிரான போராட்டங்களுக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். ஆயினும் சிறுவர்களை யுத்தத்திற்கு அனுப்பும் அல்லது மக்களுக்கு எதிரான வன்முறைகளைப் மேற்கொள்ள தூண்டிவிடும் துணை இராணுவக் குழுக்களுக்கும் ஆயுதக்குழுக்களுக்கும் அரசுகளே உதவிவருகின்றன. சில அரசுகள் சிறுவர்களையும் இளைஞர்களையும் கட்டாயமாக சேர்ப்பதிலும் அதற்கான பிரச்சாரம் செய்வதிலும் பின்வாங்கலின்றி செயற்பட்டுவருகின்றன.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை சிறுவர்களை இராணுவத்திற் சேர்க்கும் துஸ்பிரயோகத்திற்கெதிராக மீண்டும் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆறு நாடுகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் ஐந்து ஆபிரிக்க நாடுகளாகும்.

ஆப்கானிஸ்தான், அங்கோலா, சிறெலியோன் போன்ற யுத்தம் முடிவுக்குவந்த நாடுகளில் கடந்த மூன்று வருடகாலங்களில் இராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சிறுவர்களின் தொகை 40.000 என்று ஊகிக்கப்படுகின்றது. இதேசமயம் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள்கள் Cote d Ivoire (Ivory Coast)>சுடான், மற்றும் லிபேரியா போன்ற நாடுகளில் புதிதாக இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அடிக்கடி மாறுகின்ற போராட்ட நிலைமைகளினாலும் இந்த இடங்களில் சண்டையில் கலந்திருக்கும் நிறையப் பிள்ளைகளை உதவி நிறுவனங்கள் பாதுகாப்புப் பிரச்சனைகளினால் தொடர்புகொள்ளமுடியாமல் இருப்பதுவும் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் சிறுவர்கள் பற்றிய சரியான கணக்குப் பற்றி விசாரணைகள் மேற்கொள்வதில் தடங்கல்கள் இருந்துவருகின்றன.

'சிறுவர் இராணும் இல்லாத ஒரு உலகம் சாத்தியம்தான் . முதலாவது அடி எடுத்துவைக்கப்பட்டுவிட்டது' என்றார் terre des hommes என்கின்ற ஒரு உதவி நிறுவனத்தின் பணிபுரியும் அன்டிறெயாஸ் றிஸ்ரர். ஆனால் இந்த விடயத்தில் அனேகமாக அரசியல் ரீதியான உந்துதல்(நோக்கம்) இல்லை என்கிறார்' சர்வதேசத்து அரசுகளும் இதற்கான சர்வதேச ரீதியிலான பாதுகாப்புத் தீர்மானங்களை நிறைவுசெய்வதற்கும் தாமே இவற்றினை நடைமுறைப்படுத்துவதற்கும் முன்வரவேண்டும்' என்று றிஸ்ரர் கேட்டுக்கொண்டார். இராணுவச் சிறுவர்களுக்கான ஜேர்மனியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் இவராவார். இந்தக் கூட்டமைப்பில் உலக பொதுமன்னிப்புச் சபை, யூனி செப்பின் ஜேர்மனியக் குழு, சிறுவர்களுக்கான அவசர உதவி என்கின்ற நிறுவனம், லூத உலகக் கூட்டு, மெடிக்கோ இன்ரநசனல், மிஸ்சியோ, terre des hommes, ஆபிரிக்க நாடுகளுக்கான வலைப்பின்னல் அமைப்பு, மற்றும் உலகக் கண்ணோட்டம் ஜேர்மனி ஆகிய நிறுவனங்கள் இதில் இணைந்துள்ளன.

2002 ஆண்டின் சிறுவர்உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின்; ஒப்பந்தத்தில் பிற்சேர்க்கப்பட்ட குறிப்பின்படி சிறுவர்களையும் பதினெட்டு வயதிற்குக் கீழ்ப்பட்ட இளைஞர்களையும் யுத்தத்தில் சேர்ப்பது (இராணுவத்தில் சேர்ப்பது) தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையில் இதுவரை 116 நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. 87 நாடுகள் உடன்பாடு தெரிவித்துள்ளன. கைச்சாத்திடப்பட்ட பின்னரும் அல்லது உடன்பாடளிக்கப்பட்ட பின்னரும் சில நாடுகளில் தொடர்ந்தும் சிறுவர்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டுவருகின்றனர். உதாரணமாக ஜனநாயகக் குடியரசாகிய கொங்கோ, லிபேரியா, றுவண்டா, உகண்டா போன்ற ஆபிரிக்க நாடுகளும் அப்பானிஸ்தான், பிலிப்பைன்ஸ், இலங்கை போன்ற ஆசிய நாடுகளுமாகும்.

'இந்த சர்வதேச அறிக்கை காட்டி நிற்பதாவது தற்காலத்தில் நடைபெறும் அதிகமான பாரிய போராட்டங்களில், யுத்தங்களில் சிறுவர்கள் பங்குபெறுகின்றனர் என்பதாகும்.' என்று விளக்குகின்றார் சிறுவர்களுக்கான அசர உதவி என்ற நிறுவனத்தில் பணிபுரியும் பாபறா டுனவால்ற்;. சிறுவர்கள் கடின உழைப்பிற்கும், கொள்ளை அடிப்பதற்கும், வன்முறைக்கும், பாலியற் பாலத்காரத்திற்கும், கொலை செய்வதற்கும் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அவர்கள் காயப்படுத்தலுக்கு உள்ளாகின்றனர். கொல்லப்படுகின்றனர். இந்தப் பகிரங்கமான சிறுவர்களின் உரிமைகள்; மீறல்களுக்கு எதிராக தி;ட்டவட்டமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

'இராணுவச் சிறுவர்கள் பலிக்கடாக்களாகவும், அதேவேளை குற்றச்செயல்களைச் செய்பவர்களாகவும் இருக்கின்றனர்' என்கின்றார் ஊனிசெப் பேச்சாளர் றுடி ரார்னெடென். சமாதான உடன்படிக்கைகளில் சிறுவர்களை இராணுவத்திலிருந்து நீக்குவது, அவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதுபோன்ற உதவி வேலைத்திட்டங்களை அடிப்படையாக உள்ளடக்கியிருத்தல் வேண்டும். 'இதற்காக சர்வதேசம் தழுவிய ஒருங்கிணைந்த அரசியல் அழுத்தமும், நிதி உதவியும் அவசியம்' என்கிறார் ரார்னெடென்.

இந்தக் கூட்டமைப்பானது ஜரோப்பிய ஒன்றியத்தையும் ஐ.நா. பாதுகாப்புச் சபையையும் சிறுவர்களை இராணுவத்தில் சேர்ப்பத்திலுள்ள தடையை நடைமுறைப்படுத்தும்படி கேட்டுக்கொணடுள்ளது. மேலும் சிறுவர்களை இராணுவத்தில் சேர்ப்பவர்களுக்கெதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவேண்டும் என்றும் சர்வதேச பொது மன்னிப்புச் சபையைச் சேர்ந்த சுசன பௌமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

நன்றி - உதவி.net


சேகரின் பின்னூட்டம்-1

see also this links.
1.

The Liberation Tigers of Tamil Eelam (LTTE) recruited thousands of child soldiers in Sri Lanka following a ceasefire agreement reached in 2002. Throughout the North and East, the LTTE uses intimidation and threats to pressure Tamil families to provide their sons and daughters for military service. When families refuse, the LTTE may abduct children from their homes at night or forcibly recruit them while they walk to school.
http://hrw.org/reports/2004/srilanka1104/

2.
The Karuna group has abducted hundreds of children in eastern Sri Lanka for use as child combatants. The group is led by a former commander with the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and now fights against the LTTE. Government security forces not only fail to stop the abductions, but facilitate them by allowing Karuna cadres to transport kidnapped children through checkpoints on the way to their camps.
http://www.hrw.org/reports/2007/srilanka0107/

Human rights watch இன் அறிக்கைகளை மேலே காட்டப்பட்ட தொடுப்புகளில் பார்வையிடலாம்.



சுதனின் பின்னூட்டம்-1

சிறுவர் உரிமைகளைக் காப்பதென்பது தனியே சிறுவர் ராணுவமயமாக்கப்படுவதை எதிர்ப்பதென்பதல்ல. மாறாக சிறுவர்கள் தொடர்பான அனைத்து உரிமைகளையும் அவதானிப்பதே. புலிகளினாலும் கருணாவாலும் இராணுவ தேவைக்கு பயன்படுத்தப்படும் சிறுவர்களை விட அதிகமான அளவில் இலங்கையில் சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கபடுகின்றனர். அதைத் தடுப்பதற்கான சாத்தியப்பாடுகளைக் கொண்டுள்ள சிறீலங்கா அரசாங்கம், அவற்றிற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மாறாக உல்லாசா பிரயாணிகளின் வருகையை ஊக்குவிப்பதற்காக சிறுவர் துஷ்பிரயோகங்களை கண்டும் காணாமல் அனுமதிக்கின்றது. அவ்வாறே கருணா விடயத்திலும் தனது நிலைப்பாட்டை தெளிவாகவே உணர்த்தி நிற்கின்றது. சிங்கள சிறுவர்கள் தொடர்பாகவே தனது அக்கறையைச் செலுத்தாத சிங்கள பேரினவாத அரசாங்கம் தமிழ் சிறுவர் தொடர்பாக அக்கறை செலுத்தும் என்று எதிர்பார்ப்பவர்கள் முட்டாள்களே.

ஐலன்ட் பத்திரிகையில் லக்ஸானி பெர்னான்டோ சொல்வதைப் பாருங்கள்.

//Six hundred advertisements for Sri Lankan children appeared on the internet in October 1997. It is believed that about 5,000 to 30,000 Sri Lankan boys are abused by paedophile tourists. Given the sensitive nature of the subject it is difficult to calculate exact statistics, and the above figure could very well be just the tip of the iceberg.//

//Tourism, which is Sri Lanka’s fourth largest foreign exchange earner, accounts for about eight per cent of the country’s economic growth. Thus the growth of tourism represents a boost for the economy of the country, and offers employment opportunities to the people. Apart from the obvious benefits, tourism is sometimes associated with negative socio-cultural impacts, especially where exploitation of children are concerned. This phenomenon, known as Child Sex Tourism (CST), affects almost every country in the world, and is not exclusive to Sri Lanka. CST is a global crisis, and according to UNICEF about two million children are abused in the multi billion dollar commercial sex industry that includes CST. Sri Lanka has witnessed an increase in CST over the past twenty years. //

சிறுவர் உரிமை தொடர்பாக அக்கறையை வெளிப்படுத்துபவர்களின் அரசியலையும் அவர்களது தேவைப்பாடுகளையும் புரிந்துகொள்ளுதலே, உண்மையாக சிறுவர் உரிமை பற்றி பேசுவதற்கான சூழ்நிலைகளுக்கு களம் அமைக்கும் என நினைக்கின்றேன். இது X-GROUP பொருந்தும். அதன் தேவைப்பாடுகளையும் சிறுவர் உரிமை தொடர்பான பற்றுறுதியையும் வெளிப்படுத்தும் வரை உண்மையான உரையாடலை நிகழ்த்த முடியாது என்றே நினைக்கின்றேன்.



சேகரின் பின்னூட்டம்-2
சுதனுக்கு,
சிறுவர் ராணுவம் தொடர்பான மேற்படி கட்டுரைக்கே நான் எனது பின்னூட்டத்தைப் பதிவு செய்தேன். அதுதவிர ஒட்டுமொத்த சிறுவர் உரிமை தொடர்பான விவாதங்களை வேறொரு தளத்தில் சந்திப்போம். ராணுவமயமாக்கப்பட்ட சமூகம் சிறுவர்களை தமது ராணுவத்தில் கொண்டிருப்பதென்பது சர்வ சாதாரணமான விடயம் என்றபோதிலும் கூட அதற்கப்பாலான சிறுவர் நலன் மற்றும் சிறுவர் விருப்பு சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்த வேண்டிய தேவை எமக்கு உள்ளது. சிறுவர்களின் கைகளில் பலவந்தமாகத் திணிக்கப்படும் ஆயுதங்களின் கனத்தில், சிறுவர்கள் எழுப்பிடும் ஓலம் யாராலும் இலகுவாக நிராகரிக்கப்பட முடியாதது. சிறுவர் ராணுவம் தொடர்பிலும் சிறுவர் நலன் தொடர்பிலும் சிறீலங்கா அரசைக் குற்றம் சாட்டுவதை விடுத்து, நாம் செல்வதற்கான மிக நீண்ட பாதையை பற்றி யோசித்து பார்த்தல் எமது சமூகத்தின் தேவைப்பாடாக உள்ளது. மற்றவர்களின் குற்றத்திரையில் நாம் எம்மை மறைத்துவிடுதல் என்பது எமக்கான தேவைப்பாடுகளை மறுதலிக்கும் செயலாகும். இதன் மூலம் நாம் எவ்வகையிலும் முன்னேற்றகட்டத்திற்கு எம்மையோ எமது சமூகத்தையோ நகர்த்திவிட முடியாது என்பதே உண்மையாகும். அது தொடர்பான விவாதங்கள் மூலம் எமக்கு தேவையான விடயங்களை நாம் தெளிவுபடுத்திக் கொள்ளுதலே எமக்கு உகந்தது என நான் நினைக்கின்றேன். அத்துடன்,
கீழே உள்ள சில குரல்களைக் கேளுங்கள். வன்முறையை மூலதனமாகக் கொண்டியங்கும் சமூகத்தால் எப்போதுமே உண்மையான விடுதலையச் சாத்தியப்படுத்திவிட முடியாது. சமூகம் ராணுவ ரீதியாக விடுதலையப் பெற்றுக்கொண்டாலும் சமூகத்தின் ஒவ்வொரு கூறுகளையும் விடுதலைப்பாதைக்கு இட்டுச்செல்ல மிகவும் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. கட்டாய சிறுவர் ராணுவத்தைக் கொண்டுள்ள சமூகம் விடுதலைக்கு நெடுந்தூரம் நடக்க வேண்டியுள்ளது.

"The army was a nightmare. We suffered greatly from the cruel treatment we received. We were constantly beaten, mostly for no reason at all, just to keep us in a state of terror. I still have a scar on my lip and sharp pains in my stomach from being brutally kicked by the older soldiers. The food was scarce, and they made us walk with heavy loads, much too heavy for our small and malnourished bodies. They forced me to learn how to fight the enemy, in a war that I didn't understand why was being fought."
- Emilio, recruited by the Guatemalan army at age 14-


"One boy tried to escape [from the rebels], but he was caught... His hands were tied, and then they made us, the other new captives, kill him with a stick. I felt sick. I knew this boy from before.We were from the same village. I refused to kill him and they told me they would shoot me. They pointed a gun at me, so I had to do it. The boy was asking me, "Why are you doing this?" I said I had no choice. After we killed him, they made us smear his blood on our arms... They said we had to do this so we would not fear death and so we would not try to escape. . . I still dream about the boy from my village who I killed. I see him in my dreams, and he is talking to me and saying I killed him for nothing, and I am crying."
- Susan, 16, abducted by the Lord's Resistance Army in Uganda-


"They gave me pills that made me crazy. When the craziness got in my head, I beat people on their heads and hurt them until they bled. When the craziness got out of my head I felt guilty. If I remembered the person I went to them and apologized. If they did not accept my apology, I felt bad."
- a 13-year old former child soldier from Liberia-


"I was in the front lines the whole time I was with the [opposition force]. I used to be assigned to plant mines in areas the enemy passed through. They used us for reconnaissance and other things like that because if you're a child the enemy doesn't notice you much; nor do the villagers."
- former child soldier from Burma/Myanmar-


"They beat all the people there, old and young, they killed them all, nearly 10 people... like dogs they killed them... I didn't kill anyone, but I saw them killing... the children who were with them killed too... with weapons... they made us drink the blood of people, we took blood from the dead into a bowl and they made us drink... then when they killed the people they made us eat their liver, their heart, which they took out and sliced and fried... And they made us little one eat."
- Peruvian woman, recruited by the Shining Path at age 11-


இவ்வகைக் குரல்களைக் கொண்டுள்ள சமூகம் ராணுவ ரீதியான விடுதலையை அடந்தாலும் சமூகவிடுதலையை அடைவதற்கான அதன் பாதை மிகவும் கடினமானது இவற்றை மனத்தில் கொண்டே எமது உரையாடலை வடிவமைத்துக் கொள்ளல் வேண்டும்.
தனியே ஒற்றைப் பரிணாமத்தில் அல்ல.



சுதனின் பின்னூட்டம்-2

சேகர்,
நீங்கள் சொல்வதின் பாலுள்ள 'உண்மை' எனக்கு விளங்காததல்ல. மேற்கு கட்டமைக்கும் கருத்தியலுடன் மூன்றாமுலக நாடுகளின் சிறுவர்களை ஒப்பிட்டு பார்த்தல் என்பது சிறுவர் தொடர்பாக ஆக்கபூர்வமான கருத்தியலை கட்டமைக்க முனையும் எமக்கு தடைக்கல்லாக இருக்கும் என நினைக்கின்றேன். எமது சமூக வாழ்வோட்டத்தை விளங்கி அதன்மூலம் எமது சிறுவர்களுக்கு நாம் கட்டமைக்கும் கருத்தியலே சரியாக இருக்கும் என நினைக்கின்றேன். எமது சமுக வாழ்வியல் கூறுகள் உள்வாங்கப்படாத கருத்தியல் கட்டுமானங்கள் எம்மை எதிர்நிலைப்படுத்துவனவாகவே அமைந்துவிடும். அவ்வகையில் சிறுவர் ராணுவம் என்பதன் கருத்துப்போக்கையும் ஆராய்வதே முக்கியமானதாகும். வன்முறை சமூகத்தின் கூறுகளாகி அல்லல்படும் சிறுவர்களின் முதன்மைத் தெரிவாக வன்முறையே இருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. மற்றும் பல்வேறு காரணங்களால் அநாதைகளாக்கப்பட்ட சிறுவர்கள், இழப்பின் வேதனையில் தம்மைப் போராளிக்குழுக்களுடன் இணைத்துக் கொள்ளுதலின் உளவியல் என்பது ஆராயப்பட வேண்டியது. அவர்களின் முதன்மைத் தெரிவாக அது அமைந்துவிடுதல் என்பது சாதாரணமானதே. அதில் அவர்கள் அடையும் தற்காலிக ஆறுதல், அவர்களை தாம் சமூகத்தின் பிரதிநிதி என சிந்திக்க தூண்டுகின்றது. இணைவின் மூலம் தமது இழப்பை அவர்கள் மீளப்பெற்றுக்கொள்கின்றார்கள். இதில் நாம் பார்க்கவேண்டிய விடயம் என்னவென்றால் ராணுவக்குழுக்கள் சிறுவர்களைப் பயன்படுத்தும் முறைமை மற்றும் ராணுவக்குழுக்களிடம் சிறுவர் உரிமையின் பாலுள்ள கரிசனை. அதைவிடுத்து தனியே சிறுவர் ராணுவம் பற்றி நாம் பேசுதல் என்பது வீணானதே.
மற்றும்,
கட்டாயப்படுத்தலுடன் ராணுவத்திலும், போராளிக்குழுக்களிலும் இணைக்கப்படும் சிறுவர் தொடர்பாக நான் இங்கு எதையும் கூற வரவில்லை. ஏனெனில், அது மறுகருத்துக்கு இடமின்றி வன்மையாக கண்டிக்கபட வேண்டியதே. அதுவும் தாய், தந்தையரிடமிருந்து பலவந்தமாக பறிக்கப்பட்டு ராணுவப்பயிற்சி அளிக்கப்படும் சிறுவர்கள் தொடர்பாக எல்லா மட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுதல் முக்கியமானது. அதற்கு அப்பால், வாழ்வில் விரக்திக்கு உள்ளான நிலையில் விரும்பி தாமாகவே போராளிக்குழுக்களில் இணையும் சிறுவர் தொடர்பாக எமது சமூகத்தளத்திலான ஆய்வு முக்கியமானது. அவர்கள் மேற்கொள்ளும் தெரிவுகான காரணங்கள் முக்கியமானது. போராளிக்குழுக்களிடையே காணப்படும் சிறுவர் உரிமை தொடர்பான கரிசனை முக்கியமானது. மற்றும் கல்வியைப் பெற்றுக்கொள்ளும் உரிமையை சிறுவர்களுக்கு வழங்குதல் என்பது முக்கியமானது.
இனி,
புலிகள், இலங்கை அரசாங்கம், சிறுவர் தொடர்பான விடயங்களுக்கு வருவோமேயானால், இலங்கைத்தீவின் சமூக நிலைவரத்தை வைத்து சிறுவர் உரிமை தொடர்பாக ஆராய்தலே இங்கு கவனிக்க வேண்டியது. ஒட்டுமொத்த இலங்கைதீவிலும் தமது உரிமை மறுக்கப்படும் சிறுவர்களுடன் ஒப்பிடுகையில், சற்று அதிகமான முறையிலேயே வடக்கு கிழக்கு பகுதியில் சிறுவர் உரிமை மீறப்படுகின்றது. தென்னிலங்கையுடன் ஒப்பிடும் அதிகரிக்கும் மாற்றமுடையது அல்ல வடக்கு கிழக்கு பகுதியின் நிலைமை. இங்கு வடக்கு கிழக்கின் அதிகரித்த நிலைமையை எடுத்து பார்த்தால் கூட போர் ஏற்படுத்தும் மாற்றத்தின் மூலமே சிறுவர் உரிமையின் 'அளவில்' மாற்றம் எனபது ஏற்படுகின்றது. ஒரு நாட்டின் சமூக அபிவிருத்திச் சுட்டியின் அளவுடன் அந்நாட்டின் சிறுவர் நலன் சர்ந்த விடயங்களும் மாறுபடுகின்றன. சிறுவர் உரிமை தொடர்பாக சிறீலங்கா அரசாங்கத்திடம் இருக்கும் கரிசனை உலகமே அறிந்தது. வீழ்ந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தை கட்டிக்காப்பதற்காக, உல்லாச பிரயாணிகளின் வருகையை அதிகரிக்கும் தேவை சிறீலங்கா அரசாங்கத்துக்கு உள்ளது. அதன் மூலமே அது பெருமளவான வெளிநாட்டுச் செலவாணியைப் பெற்றுக் கொள்கின்றது. அதற்கான தனது நாட்டில் மறைமுகமான சிறுவர் பாலியலை ஊக்குவிக்கின்றது. சிறுவர் தொடர்பான கரிசனையையும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் அது முன்னெடுப்பதில்லை. அதன் ஒரு விளைவே சிறுவர் ராணுவம் என்னும் பிரச்சனை. ஆனால், சிறுவர் ராணுவம் தொடர்பில் பரந்தளவிலான பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றது புலிகளுக்கு எதிராக. அத்ன இதய சுத்தியும், சமூக அபிவிருத்திச் சுட்டியும் இதற்கு சமாந்தரமாக வைத்து நோக்கப்படவேண்டும் என்பதே எனது கருத்து.
சிறுவர் உரிமை எனும் கோசத்தை முன்வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டத்திலிருந்து மாறுபட்டு சிறுவர் உரிமை தொடபாக பேசவேண்டும் என்பதே எனது விருப்பம. இது தொடர்பான விரிவான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். அதில் எனது பங்களிப்பு நிச்சயமாக இருக்கும்.
அத்துடன்,
சிறீலங்காவின் சமூகச்சுட்டி, சிறுவர் உரிமை தொடர்பாக செலுத்தும் தாக்கம் பற்றிக் கூறியிருந்தேன். சிறுவர் தொடர்பாக அதீத கரிசனை எடுத்துக்கொள்ளும் ஒரு நாட்டில் உள்ள சிறுவர் ராணுவம் மற்றும் இலங்கை போன்ற சிறுவர்களை விபச்சாரத்துக்கு பயன்படுத்தும் ஒரு நாட்டில் உள்ள சிறுவர் ராணுவம் தொடர்பாக வெவ்வேறுவகையான பார்வையை கொண்டிருக்கவேண்டிய அவசியம் பற்றி நான் சொல்லத் தேவை இல்லை. இவ்வகையான வாழ்நிலைச் சூழலுக்குள் உள்ள சிறுவர்களுக்கு சிறுவர் ராணுவம் என்பது இலகுவான தெரிவாகிவிடும் அபாயம் சாதாரணமானதே.

UNICEF statistics: Sri Lanka has 40,000 child prostitutes
-Quoting UNICEF and ILO, NCPA reveals shocking statistics

By Gagani Weerakoon

The National Child Protection Authority revealed shocking statistics, quoting the UNICEF and ILO, that Sri Lanka has nearly 40,000 child prostitutes in the country while 5,000 to 30,000 Sri Lankan boys are used by Western paedophile sex tourists, as the world celebrates day against child labour today.

Nearly 10,000 to 12,000 children from rural areas are trafficked and prostituted to paedophiles by organised crime groups, according to the statistics of UNICEF and the ILO.

Though exact numbers are not available with any of the local organisations which function for the protection of child rights, ILO indicates that Sri Lanka has more than 100,000 children working as domestic aids.

The government celebrating the Day on June 7, five days in advance, admitted that no nationwide surveys on child labour had been done in Sri Lanka since 1999 and said some qualitative research points to the fact that there are children trapped in hazardous forms of child labour such as child domestic labour, the fireworks industry, in the informal sector construction industry, motor garages, small business establishments, shops, etc.

“Parliament has passed legislation to give effect to immediately eliminate the worst forms of child labour in keeping with commitments made to implement ILO Convention 182 on the elimination of the worst forms of child labour,” it said in the message issued on June 7 marking the World Day Against Child Labour.

Chairperson of the National Child Protection Authority (NCPA), Padmini Wetthawa, said the plight of Sri Lankan children was in a dire situation as the number of children being trafficked and being forcibly recruited as child soldiers to the LTTE was rising rapidly despite having various awareness programmes.

“This year which was marked as the Children’s Year by President Mahinda Rajapaksa, both Governmental and Non Governmental Organisations should genuinely pay their attention to address the child soldiers’ issue when the whole world is concentrating on combating child labour,” she noted.

“Children are often employed and exploited because, compared to adults, they are more vulnerable, cheaper to hire and are less likely to demand higher wages or better working conditions. Some employers falsely argue that children are particularly suited to certain types of work because of their small size and “nimble fingers”,” said Ms. Wetthawa.

The use of children for alcohol and drug trafficking is a serious problem while the authorities are yet to crack the countrywide network, which deals with child trafficking and prostitution.

“No one actually knows the correct number of child prostitutes and children involved in trafficking,” said NCPA official adding that ground research was yet to be done on these subjects.

The NCPA records a reduction in child labour of 10 to 15 fold following the intensified action by authorities and a wide media campaign against domestic child labour.

“Using children as domestic servants has become a taboo today following the media awareness campaign,” he added.

Accordingly, an unofficial survey conducted by the ILO, showed that nearly 35,000 children were now employed mainly at shops and small factories.

The situation has reached a climax today where the world identifies Sri Lanka as a paedophiles’ paradise. Although the government estimates that there are 2,000 active child prostitutes in the country, private groups claim the number is as high as 40,000.

Most of these children, 80% of whom are boys, are sexually exploited in tourist centres and are trafficked around the country to serve the tourists.

According to the NCPA, many steps such as improvement of public awareness, poverty elimination among sensitive social groups, strict implementation of legal regulations and training of officials and police officers are essential to eliminate sexual exploitation of children.

‘The End of Child Labour: Together We Can Make It’, the International Labour Organisation made it the theme of this year as the World Day Against Child Labour, 2006 falls today, as a part of the International Programme on the Elimination of Child Labour (IPEC) despite having more than 200 million child labourers all over the world.

The World Day against Child Labour was established by the International Labour Organisation (ILO) in 2002 to pay more attention to global and local efforts against child labour and highlight the global movement to eliminate the practice, particularly its worst forms. According to the latest report the actual number of child labourers worldwide fell by 11 per cent between 2000 and 2004, from 246 million to 218 million. The report attributed the reduction in child labour to increased political will and awareness and concrete action, particularly in the field of poverty reduction and mass education that has led to a “worldwide movement against child labour”.

Sri Lanka has ratified all eight human rights conventions of the ILO, including the two-core conventions on Child Labour.

The main aim of Convention 182 is to eliminate the worst forms of child labour. It stresses that immediate action is needed to tackle the worst exploitation of children, and that measures taken by the authorities should start as soon as the government is able to follow the ratification.

some of the circumstances faced by child labourers are full time work at a very early age, dangerous workplaces, excessive working hours, subjection to psychological, verbal, physical and sexual abuse, obliged to work by circumstances or individuals, limited or no pay, work and life on the streets in bad conditions and inability to escape from the poverty cycle with no access to education.

The ILO says that most children work because their families are poor and their labour is necessary for their survival. Discrimination on grounds including gender, race or religion also plays its part in why some children work.

Ethnic conflicts too have left many children displaced and abandoned. They are easy prey for ‘job placement agents’ who pick them up on the streets in villages or even from within the refugee camps, and then sell them for employment, most commonly for domestic work.

As well as being a result of poverty, child labour also perpetuates poverty. Many working children do not have the opportunity to go to school and often grow up to be unskilled adults trapped in poorly paid jobs, and in turn will look to their own children to supplement the family’s income, the ILO says. [Source: DailyMirror]

உரையாடல்.-3 (பெயரிலி, அமீபா)

அலைஞனின் அலைகள் தளத்தில் ரயாகரன் பற்றிய பதிவொன்றில் நடந்த உரையாடல்.


அமீபாவின் பின்னூட்டம்-1

பெயரிலி,
இரயாகரனின் "தமிழ்மணத்தில் உள்ள மக்களின் எதிரிகள் யார்?" போட்ட பதிவு, இராயகரன் மேலும் தனது வரட்டு பார்வையில் இறுக்கமடைய போவதையே காட்டுகின்றது. இராயகரன் தனது தளத்திலும் தனக்கான பார்வையிலும் நின்று மக்களை நேசிக்கும் முறை மிகத்தீவிரமானது. அவ்வகையான நேசிப்புக்கள் தங்கள் விடாப்பிடியான கொள்கைகளில் மேலும் மேலும் இறுக்கமடைதல் யாருக்கும் எதுவிதமான பயன்களையும் தரப்போவதில்லை. இறுக்கத்தை தளர்த்துவதற்கு உங்களால் ஏதாவது செய்ய முடிந்தால் அதுவே பெரிய விடயம். அவர்கள் எப்போதும் மக்களின் எதிரியாக இருக்கப்போவதில்லை. யாருக்கும் விலை போய் தங்களைத் தாழ்த்திக் கொள்ள போவதில்லை. எம்முன் இருக்கும் ஒரே தெரிவு அவர்களின் பார்வையை தளர செய்வது தான். அதைத்தான் ரயாகரன் நேசிக்கும் மக்கள் விரும்புவார்கள்.

*புலிகள் விட்ட/விட்டு கொண்டிருக்கும் தவறுகள்.
புலிகள் மாற்று கருத்து கொண்டோருக்கான தளத்தை அவர்களுக்கு வழங்கியிருக்க வேண்டும். ரயாகரன் போன்ற மக்கள் நேச சக்திகளை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தியதே அவர்கள் செய்த மாபெரும் தவறு. மாற்று கருத்து எனும் பெயரில் மககள் நலனை விற்பவர்களையும் உண்மையில் ரயாகரன் போன்ற மக்கள் நேச சக்திகளையும் வேறுபிரித்து அறியும் தெரிவை மக்களிடம் விட்டிருக்க வேண்டும். மக்களை அவ்வாறான தளத்துக்கு இட்டுச் சென்றிருக்க வேண்டும். அப்படியான நிலைமை ஒன்று சாத்தியப்பட்டிருந்தால் போராட்டம் வித்தியாசமான பரிமாணம் ஒன்றை எடுத்திருக்கும். ரயாகரனும் இப்படி இறுகிப் போயிருக்க மாட்டார். சமூக யதார்த்தமும் யுத்தமும் வலியும் அவரை தனது மக்களை விட்டு பிரித்திருக்காது. அவரும் பிரிந்திருக்க போவதில்லை.
புலிகளின் பார்வையில் இருந்து பார்த்தால், மக்கள் மாற்றுக் கருத்துக்களை விளங்கிக் கொள்ள முடியாதவர்கள். எனவே அதற்கான தளத்தை தாங்கள் வழங்கும் போது அதை பிழையான வழியில் பயன்படுத்திக் கொள்பவர்களால், தங்களது போரட்டத்திற்குப் பின்னடைவு வரும் என்று கருதியிருக்கலாம். அந்த நேரத்தில் அப்பிடி கருதியிருந்தால் கூட பரவாயில்லை. எப்பவுமே அப்படி கருதிக்கொண்டிருப்பது தான் பிழை. மக்களை அவ்விடயமாகத் தயார்படுத்தியிருக்க வேண்டும். அவர்கள் அதையும் செய்யவில்லை. சமாதான காலத்தில் கூட அதற்கான தயார்படுத்தல்களை செய்திருக்கலாம். யாழ் பலகலைக்கழக மாணவர்களை இராணுவத்திற்குக் கல்லெறியவும் தேர்தல் வரும் போது அதற்கான ஆயத்தங்கள் செய்யவும் பயன்படுத்தினார்களே தவிர மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளுக்காகவோ அல்லது போராட்டம் ஏன் செய்யப்படுகின்றது என்பது ரீதியான கருத்தியல் தளம் ஒன்றை மக்கள் மீது கட்டியமைக்கவோ பயன்படுதத்வில்லை (அதற்கான வாய்ப்புக்கள் இருந்தும் கூட) என்பது தான் வேதனையானது.

* ரயாகரன் விடும் தவறுகள்.
மக்களிடமிருந்து அந்நியப்பட்ட நிலையில், தனக்கொரு கருத்தியலை கட்டமைத்து அதன் சாதக பாதக நிலைமைகளை பரீட்சித்துப் பார்க்காமல் அதன் 'உண்மையை' திரும்ப திரும்ப ஒரே தொனியில் சொல்லிக் கொண்டிருப்பதென்பது எவ்வகையிலும் அவர் நேசிக்கும் மக்களை வாழ வைக்க போவதில்லை. அதை அவரும் விளங்கிக் கொள்ளப் போவதில்லை என அவரை நிராகரிக்கவும் முடியாது. ஏனெனில் அவர் மக்கள் நேசசக்தி. அவர் சளைக்காமல் எங்களுக்கு புரியவைக்க முயற்சிப்பது போல நாமும் அவருக்கு எங்களுக்கு தெரிந்ததை சொல்லிக்கொண்டுதான் இருப்போம். மற்றும், அவரது புலியெதிர்ப்புவாதத்தின்படி பார்த்தால் அவர் பக்கம் நிக்க போவது அவர் விரும்பும் மக்கள் அல்ல.அவர் பக்கம் நிக்கும் சக்திகள் கருணா, இனவாதம் பேசுவோர் மற்றும் அவர் வெறுக்கும் ஏகாதிபத்தியம் சார்ந்தவர்களே. இவர்களுடன் எப்போதுமே அவர் ஒன்றுபட முடியாதவர். அப்படியாயின் அவருடன் நிப்பவர்கள் யார்? அவர் கட்டமைக்கும் விரோதம் மோசமானது. மீண்டும் புஷ் சொன்னது தான் ஞாபகம் வருகிறது.

ரயாகரன்.
நீங்கள் சுட்டிக்காட்டும் எதிரிகள் பெரும்பாலானோர் உங்கள் மக்களே. நீங்கள் நேசிக்கும் மக்களே. அவர்களை உங்கள் எதிரி என நீங்கள் கட்டமைப்பது எவ்வளவு மோசமானது. ரயாகரன், இன்று இளஞர்களாக இருப்பவர்களுக்கு ஒரே ஒரு இயக்கத்தை மட்டுமே தெரியும். அது தான் புலிகள். அவர்கள் புலிகள் மீதான விமர்சனக்கருத்தைக் கொண்டிருந்தாலும் புலிகளால் மட்டுமே ஏதோவொரு தீர்வைத் தர முடியும் என நம்புகிறார்கள். உங்களது கடைசிப் பதிவு மிகவும் மோசமானது. உங்களை நீங்களே ஒருவிதமான பாசிச மனநிலைக்கு கொண்டு செல்கின்றீர்கள். கருத்தியல் மீதான அதீத பற்று அடிப்படவாத மனநிலையை வளர்த்துச் செல்லும். அதனால் வன்முறையை மட்டுமே சாத்தியமாக்க முடியும். விடுதலையை அல்ல. உலகம் எப்போதுமே அடிப்படைவாத மனநிலைகளுக்குள்ளேயே தன்னைத் திணித்து பல கோடிப்பேர்களைக் கொன்றொழித்துவிட்டது. இயங்கியல் வழி சிந்திப்பவர்களால் எப்போதுமே அடிப்படைவாத மனநிலையில் இருந்து சிந்திக்க முடியாது. சிந்திக்க கூடாது. அது எவகையிலும் ஆரோக்கியமான சமுதாயம் ஒன்றை உருவாக்கிவிட போவதில்லை. எல்லோரையும் இருவிதமான வகைமாதிரிக்குள் அடக்க பார்க்கின்றீர்கள். அது எவ்வளவு கொடுமை தெரியுமா ரயாகரன்?

//..மனித குலத்தை அழிக்கின்ற, தமிழ் மணத்தில் இயங்குகின்ற ஏகாதிபத்தியம், பார்ப்பனியம், புலியிசத்துக்கு, எமது எதிர்ப்பு சக்தி மீது சுதந்திரம் வழங்கினால் நாம் அழிக்கப்பட்டு விடுவோம்...//
நீங்கள் நிராகரிக்கும் புலிகளது பார்வைக்கும் உங்களது பார்வைக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்லுங்கள்? இவ்வகையான பார்வைகளின் காலம் முடிந்துவிட்டது ரயா..

சீறீ ரங்கனுக்கு நான் பெயரிலியின் பதிவிலே கடைசியாக எழுதிய பின்னூட்டத்தை பாருங்கள். சிறீ அண்ணன் அதற்கு பதிலளிக்கவில்லை. பொப்பெர் பற்றிய விவாதத்தில் கூட அவர் என்னை உடனடியாக பொப்பெரின் விசுவாசியாக, மார்க்சீயத்தின் எதிரியாக முத்திரை குத்த பார்க்கின்றார். அது தவறென அவர் விளங்கிக்கொள்ளவில்லை. அவரின் நிராகரிப்பு பொப்பெரின் சாதக அம்சங்களை எழுதவைத்தது. முன்முடிவுகளுடன் அணுகும் அவரது தன்மை ஒருவித கருத்தியல் மறுப்பு சார்ந்தது தான். அதுகூட பாசிசம் தான். அது அவருக்கு விளங்கினாலும் அவர் ஒத்துக்கொள்ள மாட்டார் என எனக்கு புரிகின்றது. ஏனெனில் நிராகரிப்பின் தளம் தான் அவரது இருப்பு. அவர் தனது இருப்பை இழக்கவிரும்ப போவதில்லை. அம்மனநிலையில் இருந்து தான் பாசிசம் பிறக்கின்றது. பாசிசம் வன்முறையினூடு மட்டுமே தன்னை தகவமைத்துக்கொள்கின்றது.



பெயரிலியின் பின்னூட்டம்

அமீபா,
நீங்கள் சொல்லியிருக்கும் பெரும்பாலான புலி-இரயாகரன் கருத்துகளோடு் ஒத்துக்கொள்ளமுடிகிறது. தெளிவாகவும் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், இரயாகரனைப் புலியெதிர்ப்புக்கும்பலிலே ஒருவர் எனத் தட்டையாகச் சொல்லமுடியாது. நீங்கள் சொல்லியபடி அவர் அவருடைய உண்மையை, நடைமுறைக்குச் சரிவராத வகையிலே பேசிக்கொண்டிருப்பதன் ஒரு பகுதியே அவரின் புலிகள் மீதான எதிர்ப்பு. அதே வேகத்திலேயே புலியெதிர்ப்புக்கும்பலையும் சாடுவார். வரட்டுத்தனமான - ஆனால், அதே நேரத்தில், எப்பக்கத்துக்கும் வளைந்தாடாத - ஆளாகத்தான் அவரை வாசிக்கும் எவருக்கும் புரியும். அதனால், அவரை வெறுமனே புலியெதிர்ப்பாளராக மட்டும் நிறுத்தமுடியாது.

அவருடைய கருத்தின் காலம், களம் உணராத்தன்மையைப் பார்த்துத் திகைத்துபோனது, 'உயிர்நிழல்' கலைச்செல்வன் இறந்தபோது, இரயாகரன் எழுதிய கட்டுரையைப் பார்த்து. ஒரு விதத்திலே பார்க்கையிலே அவருக்குத் தன் தத்துவம், கருத்துதான் முக்கியமென்றுபட்டாலும், மறுபக்கத்திலே மனிதத்தன்மையே அற்றதாகத் தோன்றியது.

பிகு:
"இரயாகரன் ஜெஜெ (ஜெயலலிதா அல்ல; ஜெமினி-ஜெயதேவன்) கும்பலைச் சேர்ந்தவர் அல்ல" என்று எந்த அநாநியையும் இரட்டைக்கிள/ழவிப்பின்னூட்டம் போடவேண்டாமென்றும் இத்தாலே கேட்டுக்கொள்கிறேன் ;-)



அமீபாவின் பின்னூட்டம்-2

அவசர அனானிக்கு,
//..."அவரது புலியெதிர்ப்புவாதத்தின்படி பார்த்தால் அவர் பக்கம் நிக்க போவது அவர் விரும்பும் மக்கள் அல்ல.அவர் பக்கம் நிக்கும் சக்திகள் கருணா, இனவாதம் பேசுவோர் மற்றும் அவர் வெறுக்கும் ஏகாதிபத்தியம் சார்ந்தவர்களே."...//
அமீபா.. இரயாகரன்..பக்கம் அவர்கள் எப்படி நிற்பார்கள்???உங்களது புரிதல் அவ்வளவுதானா??அவரது இணயத்தளம் சென்று அவரது முன்னய கட்டுரைகளை வாசியுங்கள். தயவு செய்து விளக்கம் தந்து விவாதத்தை நல்லமுறையில் தொடரவும்..//

அவசர அனானி,
எனது பதிவை முழுமையாகப் படியுங்கள். நீங்கள் மேற்கோள் காட்டியிருக்கும் வசனத்துக்கு கீழே உள்ள வசனத்தை படித்து பாருங்கள்.

//அவரது புலியெதிர்ப்புவாதத்தின்படி பார்த்தால் அவர் பக்கம் நிக்க போவது அவர் விரும்பும் மக்கள் அல்ல.அவர் பக்கம் நிக்கும் சக்திகள் கருணா, இனவாதம் பேசுவோர் மற்றும் அவர் வெறுக்கும் ஏகாதிபத்தியம் சார்ந்தவர்களே. இவர்களுடன் எப்போதுமே அவர் ஒன்றுபட முடியாதவர். அப்படியாயின் அவருடன் நிப்பவர்கள் யார்?//

அவருடன் நிக்க போவது அவர் மட்டுமே என சொல்ல வந்தேன். ஒடுக்கப்படும் சக்திகளை ஒன்றுபடக் கோரும் அவரால், எவருடனும் தன்னை அடையளப்படுத்த முடியாது. திரட்சியைச் சாத்தியமாகிவிட முடியாது. அவர் தன் கொள்கைக்கு, தனக்கே முரணாக இருந்துவருகிறார். அதுதான் முரண்நகை. அதற்காக, அவரது மக்கள் மீதான நேசத்தை நிராகரிக்க முடியாது. புரியவைக்க தான் முடியும். சாதாரண வழ்வில் இருந்தே இதற்கான உதாரணங்களைக் காட்ட முடியும். இன்னொருவர் தம்மீது காட்டும் அதீத நேசத்தால் தமது சுயத்தை, சுதந்திரத்தை இழந்து வாழும் பலரைக் கண்டிருக்கிறேன். உண்மையான நேசம் என்பது இன்னொருவரது சுயத்தை, சுதந்திரத்தை அனுமதிப்பது. அதற்கு அப்பாலான அதீதநேசங்கள் ஒருவிதமான அடக்குமுறையை பிரயோகிப்பவையாகவே கண்டு கொள்ளப்படும். அந்நிலை புரிந்து கொள்ளப்படாதவிடத்து அது அடக்குமுறையாகவே அடையாளப்படுத்தப்படும்.

இரண்டாவது அனானிக்கு,
// ரயாகரன் விடும் தவறுகள். மக்களிடமிருந்து அந்நியப்பட்ட நிலையில், தனக்கொரு கருத்தியலை கட்டமைத்து அதன் சாதக பாதக நிலைமைகளை பரீட்சித்துப் பார்க்காமல் அதன் 'உண்மையை' திரும்ப திரும்ப ஒரே தொனியில் சொல்லிக் கொண்டிருப்பதென்பது எவ்வகையிலும் அவர் நேசிக்கும் மக்களை வாழ வைக்க போவதில்லை//

இதை இன்னமும்தெளிவாக சொல்வதென்றால், அவர் தனக்கான செயற்பாட்டு தளத்தில் இருந்து தனது கருத்தியலை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும். அவரது செயற்பாடு அற்ற கருத்தியலே அவரை மக்களிடம் இருந்து தூரத்தே இழுத்து செல்கின்றது.

பெயரிலி,
//...இரயாகரனைப் புலியெதிர்ப்புக்கும்பலிலே ஒருவர் எனத் தட்டையாகச் சொல்லமுடியாது. நீங்கள் சொல்லியபடி அவர் அவருடைய உண்மையை, நடைமுறைக்குச் சரிவராத வகையிலே பேசிக்கொண்டிருப்பதன் ஒரு பகுதியே அவரின் புலிகள் மீதான எதிர்ப்பு. அதே வேகத்திலேயே புலியெதிர்ப்புக்கும்பலையும் சாடுவார். வரட்டுத்தனமான - ஆனால், அதே நேரத்தில், எப்பக்கத்துக்கும் வளைந்தாடாத - ஆளாகத்தான் அவரை வாசிக்கும் எவருக்கும் புரியும். அதனால், அவரை வெறுமனே புலியெதிர்ப்பாளராக மட்டும் நிறுத்தமுடியாது...//

இராயகரனது சமன்பாடு அவரை புலியை எதிர்க்கும்படி சொல்கின்றது. அதன்படியே அதை அவர் எதிர்க்கின்றார். அவ்வாறே அவரது சமன்பாடு புலியெதிர்ப்புகும்பலை எதிர்க்கும்படி சொல்கின்றது. அதன்படியே அதையும் எதிர்க்கின்றார். இதில் பிரச்சனை என்னவென்றால் அவரது சமன்பாடும் அவர் அச்சமன்பாட்டை நம்பும் விதமும் தான். அச்சமன்பாடு மட்டுமே மக்களை காக்கும் என நம்புகின்றார். ஒருசமன்பாடே வெவ்வேறு சூழ்நிலைகளுக்குள் வாழும் வெவ்வேறு கலாச்சார மக்களுக்கெல்லாம் எல்லா காலங்களிலும் ஒரேவிதமான தீர்வை தரும் என்று 'உண்மையாகவே' நம்புகின்றார். அங்கேதான் பிழை விடுகின்றார். எவ்வாறு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அல்லாவுக்கும் குர்ரானுக்கும் தங்கள் விசுவாசத்தை காடுகின்றார்களோ, இந்து அடிப்படைவாதிகள் மததுக்காக, அப்பாவி இஸ்லாமியர்களை உயிரோடு கொளுத்துகிறார்களோ, ஹிட்லர் எதற்காக யூதர்களை கொன்று குவித்தாரோ, அவ்வாறே வேறொரு தளத்தில் அதற்கு சமாந்தரமான மனவுணர்வுடன் தனது சமன்பாட்டை பூஜிக்கின்றார். செயற்பாட்டு தளம் சமன்பாடுகளை தனது முன்னோக்கிய நகர்வுக்கு மட்டுமே பயன்படுத்தும். சமன்பாட்டுடன் தேங்கிப்போகாது. இரசாயனவியல்படி சொல்வதென்றால் ரயாகரன் ஒரு இலட்சியவாயு.

உரையாடல-2 (பெயரிலி, அமீபா, சிறீரங்கன்.)

அலைஞனின் அலைகள் எனும் தளத்தில் பெயரிலியால் எழுதப்பட்ட பதிவிற்கான அமீபாவின் பின்னூட்டமும் அதனூடாக சிறீரங்கனுடன் தொடர்ந்த உரையாடலும்.



பரந்த-அபத்தலியல்வாதம் (Pan-Absurdism) & பரந்த அபத்தக்கவிதை (Pan-Absurd Poetry): ஓர் அறிமுகம். - பெயரிலி.

அதிர்ஷ் டமும் கஷ் டமும் தனி யே வரா து என்ப து உண் மை. நமக் குச் சுடச் சுடப் பதிவு போட, நேரம் கி டைப் ப தில்லை; சுட்டுப் போட மனசு கிடைப் பதில் லை. ஆனால், பதிவு போடா மலிருக் கவும் கவுண் டர் கல்சர் டவு சர் வயப் பட்ட மனம் விடுவ தில்லை. இந்த நேரத் திலேயே மெய் யான பக்தர் களைக் காக்கப் பஹ வான் மனித உரு விலே அகிலத் திலும் இணையத் திலும் அவதாரம் எடுக் கின்றான் என் பது செயின் ஈ மெயில் களை ஏழு பேருக் கு அனுப் பா மலே உண் மையா கிறது.

எனக் காக ஒரு கோ னார் மொழி பெயர்ப் புப் பால் கறக்க தானே முன் வந்திருக் கிறார். அணிந் துரை, பணிந் துரை, கடிந் துரை, குரை எல்லா வற்றுக் கும் தாம் உபய காரராக நான் நீ என்று போட்டி. இது எழுத விஷய மில்லாத வனுக்கு முதல் அதிர்ஷ் டம்.

தஞ்சா வூரின் குக் கிராமத் திலும் து பாய் ஆப்பக் கடை யிலும் பங் களூர் பீர் பாரி லும் கொரியா வின் சக் கூரா மரத்துக் குக் கீழும் என் பெயர் ப்பு கள் வாசிக் கப் பட்டு விவாதிக் கப் படுவது சிவாஜி மேக் கப் உரு மாற்ற மெற்றா மோர் போஸிஸ் போல டிஜிட் டல் ட்ரீமாக விரி கிற து. ராஜ வேர் வை பூத்து கந் தக ரோ ஜா சுகந் தம் கரை ந்து வீசு கிற து. அலை யாக் கட லின் நுரை நுழைந் து அளைந் து கிளை த்த நீண்ட விரல் கூர்ந்த கூ னல் ஆதித் தாய் வந்து மொழி வேரிலே பூனைக் கடி கடித்து மெல் லிய சுகந் தத்தை நுகர்ந்து நகர் வதைப் பார்த் தாயா, டியூ ரோடா செல் லம்மா? ஓர் உடை ந்த யுகத் தின் ஈரா னிய சினி மா சேர் க்கிள் சிக ரெட் நாய கியாய் நீ யும் இங்கர் மேன் நா யக சது ரங்க மர ணமாய் நா னும் கறை படா த தென்ன மெரிக்க மழ லை ம ழைக் காடுக ளிலே தி ரேத கலி யுகக் கன வாய் அலை ந்து தலை கீழ் மாம் பழக் குரு ட்டு வவ் வாலாய் கு கை பிர ம்ம ராட்ச ஸாகி மு கம் அறை ந்து தி ரிய முளை த்த மெய் மை மறக்கப் படக் கூடிய காதல் புணர்ச் சியா, பெரு விரல் போன்ற அ தை த்த இதழ் ஈ ரம் பிரிந் தவளே? அக் காமம் சொட்டிப் பரவி நனைந் து மே லேறி சிலிர்ந் து மூழ்க் கும் ஸ்வாச நாளிலே உன்னை ஒரு 30% காட் டன் மீதி பொலிய ஸ்டரென்று செம் புரட் சி செய்ய சீனத் தின் சின்னக் கை கள் பிஞ்சுப் பசுங் கை கள் ஊதப் பறக் கும் உமிக் கூலி க்கு போர் வெம் மை பூக்க நெய்த வாசனைக் கட்ட விழ்ப்புத் துகி லாக பேரங் காடி கள் ஊடே வந்து ஒரு சுதந் திர தினத் தில் கழிவு விலை யில் உன் னைக் காண கட்ட மைத்துப் பின் நவீன மாக அணிந் து கொல் வேன். ஸகி என் பதிவு களின் மொழி பெயர்ப் பு களின் உரத்த ஸப்தம் மௌன மாக உனக்கு இந் தப் பூச் சிகள் சில் லிட்டுப் புணர் ந்து முயங் கும் நள் ளிர விற் கேட் கிறதா? ஒரு மழை மின் னலை இடி அழு த்தி தீ யென அணை த் துப் புணர் ந்த வே தனை ஊடறு த்த இன் பக் கணத் தின் கனத் திலே நனையா மல் இரு பது அமெ ரிக்க ஏகாதி பத்திய டாலர் ஏசி பால் கனியி லிருந் து பார்ப் கோர்னு டன் டாபோ ரின் சின்னக் குழந் தையின் வெயிற் சோகங் களுக்காக என் அராஜக வேர் வைத் தோளிலே உன் அவ்லோன் உ தட்டுச் சா யம் பட்டு விடச் சாய் ந்து நீ மெல் லிய தாக "டா நா ன் உ ன் டீ டாபோர் டாப் டாப்பர் போர் bore" என்று ஆறு தலை முறைத் தாய் மையின் பிர ஸவ வே தனை வனம் நிலம் தாண்டிக் காவிக் கடத்தி முனகிய ஆபி ரிக்க ஆசி யாவின் அமெரி க்கப் பெருந் துக் கத்தை அண் டார்ட்டிக்கா உல கம் அறி யாது. பக்கத்து இருக் கைப் பார்ப் பான், பார்ப் கோன் ராம ஸேது பின் ஆமி புலி பாசி சிட்டு அறி லேது. ஆனால், என் யௌ வனக் கா துப் பறையைக் கிழித்த உன் வைர மூக் குத்தி அறி யும் ஸ்நே கீ! உன் கொப் புளித்த வேதனையை இரா மானு சனும் பெரி யாரும் பிரபா கரனும் புரிந்து துடித்த டெஸி பல்லிலே என் வீச்சம் ஒரு மச் சமாக தாய் வழி சமுதா யத்துச் சேது மண் மேட் டிலே வால சைய ஓடும் வ தையை உன் ஆயி ரம் காலத் து பெண் ணடிமை மீறும் பல் தேய் சீயப் புரட் சியினால் ஆத் மார் த்தமாக தத் துவம் ஸ்பரி சிக்க முடி கிறதா, அசினேகா? ......

..... மன்னிக்க வேண்டும். பெயர்ப்பாளர், பதிப்பாளர் கிடைத்த மகிழ்ச்சியிலே எங்கோ போய் விட்டேன். அதாவது, பெயர்ப்புக்கு இன்னும் -/பெயரிலி.யின் அருஞ் சொற் பத ங்களைக் கொடு க்க வேண் டும். அது வும் சொல் பிரி த்துப் பெயர் ப்பாளாரும் புரி யச் சிறி தாகக் கொடு க்க வேண் டும். அதன் வழியேயே, கோனார் நோட்ஸ் முழுமை யடையும் என்பதால், பழைய அருங் கட்டுரை களைத் தேடிப் பதி வேற்ற இது நல்ல சந்தர்ப் பம். இது தொடரும் அதிர்ஷ் டம்.

அவ் வகையிலே, ஏற் கனவே இரண் டு முறை சுழற் சி செய்த பத் தாண்டு கள் பழு தான அற்புத மான பீன் நவீனக் கட்டு ரையை முன் வைக்கி றேன்.

(அப் பாடா, ஒன்று மே அடைப்புக் குறிக் குள்ளே இது வரை எழுத வில்லை. ஹையா!!)



பரந்த-அபத்தலியல்வாதம் (Pan-Absurdism) & பரந்த அபத்தக்கவிதை (Pan-Absurd Poetry).
ஓர் அறிமுகம்.

நவீனப் படைப்பு உலகில் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்திவரும் படைப்புத்தத்துவங்களில் பரந்த-அபத்தலியல்வாதமும் ஒன்று. ஓவியம், திரைப்படம், நாடகம், இசை, மற்றும் சகல படைப்பிலக்கியங்களிலும் இதன் தாக்கம் சமீப காலங்களில் மிகக் கணிசமாக வளர்ந்துவருவது மிகக் கண்கூடான உண்மையாக உள்ளது. இந்த அறிமுகத்தின் மிக முக்கியநோக்கம், இரண்டு அபத்தலியக் கவிதைகளை அறிமுகப்படுத்துவதே.

தனியே அபத்தலியம் என்பதிலும் பரந்த-அபத்தலியம் என்ற சொல்லினை இந்தக்கட்டுரையாளன் இங்கு முன்வைப்பதற்குக் காரணம், அதன் இயங்கு தளத்தின் வீச்சத்தினதும் ஆழத்தினதும் அகலத்தினதும் அளவினை முன் வைத்தே ஆகும். மார்ட்டின் எஸ்ஸிலின் (Martin Esslin) -நாடகத்தினைப் பொறுத்தமட்டில்,- "அபத்தலியலியத்தின் அரங்கு (the theatre of the absurd)" என்ற பதத்தினை முன் வைக்கையில், அல்பேர்ட் கமு (Albert Camus) இன் "மனிதன், அபத்தத்திற்கும் வலிமிகுந்த நினைவுக்குக் கொணரமுடியாத கடந்தகாலமும் நம்பிக்கை வைக்கமுடியாத எதிர்காலமும் கொண்ட சங்கடத்திற்கும் இடைப்பட்ட தீர்க்கமுடியாத இருப்பு அகல்தலில் உள்ள ஓர் அறிமுகமற்ற புதியவனினை" [A human being as a stranger, "an irremediable exile," caught in the absurd and painful predictament of having neither a past to remember nor a future to hope for] தன் அடிப்படை உருவாக எண்ணி ஏற்றுக்கொள்கிறார். (உ+ம்: இயூஜின் ஐயோனெஸ்கோவின் "(ஒரு/அந்தப்) பாடம்" நாடகம் [Eugene Ionesco's "The Lesson").

ஆனால், இங்கே கட்டுரையாளர் முன்வைக்கும் பரந்த-அபத்தலியம் மேற்கூறிய பார்வையிலிருந்து வேறுபட்டதும் விரிவுபட்டதுமாகும். பரந்த-அபத்தலியம், தான் கொள்ளும் வடிவத்திலோ, கருத்திலோ மட்டும் முழுக்கமுழுக்கச் சார்ந்ததல்ல; மேலாக, அது உற்பத்தியாளனினதும் நுகர்வோனினதும் கருத்து வெளிவிடுதற்திறனிலும் கருத்து உள்வாங்கற்றிறனிலும் சார்பாகத் தங்கியிருக்கிறது. இது நிகழ்த்தற்கலைகளுடனோ (performing arts) அல்லது நுண்கலைகளுடனோ (fine arts) சம்பந்தப்படுகையில், உற்பத்தியாளன் படைப்பாளியாகவும் நுகர்வோன் ஆர்வலனாகவும் அடையாளம் காணப்படுகிறான்.

பரந்த-அபத்தலியம் என்பது படைப்புலகில் நூற்றாண்டு காலமாக இருப்பினும், இதுவரை அதன் மூலவேர்த்தத்துவம் வரைவிலக்கணப்படாமலே இருந்துவந்திருக்கிறது. இதற்கான மிக முக்கிய காரணம், இந்தத்தத்துவத்தின் விரிந்த பயன்படுதளமும் அநேக பரந்த-அபத்தவியற்படைப்பாளிகள் தங்கள் படைப்புகள் இந்த வகைப்படும் என்பதை ஏற்றுக்கொள்ள மறுப்புத்தன்மையும் இதனை இதுவரை காலமும் ஒரு தத்துவவகைப்படுத்தலுக்கு, வரைவிலக்கணப்படுத்தலுக்கு உள்ளாவதினைத் தவிர்த்து வந்திருக்கிறது. இன்னமும் பரந்த-அபத்தலியவாதம் ஒரு முறையான வரைவிலக்கணக்கத்திற்குக் கூர்ப்படையாத வகையில், தற்போதைக்கு, இந்தக்கட்டுரையினைப் பொறுத்த அளவில் நாங்கள் அதனைப் பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்திக் கொள்ளலாம்.

" படைப்பாளியின் எதுவிதமான கருத்துவெளிப்பாட்டினையும் தெளிவாகக் கலை நுகர்வோனுக்கு வழங்கமுடியாத அல்லது தானாகவே எதுவித தெளிவான கருத்துடனோ அல்லது ஏதுவித செய்தியினையும் தனக்குள் உள்ளடக்கி ஆக்கப்படாத எல்லாவகைப் படைப்புக்களும் பரந்த-அபத்தலியப்படைப்புக்கள் எனப்படும்."

பரந்த-அபத்தலியற்படைப்புக்கள் தமக்கெனத் தனியே ஒரு வகை வடிவத்தினைக் கொண்டு இருக்கலாம்; அல்லது பல வேறுவகைப்பட்ட ஆக்கற்தத்துவங்களினாலான படைப்புகளின் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களின் சேர்க்கையாக இருக்கலாம்; உதாரணத்திற்கு, ஒரு பரந்த-அபத்தலியவாதப்படைப்பு இயற்கையில் ஒரு கனவுத்துவப்படைப்பாக (Surrealistic product) இருக்கும் அதேநேரத்தில், இயற்கையாகவே அதன் பொருளினை வெளிப்படுத்தும் தெளிவின்மையிலோ, அல்லது அதனை உற்பத்தி செய்தோனின் சொந்தக் கருத்துத் தெளிவின்மையிலோ படைப்பாளியின் கோணத்தில் ஒரு பரந்த-அபத்தலியப்படைப்பாக ஆகிப்போகும். இன்னொரு வகையாக, அதன் நுகர்வோனின் பார்வைத்தளத்தில் (உ+ம்: ஒரு கவிதை எனப்படுகையில் வாசகனின்) உள்ள கருத்துத் தெளிவின்மையினால், அல்லது படைப்பாளியின் தளத்தினை அணுகமுடியாத வெளிநிலைப்பாட்டினால், உள்வாங்குவீச்சக்கூர்மை மழுங்குதலினால், அவனளவில் (படைப்பு உள்வாங்குவோனின்) அந்தப்படைப்பு ஒரு பரந்த-அபத்தலியப்படைப்பாக ஆகிப்போகும். இந்தவகையில், பரந்த-அபத்தலியல் தத்துவம் சார்தல் கொள்கை (Theory of Relativity) இன் அடிப்படையில் ஒழுகுகிறது. தவிர, மேலே குறிப்பிட்டதுபோல, பரந்த-அபத்தலியற் படைப்பு ஒன்று, ஒரு கனவுத்துவப்படைப்பினதும் ஓர் நவீனத்துவப்படைப்பினதும் (modernism) ஓர் உணர்த்தலியற்படைப்பினதும் (Expressionism) கூட்டாகவோ இருக்கலாம். இந்தக்கூட்டு பல விதமான விகிதங்களிலும் பண்பளவிலும் ஆக்கப்படலாம். இவற்றினை கீழ்க்கண்ட பிரதான வகைப்படுத்தல்களின்கீழ் நாங்கள் கொணரலாம்.

1.
படைப்பின் கருத்து, புரிதலின் அடிப்படையில் //மட்டும்//; இது மேற்கூறிய, படைப்பாளி, பாவனையாளன் இருவரினது நிலைப்பாட்டுத்தள அடிப்படையிலும் ஒருவரை புரிந்து கொள்ளல் அடிப்படையிலும் மட்டுமே சார்ந்திருப்பது.

2.
படைப்பின் வழங்கு வடிவ அடிப்படையில் //மட்டும்//; உதாரணமாக, அது தனியே ஒரு கவிதை வடிவத்திலே அமைந்திருக்கலாம்; அல்லது கட்டுரை வடிவத்தில் அமைந்திருக்கலாம்; அல்லது, ஓர் ஓவிய வடிவத்தில் அமைந்திருக்கலாம்; அல்லது ஓர் இசை வடிவக்குறிப்பு அடைப்படையில், நாடக வடிவில் அமைந்திருக்கலாம்; தவிர, இந்த அமைப்புகள் பல வேறு வேறாக ஒன்று சேருகையில், ஒரு கலந்த வழங்கு வடிவமையலாம். அதாவது, உதாரணத்திற்கு, ஆரம்பத்தில் ஒரு கவிதை வடிவிற் செல்லும் படைப்பு இடைப்பகுதியில் ஓர் ஓவியக்குறிப்பீடு வகைக்குத் தாவி முடிகையில் ஒரு சிறுகதை வடிவில் முடியலாம். ஆயினும், இந்த வகைப்படைப்புகள் மிக அரிதாகவே காணப்படுகிறன. எதிர்காலத்தில், படைப்புத்துறை தன் சலித்துப்போன தேக்கத்திலிருந்து விடுபட்டு தன்னை முன்னெடுத்துச் செல்ல இந்த வகை கூட்டு மாற்றுப் படைப்புக்கள் அவசியப்படும் என்பது இந்தக் கட்டுரையாளனின் பார்வையாகும்.

3.
படைப்பின் அடியோடும் படைப்புத்தத்துவ அடிப்படையில் //மட்டும்//; உதாரணம், அது தனியே எதிர்காலவியற்படைப்பாக (Futurism) இருக்கலாம். அல்லது, எதிர்காலவியலும் கனவுத்துவவியலும் உணர்த்தலியலும் நவீனத்துவவியலும் கலந்து மாறிமாறி வரும் ஒரு படைப்பாக இருக்கலாம்.

4.

இந்த மேற்பட்ட மூன்று அடிப்படைகளும் ஒன்றுக்குள் ஒன்று கலந்து வரும் படைப்பாக ஆகலாம்.

அடிப்படையில், பரந்த-அபத்தலியம் என்பது, இந்தக்கட்டுரையாளனினால், படைப்பாளியின் மன, கருத்து, சூழல் நிலைக்கேற்ப பிரதானமாக ஒரு காலவெளி சார்ந்த வெளியீடாகவும் அவனின் அந்நேரத்தினது குறியீடாகவுமே கொள்ளப்படுகிறது; 'பிரதானமாக' என்ற சொற்பிரயோகம் 'முழுதாக' என்ற சொற்பிரயோகத்திலும்விட இங்கே பயன்படுத்தப்பட்ட காரணம், சூழல் என்பது அதன் அளவில், தூரவெளியிலிருந்து முற்றுமுற்றாகப் பிரிக்கப்படமுடியாததாகும் என்பதே ஆகும்; அதாவது, ஓரளவிற்கு அபத்தலியற்படைப்புக்கள் படைப்புக்கள் ஆக்கப்படும் இடத்தளத்திலும் தங்கியிருக்கிறன. இதுவே நுகர்வோனின் நிலைப்பாட்டிலிருந்து, அவனின் உள்வாங்கு மன, கருத்து, சூழல் நிலைக்கேற்ப பிரதானமாக ஒரு காலவெளி சார்ந்த வெளியீடாகவும் அவனின் அந்நேரத்தினது குறியீடாகவுமே கொள்ளப்படலாம். இந்தத் துணிபு, ஒரு படைப்பின் (அல்லது பொதுவில், பண்டத்தின்) பரந்த-அபத்தலியத்தன்மையினை சம்பந்தப்பட்ட படைப்பாளியினதோ நுகர்வோனினதோ காலம், இடம் சார்ந்த ஒரு சூத்திரமாக மாற்றிவிடுகிறது. அதாவது, இன்றைக்கணத்திற்கு ஒருவருக்கு பரந்த-அபத்தலியப்படைப்பாகக் காணப்படும் பண்டம், இன்னொரு வேளைக்கு முழுதாகவே ஒரு கருத்து/செய்தி கடத்தும் படைப்பாக மாறிப்போகலாம்; இந்த நிலையில், அந்தப்படைப்பு, அந்தக்குறிப்பிட்ட மனிதனுக்கு பரந்த-அபத்தலியப்படைப்பாகவோ, அல்லது ஒரு செய்தி சொல்லும் ஆக்கமாகவோ மாறிப்போகிறது. இந்த ஆக்கு மூலக்கூறே பெரும்பாலாக எந்தவொரு படைப்பினையும் தன்னளவில் சுயமாக பரந்த-அபத்தலியப்படைப்பாகவோ அல்லாமலோ இருக்கவிடாது, வெறும் சார்புத்தன்மையினை மட்டும் அதற்குக் கொடுக்கிறது; இந்தத் தன்மை, சார்ந்ததின் வண்ணத்தன்மையினோடு ஒப்புநோக்கப்படலாம். மேலே பெரும்பாலாக என்ற சொற்றொடர் உட்பதிக்கப்பட்ட காரணம், வெறுமனே வெளிப்படையாக ஒரு கருத்தினை முன்வைக்கும் சொற்றொடர் (உ+ம்: "இன்றைக்கு சோதிடக்குறிப்பின்படி உனக்கு நல்லகாலம்" என்ற சொற்றொடர்) கருத்தளவில் தெளிவாக இருந்தாலும், அதனின் அடிப்படை, உள்வாங்குவோனின் விருப்பு வெறுப்பு, நம்பிக்கை (உ+ம்:சோதிடநம்பிக்கைக்கு) என்பதற்கேற்ப பரந்த-அபத்தலியச் சொற்றொடராகவோ, அல்லது இல்லாமலோ போகலாம். ஆனால், செய்தி வழங்கும் அடிப்படையில் எல்லோரும் (உ+ம்: சோதிடநம்பிக்கை உள்ளோனும், அற்றோனும்) காரண (உ+ம்: சோதிடக்குறிப்பின் அடிப்படையில்) காரிய(உ+ம்: உனக்கு நல்லகாலம்) ஒரு தெளிவான செய்தியினைப் பெற்றுக்கொள்கிறார்கள்; அந்த அளவில் இந்தச் சொற்றொடர் எல்லோருக்கும் தன்னளவில் பரந்த-அபத்தலியச் சொற்றொடர் அற்றே இருக்கிறது; ஆனால், இரண்டாவது (அல்லது இரண்டாவது கட்ட நம்பிக்கையின் அடிப்படைப்) பார்வையில், ஒருவருக்கு பரந்த-அபத்தலியச்சொற்றொடராகப்போகிற வேளையிலே, மற்றவருக்கு இன்னமும் ஒரு பொருள்பொதிந்த சொறொடராகவே இருக்கிறது. இதுவே "பெரும்பாலாக" என்ற சொற்றொடரின் அவசியத்தினை மேலே உட்பதிக்கும் அவசியத்தினை முன்வைக்கிறது. இதுவே, பரந்த-அபத்தலியத்திற்கு ஒரு தனியே கறுப்பு வெளுப்பு என்று கோடுவெட்டிப்பிரிக்கமுடியாத தன்மையினை ஏற்படுத்திவிடுகிறது. ஒரு சாம்பற்றன்மையினை ஏற்படுத்தி விடுகிறது; அதாவது, பிறிதொரு சொற்றொடரில், ஒரு படைப்பின்மீதான பரந்த-அபத்தலியப்பார்வை, "அபத்தம்/அபத்தமில்லை" என்ற 'வெட்டு ஒன்று துண்டு இரண்டு' பார்வையினை, மிகுதி சீர்தூக்கு அலசற்பார்வைகளில் உள்ளது போலத்தரப்போகாது; வெறுமனே, பரந்த-அபத்தலியத்தின் முறிவற்ற தொடர் (not discrete, but continuous) வீச்சத்தின் காத்திரத்தின் கோணத்தின் அளவினையே தரக்கூடும்.

சீர்தூக்கி அலசுதற்துறையில் பரந்த-அபத்தத்தன்மைப்பார்வையின் தேவை மிகவும் அவசியமானதாகும். எந்த ஒரு மனிதனும் அடிப்படையில் ஒன்றானவனல்ல. மேலும் ஒரு தனி மனிதனே, அவனளவில் உடலளவிலும் சிந்தனையளவிலும் காலத்தோடும் புதிதாக மாறிப்போகிறனான், உயிரளவான நிலையில் மீண்டும் பிறக்காதபோதும். இந்த வகையில், ஒருவனின் படைப்பு வெளியீட்டினை இன்னொருவர் நல்லது கெட்டது என்று தன் கருத்து நிலைப்பாட்டில் மட்டும் வெறுமனே கூறுபோடுகை பண்ணிவிடமுடியாது; இந்த அளவில், பரந்த-அபத்தத்தன்மை விமர்சனத்திற்கு ஒரு படைப்பின் நிலைப்பாட்டினை படைப்பாளியளவில் ஏற்றுக்கொள்ளும் நியாயத்தினைப் பெற்றுத்தருகிறது. இன்னொரு விதத்தில், அது நுகர்வோனையே படைப்பினைப் புரிந்து கொள்ளும் கூட்டுப்படைப்பாளி (இதை விடச் சரியான சொற்பதத்தில், "இரண்டாம்படி/நிலைப்படைப்பாளி" அல்லது "நுகர்தற் படைப்பாளி") தரத்திற்கு ஏற்றி, இடையே விமர்சகர் எனும் இடைத்தரகரின் கூலியின் அளவினை மிகுந்த அளவிற் குறைத்துவிடுகிறது. இந்தக்குறைப்பு, இரண்டாம்நிலைப்படைப்பாளிக்குக் காலப்போக்கில், ஒரு "முதல்நிலை/படிப்படைப்பாளி" அல்லது, "ஆக்கற்படைப்பாளி" ஆகும் ஊக்கத்தினையும் அவனின் ஆக்கற்பண்பே பிறிதொரு காலத்தின் சிறந்த படைத்தற்போக்கு முன்னெடுப்புக்கு வழியமைக்கும் விளைவினையும் கொடுக்கிறது.

ஆக்கப்படைப்புகளில் தமிழில் தற்போது பரந்த-அபத்தலியத்தினை வெவ்வேறு படைப்பு ஊடகங்களின் உதாரணத்துடன் பார்வையிட்டு பின்னே ஒரு கட்டுரையில் முன்வைக்கக் கட்டுரையாளர் எண்ணியிருப்பதால், இங்கே அவற்றினைப் பற்றி எதுவும் கொடுக்கப்படவில்லை.

கீழே உள்ள 'படைப்பு' தற்போதைக்கு அநேக வாசகர்களுக்கு, அபத்தலியப்படைப்பாக இருக்கும் என்ற அளவில், அது முன்னே வைக்கப்படுகிறது. வெளியீட்டளவில் ஒரு கனவுத்துவப்படைப்பாகப் பார்வைக்குப் படுவோருக்கு, அதன் பரந்த-அபத்தத்தன்மை அவரளவில் காத்திரவீச்சக்கோணம் குறைந்துபோகும்; மற்றையோருக்கு அதன் பரந்த-அபத்தத்தன்மை தவிர்க்கமுடியாததாகும்.

எழுது இடம் + நேரம் கருதி பரந்த-அபத்தலியத்தின் மீதான மிக மிக அடிப்படை முன்வைப்புக்களுடன் இங்கே நிறுத்திக் கொண்டாலும், அது பற்றி மேலும் விரிவான கருத்துக்கள் முன்வைக்க வேறு விரிவான சந்தர்ப்பங்களும் விவாதமேடைகளும் அமையும் என்று கருதுகிறேன்.

இந்தக்கட்டுரையும் தானே ஒரு செவ்விய (classic) பரந்த-அபத்தத்தன்மை படைப்பிற்கான உதாரணம் ஆகலாம் என்ற நம்பிக்கையுடன், தமிழ் ஆசான்(கண் கோளாற்றால், அப்பாவித் தமிழ் அரசன் மீது பழியைப் போடுகிறவர்களை பசியாத புலியும் பசித்துப் புசிக்கட்டும்).

பிரதியொன்று.
கடவுள் தன் வலக்கைக்கட்டைவிரலாகிப் போனார்;
போனார் கடவுள் கட்டைவிரலாகி,
தன் கட்டைவிரலான உடலின் சிறு கட்டைவிரல் அசைத்து வினை செய்யமுடியா அளவிற்கு.
கடவுளின் விரல்கள் தேய்வதில்லை;
ஆனால், அவர் அவை சிறிதாகிப் போகும்,
அவரின் உடலோடு, உடலின் அளவு சம்பந்தப்படா மனதோடு.
வினை செய்யமுடியா கடவுள் என்னவாவார்?
படைத்தல் அற்றவை தம் இருப்புச் செத்துப்போகும்.
கடவுளும் அவ்விதமே செத்துப்போவார்.
கூடவே, கடவுள் என்ற பெயரும்.
பிறகொருமுறை,
புதிதாய் ஒரு கடவுள் பிறப்பார்,
தன் கட்டை விரற் கரு செத்த கடவுள் உருவம் எழ விரிந்து வைக்க.
நேரம் படைத்துச் செத்தக்கால்,
அக்கடவுளும் கடவுள் தன் கைக்கட்டைவிரலாகிப் போவார்,
இடதோ, வலதோ,
தன் வினை செத்துவைக்கும் அளவிற்கு,
கட்டைவிரற் கட்டைவிரல் குட்டித்துப்போயிருக்க


அமீபாவின் பின்னூட்டம்-1

என்றைக்கு சொரென் கீர்கேகார்ட், ஹெஹலின் தனிமனித நிகழ்வுகளுக்கு எதிரான வாதத்தையும், ஒட்டுமொத்த வரலாற்று போக்கின் மீதான துதிபாடுகையை எதிர்த்ததோடு தனிமனித ஆதரவு நிலைப்பாட்டை தீவிரமாக ஆதரித்தாரோ என்றைக்கே அபத்தலியலின் விதை நாட்டப்பட்டுவிட்டதெனலாம். Art of Analytical Cubism வகையறாக்கள் ஓரிருப்பின் மீதான பல்வகைப்பார்வை மாதிரிகளை அறிமுகம் செய்துவிட்டன. திட்டமிடுதலின் விளைவாக்க கலை மாதிரிகளின் தகர்வு டாடாயிச நிலவுகைக்காலத்தில் ஏற்படுத்தப்பட்டுவிட்டது. திட்டமிடல் கலையுருவாக்கம் போலியை நிலைநிறுத்துவதெனும் கருத்துருவாக்கம் சந்தர்ப்பசக் கலைப்படைப்புருவாகத்திற்கு அடிகோலியது. பல்சாத்தியத் தோற்றப்பார்வைகளை உருவாக்கல் அகவுணர்வுக்கு இனம்புரியாத அர்த்தப்பாடுகளை உணர்த்துவதாக உணர்ந்தார்கள். டாடாயிச மனிதன் வாழ்வின் மீதான பெரும் அபத்தம் கனவுகளைக்குலைத்து போடுகிறது என்றும் அதனூடான நிச்சயமற்ற இருப்பு வாழ்வின் போலி அர்த்தப்பாடுகளை பொய்யாக உணர்த்தி நிற்கின்றது என உணர்ந்தான். வாழ்வின் பெரும் சுழலுக்குள் சிக்கி போகின்ற மனிதன் தான் தோற்றுப் போவதாக உணர்கின்றான். அலைதலையே தனது வாழ்வின் கருப்பொருளாக கொண்டு அலையத் தொடங்குகின்றான். அபத்தத்தில் இருந்து தப்பியோடும் மனிதனை இருப்பின் நிச்சயமின்மை வாழ்வின் ஒவ்வொருகணங்களிலும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இவ்வகை வாழ்வு கலகக்காரர்களை உருவாக்குகின்றது. இதன் அடிகோலாகத்தொடர்ந்த இருத்தலியல் வாழ்வுக்கான பல்தேர்வுகளின் சாத்தியப்படுத்தியப்பாடுகளை உணர்த்தியது. உலகத்தின் வாழ்வுத் தெரிவுகளில் தெக்காட்டு(தளம்) இன் முடிவிலி சாத்தியப்பாடுகளை உருவாக்க கோரியது.
If 2D (00,01,0infinty... 10,11,1infinity... infinity0,infinity1,infinityinfinity). சாத்தியப்பெருக்கத்திற்கு ஐன்ஸ்டீனின் பல்பரிமாணம் பற்றிய ஊகங்களும் காரணமாயின. அபத்தம் என்ற சொற்பதமும் அதன் உணர்தலுமே இருத்தலியலுக்கு வழிகோலியது. வாழ்வென்பது அபத்தமானது என்றும் வாழ்வுக்கு ஒருநிலைப்படுத்தப்பட்டதல்லாமல் இயங்குநிலைச் பல்சாத்தியமான அர்த்தப்பாடுகளைக் தேடும் உணர்வு நிலையாக இருத்தலியல் அறிவித்துக் கொண்டது. மரபார்ந்த இறுகற்பாடுகளைத் தவிர்த்த புத்தூக்க தத்துவமாக தன்னை அறிமுகப்படுத்தி கொண்டது. விஞ்ஞானம் பற்றிய நிலையற்ற கருதுகோட்பாடுகள் வாழ்வு பற்றிய மரபை மீற மனிதனுக்கு உதவியது. (சாள்ஸ் டார்வின் பரிணாமக் கொள்கை மற்றும் ஐன்ஸ்டீனின் பெருவெடிப்புக்கொள்கை போன்றவை விஞ்ஞான உலககங்களின் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தின. இவை இரண்டுமே ஒருவித ஒற்றைத் தன்மையை மறுதலித்தன. சார்ள்ஸ் டார்வின் மனிதன் தோற்றம் பற்றிய சுழல்தன்மைக் கோட்பாடு அதாவது பூச்சியத்தில் இருந்தான முடிவிலி நோக்கிய பரிமாணம் அக்கால மனிதனை போன்ற ஆதாமை தூக்கி கடாசியது. அடுத்து F=Ma நியூட்டனின் எனும் நேர்கோட்டு கணித முறைமை E=mC^2 எனும் சிக்கல் சமன்பாட்டால் சிக்கலாகியது.) அத்துடன் தத்துவமும் தன்னை நேர்கோடு மற்றும் ஒற்றைத்தன்மையில் இருந்து விடுவித்துக்கொண்டது. இத்துடன் நவீனத்துவம் தன்னை முடித்துக்கொண்டு பின்னவீன நிலவரத்துக்கு வந்தது. பின்னவீனத்துவம் நவீனத்துவத்தின் தொடர்ச்சியையும் மறுதலிப்பையும் தன்னகத்தே கொண்டதாகும். மறுதலிப்பின் மாறுகைக்கான கணத்தை நாம் பூச்சியமாக கொள்ள முடியாது. பூச்சியமற்ற இவ் இடைவெளியில்
தொடர்தன்மையான தளத்தில் பெயரிலி பரந்த அபத்தலியலை நிலைநிறுத்துகிறார். இது நவீனத்துவத்தையும் பின்னவீனத்தையும் இணைக்கும் அரூப இடைவெளியில் தன்னை மாறும் புள்ளியாக நிலைநிறுத்துகிறது. பெயரிலியின் பரந்த அபத்தவியலுக்கு எவ்வாறு நவீனத்துவ தத்துவ தொடர்ச்சிகள் ஆதரவானவையோ அதே போல பின்னவீனக்கருதுகோள்களும் வலுச்சேர்க்கின்றன. அதுமட்டுமல்லாமல் Quantum Physics & Special Relativity போன்றவற்றில் இருந்து கூட நிலைப்படுத்த படாத மற்றும் ஒன்றையொன்று சார்ந்த (மையம் சார்ந்ததல்ல) இயங்குகைக்கான உதாரணங்களை எடுத்துக் காட்ட முடியும்.(அபத்தவியலின் அர்த்த இயங்குகை.) மற்றும் அமைப்பியலில் மொழி மனதை ஆளும் முறைமை மற்றும் சமூக கலாச்சார தளங்கள் உருவாக்கும் மொழி அல்லது மொழி உருவாக்கும் சமூக கலாச்சார தளங்கள் என்பன கூட மேற்படி கட்டுரைக்கு வலுச்சேர்ப்பன. இவ்வாறே அமைப்பியலை ஆட்டம் காண வைத்து பின்னமைப்பியலை சாரவைத்த "ஆசிரியன் இறந்துவிட்டான்" எனும் ரோலன் பார்த்தின் கோட்பாடு பிரதியை எழுதிய ஆசிரியன் கூட அதை மீண்டும் வாசிக்கும் போது ஒரு வாசகனே எனும் கருத்தியலை உள்வாங்குகின்றது பெயரிலியின் இக்கட்டுரை. கட்டுரைக்கு வலுச்சேர்க்கும் பின்னவீனக்கருதுகோள்களுக்கு வருவோமேயானால் DeConstruction, Binary Opposition கருதுகோள்கள். DeConstruction என்பதில் உள்ள பிரதி பற்றிய வார்த்தைகளுக்கான அர்த்தப்பாடுகள் மற்றும் அர்த்தப்படுத்தல்களில் வாசகனுக்கு உள்ள தெரிவுகளும் சுதந்திரமும் அபாரமானவை. முடிவிலியை நோக்கிய சுதந்திரத்தை கொண்டவை.

இனி,
ஓவியம் எனும் வகையில் மேற்சொன்ன நவீனத்துவத்தின் நீட்சிகள் பின்னவீன யுகாந்திர காலம் (பொதுவாக காலத்தால் வரையறுக்க முடியாது.) வரையில் இன்று பலவித அர்த்தப்பாடுகளும் செறிவுகளும் பல்சாத்தியப்பாடுகளும் கொண்டவையாக உருப்பெற்று நிற்கின்றன. மற்றும் அசையும் காட்சிப்படிமங்கள் Digital fine Arts வெளிப்பாடுகை அளிக்கும் அர்த்தங்கள் எண்ணிறைந்தவை. (பெயரிலியின் Digital fine Arts முயற்சிகளைப் பார்க்கவும்.)

இரண்டாம் உலகப்போருக்கு பின் முனைப்படந்த அபத்தவியல் வெளிப்பாடுகள் போர் உருவாக்கிய வெறுமையையும் மரபார்ந்து உள்வாங்கப்பட்டிருந்த மதநெறிமுறைகள், அறம்,வன்முறை, அதிகாரம், கலாச்சாரம், ஒழுக்கம் என போலி மதிப்பீடுகளை பலமாக கேள்விக்கு உள்ளாக்கின. இரண்டாம் உலகப்போர் அளித்த மனவடுக்கள் அதற்கு பின்னான மனிதர்களுக்கு போலிமதிப்பீடுகள் பற்றிய எள்ளலுடன் கூடிய விமர்சனத்தை முன்வைத்தன. அதுவே அபத்தலியலின் வெளிப்பாடுகளாக வலிமை பெற்றன. அல்பேட் காம்யூ வின் அந்நியன் இதற்கான முக்கிய குறியீடாயிற்று. மற்றும் சர்த்தரின் குமட்டல் வாழ்வின் அபத்தத்திருந்து தப்பி ஓடும் இளைஞன் வாழ்விற்கு ஒரு அர்த்தம் இல்லாமல் திண்டாடுகின்றான். Surrealism தன்மையில் கனவும் நினைவும் அல்லாத ஓர் உணர்வினால் திண்டாடும் அவனது உணர்வுகள் நாவலுக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்துவிடுகின்றன. அவன் அச்சமூகத்தின் ஒருவித அபத்த குறியீடாகிறான்.

தமிழில் அபத்தவியலை படைப்பிக்களில் வெளிப்படுத்திவருபவர்களாக
சாருநிவேதிதாவையும் ஓரளவுக்கு ஷோபாசக்தியையும் சொல்லலாம். ரமேஷ்-பிரேம் இன் பிரதிகளில் கூட உடலரசியல் என்னும் போது ஒருவிதமான அபத்தலியல் கூறுகளை உணரக்கூடியதாக உள்ளது. அவர்கள் உடலை பிரதிகளில் முன்னிறுத்தும் முறை மரபை மறுத்து அபத்த கூறுகளுடனேயே முன்வைக்கின்றனர். சாருநிவேதிதாவின் படைப்புக்களில் வாழ்முறையின் பல்சாத்தியங்களின் பிரதிநிதிகளும் வந்து போகின்றார்கள். சாரு அபத்தங்களினூடான அர்த்தப்பாடுகளை வாசகன் மீது திணிக்க முயற்சிப்பதில்லை. கதையோட்டத்தோடு ஒட்டுமொத்த சமூக அபத்தத்தையும் எம்மீது கொட்டி போகின்றார். அபத்தக்குவியல்களுக்கிடையே அர்த்தப்பாடுகளை கண்டடையும் தெரிவை அவர் வாசகனிடமே விட்டுவிடுகின்றார். அவ்வாறே சோபாசக்தியும் அவர் வாழ்ந்த பொதுவரசியலை எள்ளலுடன் கேள்விக்கு உள்ளாக்குகிறார். அதன் புனிதம் மீது லாவகமாக சேற்றை அள்ளி வீசுகிறார். இறுதியில் வாசகனுக்கு சேறு பூசப்பட்ட புனித உருவம் ஒன்று எஞ்சுகின்றது. இதை விட, நா. சுந்தரலிங்கம் இன் நாடகமான 'அபஸ்வரம்'. இது ஒழுங்குக்கு உட்படுத்தப்பட்ட ஸ்வர நிலைமையினை மீறி ஒலிக்கும் குறியீடாகின்றது. 4 பாத்திரங்களின் வாழ்வு மீதான பார்வையுடன் வாழ்வின் போலிமதிப்பீடுகளை கேள்விக்கு உள்ளாக்குகின்றது. காற்றிலே அள்ளி வீசப்படும் காகிதக்கட்டுடன் பொதுமகன் ஒருவன் உட்கார்ந்து இருக்க மதகுரு, விஞ்ஞானி, பேராசிரியர் போன்றோரின் வாழ்வு மீதான அபத்தப்பார்வையை எள்ளிநகையாடுகின்றது நாடகத்தின் கதை. காகிதங்கள் காற்றிலே பறந்து தொலைந்து போகாமலிருக்க தன்னாலான முழுமுயற்சியையும் எடுக்கிறான் அம்மனிதன். ஆனால்
இறுதிவரையும் அதை செய்ய முடியவில்லை. கடைசியில் மதகுரு, விஞ்ஞானி, பேராசிரியர் போன்றோரிடம் எவ்வாறு அதை செய்வது என வினவுகின்றான். அவர்கள் தமக்கேயுரிய மதிப்பீடுகளில் அதைச் சொல்ல முயல்கின்றனர். அவர்களின் அறிவுரையால் அவனால் அதனைச் சரிவரச் செய்ய முடியவில்லை. முயற்சியின் இறுதியில் தனது காகிதங்கள் முழுவதையுமே இழக்கிறான். காகிதங்களுக்குப் பதிலாக அவன் கையில் எஞ்சுவது வாழ்வின் அபத்தமே.

இனி,
பெயரிலியின் விடயத்துக்கு வருவோம். பெயரிலி தனது கட்டுரையில் அபத்தலியல் படைப்பு என்னும் போது தனியே வடிவம், வெளிப்படுகை மற்றும் உணர்திறன் அல்லது உள்வாங்கும் திறன் என்பவற்றோடு மட்டுப்படுத்திவிடுகின்றார். அத்துடன் பின்னவீனக்கருத்தியலை பெரும்பாலும்
உள்வாங்கியே அபத்தலியம் பற்றி விளக்க முற்படுகின்றது இக்கட்டுரை.

//" படைப்பாளியின் எதுவிதமான கருத்துவெளிப்பாட்டினையும் தெளிவாகக் கலை நுகர்வோனுக்கு வழங்கமுடியாத அல்லது தானாகவே எதுவித தெளிவான கருத்துடனோ அல்லது ஏதுவித செய்தியினையும் தனக்குள் உள்ளடக்கி ஆக்கப்படாத எல்லாவகைப் படைப்புக்களும் பரந்த-அபத்தலியப்படைப்புக்கள் எனப்படும்."//

என்று சொல்லும் பெயரிலியின் கருத்துடன் ஏன் நாம் முழுமையாக உடன்பட முடியாது என விளக்க தேவை இல்லை என நினைக்கிறேன்.

பெயரிலி இக்கட்டுரையை திடீரென இங்கே மீள்பிரசுரம் செய்ததற்கான காரணம் என்ன?
றயாகரனின் போலிமதிப்பிடுகள் பற்றிய உரையாடல்., றயாகரன் அர்த்தம் கொள்ளும் புள்ளியில் உடன்பாடு காணாமை. அமீபா, மயூரன் போன்றோரது உரையாடல் செலுத்திய தாக்கம். இம்மூன்று விடயங்களும் இதற்கு மூல காரணமாக இருந்திருக்கலாம் என நினைக்கின்றேன்.

பி.கு-1:-
நாடகம் மற்றும் திரைப்படங்களில் அபத்தவியலின் வெளிபாடுகள் பற்றி எழுதுவதற்கு இருந்தேன். இதைப் பற்றி ஒரு புத்தகம் போடுமளவுக்கு எழுதமுடியும். எழுதுவதின் அபத்தம் காரணமாக இத்துடன் நிறுத்திக்கொள்கின்றேன்.

பி.கு-2:-
பாலியலில் அபத்த வெளிப்பாடுகள் சமூகத்தில் அதிர்வை ஏற்படுத்தக் கூடியவை. El Topo எனும் திரைப்படத்தை இயலுமானால் பார்க்கலாம். நமீதாவின் படத்தை போட்டு கிறங்கடிக்க வைக்கும் ஓசை செல்லா போன்றோர் இதைப் பார்த்தல் நல்லது. கிளர்ச்சி உருவாக்கி வைத்திருக்கும் மதிப்பீடுகளில் இருந்து வெளிவர உதவும்.

பி.கு-3:-
பௌதீகவியல், கணிதம், தத்துவம் , கலை போன்றவை பெரும்பாலும் ஒன்றையொன்று சார்ந்தவை. அவற்றை ஒன்றையொன்று Cross-Refer பண்ணுவதாக சிந்தனை முறை மாற்றியமைக்கப்பட வேண்டும்.

பி.கு-4:-
பெயரிலிக்கு நன்றி. எனது பின்னூட்டங்களை அனுமதிப்பதற்கு. (அலுப்படிக்கிறனா பெய்ஸ்? எனக்கு வேற வழி இல்லையே..!!! கோச்சுக்காதீங்கவா...).

பி.கு-5:-
ஸ்தானோவிஸ்டுகளுக்கு எதிராக பன்முனைத்தாக்குதல் செய்யும் திட்டம் ஒன்று உண்டு. மார்க்சீயம் பற்றிய நல்ல பார்வையை ஏற்படுத்த் வேறுவழி இல்லை.

இன்னும்,
1.
பரிமாணம் பற்றிய டார்வினின் கருத்தியலின் கலக்ப்பார்வை- An Abstract of an essay on the origin of species & varieties. பெரும் மரபு, மதம் சார்ந்த பார்வையை புரட்டிப்போடல்.
ஒப்பிடுக தத்துவ போக்கில் அபத்தலியலின் இடமும் தளமும்.

2.
F=ma எனும் நேர்கோட்டுத்தன்மை E=mc2 ஆல் எவ்வாறு F=ma சார்ந்து சிக்கற்தன்மை ஆக்கப்பட்டது என்பது விடயம். வரைபடங்களுடன் விளக்கல் தெளிவை தரக்கூடும்.

3.
மார்க்சீயம் அறிவியல் கொள்கை சார்ந்ததல்ல எனும் ஆய்வு கார்ல் பொப்பெரால் The logic of scientific discovery கூறப்படுகிறது. பெரும்பாலும் நேர்கோட்டு தன்மையும் ஒருவிதமான கருத்துமுதல்வாதமும் நிறைந்திருப்பதாக கூறிச்செல்கின்றார்.



சிறீரங்கனின் பின்னூட்டம்-1

//3. மார்க்சீயம் அறிவியல் கொள்கை சார்ந்ததல்ல எனும் ஆய்வு கார்ல் பொப்பெரால் The logic of scientific discovery கூறப்படுகிறது. பெரும்பாலும் நேர்கோட்டு தன்மையும் ஒருவிதமான கருத்துமுதல்வாதமும் நிறைந்திருப்பதாக கூறிச்செல்கின்றார்.//

அமீபாக் குஞ்சு அள்ளிப்போடும் வெட்டுத்துண்டுகளுக்கு வலுச்சேர்ப்பதற்காக இப்போது கார்ல் இறாய்முண்ட் பொப்பரை(Sir Karl Raimund Popper) துணைக்கழைத்து மார்க்சியம் என்பது "பெரும்பாலும் நேர்கோட்டுத்தன்மையும் ஒருவித கருத்துமுதல்வாதமும் நிறைந்திருபதாகச் சொல்கிறார்".என்பதால்,அட நம் திறந்த சமுதாயத்தின்(After the Open Society) பிரதிநிதி,அது கத்தோலிக்க அறக்கட்டளைகளால் கௌரவ"டாக்டர்"பட்டங்கள் பல பெற்றவராச்சே!ஆக,கார்ல் போப்பர் சொன்னால் அது நிச்சியம் கடவுள்(Das offene Universum) சொன்னதாகவே இருக்கும்.மார்க்சியம் குறித்த மதிப்பீடுகளுக்குச் சுவர் எழுப்பியெவரும் வைக்காதவரை அது கல்லடிபட்டுக்கொண்டுதாம் இருக்கும்.அதுதான் சிறப்பென்பதால் இதையே கார்ல் போப்பரின் தாய்மொழி வாயால் எங்கட குஞ்சுகளும் கேட்பதற்காக"Popper bezeichnet Marx als bedeutenden Ökonomen und Soziologen" (-Die offene Gesellschaft und ihre Feinde :211)இப்படிச் சொன்னவர்கள் ஆயிரம் கோடிப்பேர்கள்.இப்போது கார்ல் போப்பர் சொன்னதால கார்ல் மார்க்ஸ் அதி முக்கியமான சமூகப் பொருளியலாளனாக நாங்க எடுக்கத்தாம் வேணுமென்றில்லை.அவர் சொன்னதற்கு அப்பால் சேறடிப்பதற்கான தோற்று வாய் நம்ம கார்ல் போப்பருக்கு எப்படி உருவாகுதென்பதற்குச் சுவாரிசியமான நிகழ்வொன்று வந்து தொலைகிறது.வீனில் காவல் துறைகஇகும் கம்யுனீஸ்டுக்களுக்குமான கெடுபிடியில் ஒன்பது காவல் துறை நாய்கள் செத்தவுடன்(;(wie bei einer gewaltsamen Auseinandersetzung zwischen Kommunisten und der Wiener Polizei acht Menschen ums Leben kamen, wandte er sich schockiert vom Marxismus ab und wurde zu einem seiner konsequentesten Kritiker) புட்டுக்கொண்டு வந்த அவரது திறந்த சமுதாயத்தின் தௌ;ளிய மனது கேகலின் கருத்தியல் மனதைப் பின்பற்றிய கார்ல்மார்க்சிடமும் இத்தகைய போகஇகு நிலவுவதாகச் சொன்ன கையோடு நம்ம அமீபாக்களுக்கு அரிக்கத் தொடங்கிவிடுகிறது.இவர்களுக்குச் சொல்லக்கூடிய ஒரு அருமையான வாக்கியத்தை கார்ல் இறாய்முண்ட் போப்பரே சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்:"Wers nicht einfach und klar sagen kann, soll schweigen und weiterarbeiten bis erst klar sagen kann“
"எவருக்கு, இலகுவாகவும் தெளிவாகவும் எடுத்துச் சொல்லும் தெளிவில்லையோ அவர் மௌனித்தபடி தொடர்ந்து கற்றுத் தெளிவாக உரைக்கும் வரை மௌனித்திருப்பது உத்தமம்" என்பது நாம் ஏற்பதுதாம்.அது அமீபாக்களுக்குப் பெரிதும் பொருந்தும்.ஏனெனில,; கார்ல் போப்பரே அவிட்டுவிட்ட தத்தவங்களுக்குக் கருத்துமுதல் வாதம்தாம் காரணமாகிக் கிடக்கிறது.அவரது முன்று உலகத்திலும் முழுமுதலாய் விரிவது:

Welt 1, das ist die physikalische Welt
Welt 2, die Welt der individuellen Wahrnehmung und des Bewusstseins
Welt 3, die Welt der geistigen und kulturellen Gehalte, die vom Einzelbewusstsein unabhängig existieren können (z. B. die Inhalte von Büchern, Theorien oder Ideen)

இந்த மூன்று உலகத்திலும் முடிவாக விரிவது கருத்தியலால் உந்தப்பட்ட முடிவுகள்தாம். கண்றாவி இந்தப் பொருளுலகத்துள் பௌதிக அடையாளங்கள் முட்டிக்கொள்ளும் எல்லாக் காரணத்தினதும் முடிவுகளும் கார்ல் போப்பர் குறிப்பிடவதுபோன்று உண்மைக்கு அருகினில் என்ற சங்கதியுள்தாம் கண்ணிகளைப் புதைத்து வைத்திருக்கிறது.இந்தக் கதையில் மார்க்சியத்தைக் கருத்துமுதல்வாதம் என்பதின் தொடர் பரிணாமங்கள் நாம் அறிவதில் அமீபாவுக்கு அவசியமொன்றுண்டு.அது எப்பவும்போலவல்ல இப்போதைய தேவையின் தொடர் நிகழ்வுகள் பெயரிலியைச் சொல்லித் தான் போடும் கோல்களாக்க முனைகிறார்.உணர்வினது தனித்துவமான உண்மை எதுவென்று நாமும் புரிந்துகொள்வதற்கு நீண்டவொரு சமாந்திரப் பாதையொன்று விஞ்ஞானத்தில் கொட்டிக்கிடப்பதால் குறுக்குப் பாதை எதற்கு?உலக உயிரினதும் பண்பாட்டினதும் நிகரத்தாண்டவம் தனித்துவமான உணர்வை உற்பத்தியாக்குவதன் பருமம் இன்றைய இந்த உலகத்தின்-குறிப்பாக மேற்குலக இன்னுங் கொஞ்சம் தாண்டி நம்ம அமெரிக்க மாமாக்கள் சொல்வதுபோல்(Hier möchte ich noch eine weitere Aussage Poppers hinzufügen, die lautet: `Es kann keine vollkommene Gesellschaft geben.´உலகம் அனைத்தும் ஒருமைப்படும் சமுதாயம் கிடையவே கிடையாது. (Vgl. das `Nachwort´ zu Popper/Lorenz: Zukunft (Anm. 29), S. 138. ... Und er fügt hinzu, S. 140: `Wenn du eine vollkommene Gesellschaft anstrebst, so wirst du sicher gegen die Demokratie sein.உலகம் அனைத்தும் ஒருமைப்படும் சமுதாயத்தை; நோக்கி நீ போராடினால் நிச்சியமாக ஜனநாயத்துக்கு எதிராகக் காரியமாற்றுகிறாய்´)"
"நாங்கள் திறந்த தனித்துவமான சமுதாயம்"அதைத் துலைப்பதற்கே காரியமாற்றும் இஸ்லாமியப் பயங்கரவாதம்...கயிறுவிடும் தளம் கார்ல் போப்பரின் தேட்டம்தாம் அமீபா.கண்ணைக் கொஞ்சம் கசக்கி வெட்டுத்துண்டுகளை மார்க்சியத்தின்மேல் கொட்டாமல் இன்றைய பெருங்கதையாடற் குஞ்சுகளையும் வாசித்து ஒருவகைமாதிரியான வடிவத்தை எடுங்கோ.அப்போதாவது பார்ப்பம்...



அமீபாவின் பின்னூட்டம்-2.


Karl Raimund Popper ஆல் முன்வைக்கப்பட்ட கருத்தியல், அறிவியல்வாதத்தின் மரபார்ந்த இறுகற் தன்மையை சற்று மாற்றியமைத்தது. அறிவியல் கண்டுபிடிப்பில், கண்டுபிடிப்போனின் முனனுபவம் சார்ந்து கண்டுபிடிப்பின் வழி அல்லது முடிவு தீர்மானிக்கப்படும் என கூறியவர். (முற்று முழுதாக அல்ல). ஆயினும் அறிவியல் கண்டுபிடிப்பை தர்க்கவியலும் வழிநடத்துவதாக நம்பினார். ஆக தர்க்கவியலாலும் முன்னனுபவத்தாலுமே கண்டுபிடிப்பு வழிநடத்தபடுகிறது என கூறினார். கண்டுபிடிப்பாளனின் அக உணர்வு சார்ந்து விகிதங்களில் மாற்றம் ஏற்படலாம். அறிவியல் கண்டுபிடிப்பின் வழிப்போக்கில் தரவுச்சேர்க்கையில் இருந்து இறுதிமுடிவுக்கு வரும்வரையிலான பாகம் வரை கண்டுபிடிப்பாளன் பங்குபெறும் நிகழ்வுகள், சூழல் போன்றவை அக்கண்டுபிடிப்பில் தாக்கம் செலுத்துகின்றன. கண்டுபிடிப்பு வெறுமனே தரவுகளோடும் விஞ்ஞான முடிவோடும் வரையறுக்கப்படுவதில்லை ஏராளமான இடைக்காரணிகள் அதனுள் தாக்கம் செலுத்துகின்றன. அவற்றின் தீர்மானங்கள், 'உண்மைகள்' செலுத்தும் தாக்கம் மிகப்பெரியது. அவை உலகத்தின் முன்பு ஏற்கனவே உண்மைகளாக்கப்பட்டவை. அவற்றின் தாக்கத்தை நாம் சிறிய கணியமாக கணித்தல் எவ்வளவு பிழையானது என Karl Raimund Popper கேள்வி எழுப்பினார்.
மரத்தில் ஏறும் (கு)ரங்கார் ஒருத்தர் அதன் கிளை வழியாகச் சென்று எதேச்சையாக ஒரு இலையைப் புடுங்க எத்தனிக்கின்றார். அதற்கான தெரிவு கிளைவழியாக இருக்கின்றது என வைத்து கொண்டால், அவர் தனக்கு வசதியான கிளைகளில் தாவி சென்று அதனை பற்ற முயல்கின்றார். அவர் ஒரு கிளையை தெரிவு செய்தவுடன் மற்ற கிளைகளில் உள்ள இலைகள் தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்கின்றன. அவ்வாறே விஞ்ஞானம், வரலாறு இரண்டும் ஏராளமான தெரிவுகளை மறுத்து தாம் தெரிவு செய்த பாதையில் செல்கின்றன.இத்தர்க்கவியலை கணனித்துறையில் உள்ளவர்களால் இலகுவாக விளங்கிக்கொள்ள முடியும். இவ்வாறே கண்டுபிடிப்புகள் தமக்கு முதலான கண்டுபிடிப்புடன் உறவாடுகின்றன. முக்கியமாக கண்டுபிடிப்புகளுக்கு உதவி செய்யும் கருவிகளில் நாம் எவ்வளவு தூரம் உடன்படுகின்றோம் என்பதே. மற்றும் கண்டுபிடிப்பின் ஆரம்பநிலைகள் கண்டுபிடிப்பை வரையறை செய்து அதன்வழி நகர்கின்றன. ஒருவித இலட்சிய நிலைமை எய்தலுக்கான செயல்வழிமுறையாக அறிவியல் வளர்வதை கேள்விக்கு உள்ளாக்கினார்.
அசையாதபுள்ளிகளாக நிலைநிறுத்தப்பட்ட அறிவியற்கொள்கையை அவர் இயங்கியல் புள்ளியாக மாற்றமுனைந்தார். மிகமுக்கியமான விடயம் என்னவெறால் அறிவியற்கொள்கையின் அறிவிப்பின் போதே அது தன்னை பொய்ப்பிப்பதற்கான வெளியை வழங்கிவிட்டதாக கூறினார். ஒருவிதமான இறுகல் நிலைமைகளில் இருந்து தத்துவ, அறிவியல் கோட்பாடுகளை மீட்டு எடுப்பதற்கு அவரது சிந்தனைகள் உதவின. அத்துடன் அவ்விறுகல் நிலைமைக்கு போகவிடாமைக்கான சிந்தனாமுறைமை இங்கு முக்கியமானது. இவரது சிந்தனை எங்கும் தர்க்கவியலின் கூறுகளே விரவிக்கிடக்கின்றன. தர்க்கம் எப்போதும் இயங்கியலை சாத்தியப்படுத்தும்.

மற்றும் பொருளியலில் பொப்பரின் பங்கு மிக முக்கியமானது. எவ்விடயத்தையும் ஒருவிதமான பிரச்சனைக்கு உரிய தீர்வாக அணுகும் விதத்தை வலுப்படுத்தினார்.

PS1 ---> TT1 ---> EE1 --->PS2

என்பது பொருளியலுக்கு மட்டுமல்லாது பல்வேறுதுறைகளில் முக்கியம் பெற்ற Formula ஆகும். அதாவது தரப்பட்ட பிரச்சினைப்பாடுகளை அணுகுதலும் அவற்றுக்கான தீர்வுமுறைகளை ஆராய்தலும் ஆகும். நிலைப்படுத்தப்பட்ட சிந்தனைமுறைமைக்கு அப்பாற்பட்டு அணுகதலே முக்கியமானது. மேலும் நிலைப்படுத்தப்பட்ட உண்மைகள் என்று எதுவும் இல்லை. உண்மை பற்றிய போக்கு ஒன்றே உள்ளது என கூறிச் செல்கின்றார். இதன் பொருத்தப்பாடுகள் ஏலவே அறியப்பட்ட ஒன்றே.
(பரிணாமம், டார்வின், நியூட்டன், ஐன்ஸ்டீன் etc..)

மார்க்சீயம் மீதான பொப்பெரின் பார்வையை எடுத்துக்கொண்டால் கூட அறிவியல் முறை மீதானா தனது அதே விமர்சனத்தையே தத்துவவியல் மீதும் வைத்தார். முதலாளித்துவ சமுதாயம், நுகர்வின் மூலம் ஏற்படுத்தியிருக்கும் சமூக்ப்பிளவு என்பது புரட்சிகர போக்கை குறைநுகர்வு சமூகத்தால் அதிநுகர்வு சமூகத்தின் மீது ஏற்படுத்தும் என மார்க்ஸ் நம்பினார். மார்க்சீயம் என்ற அறிவியல் கண்டுபிடிப்பு பொப்பெரின் கொள்கை மூலம் தவறென ஆகியது. நிபந்தனை மாற்றம் பற்றிய மார்க்சீய நேயர்களின்(!) கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. உலகம் மார்க்சிற்கு பிறகு 100 வருடங்களை கடந்துவிட்டது. சமூக ஒழுங்குகள் ஏராளமான மாற்றங்களைப் பெற்றுவிட்டன. நிபந்தனைகளை மாற்ற வேண்டிய கட்டாயப்படுத்தலுக்குள் மார்க்சீயம் வந்துவிட்டாலும் கூட பொப்பெரின் முடிவின்படி பிழையென ஆகிவிட்டது. தர்கவியலின்படி சரியென்று வைத்து கொண்டால், கடவுள் பற்றிய கோட்பாடுகள் எவ்வாறு காலத்தை உள்வாங்கி நிலைத்து நிற்கின்றதோ (கேவலமாக, பொய்யாக ) அதே போல மார்க்சீயமும் ஆகிவிடும் அபாயம் இருக்கின்றது. ஒன்று மட்டும் சொல்வேன் மார்க்சீயம் என்ற பேரை விட்டு அதன் மனிதநேயத்தை உள்வாங்கி கொள்பவன் தான் மார்க்சிற்கு அண்மையில் பயணிப்பவன். நுகர்வுக்கலாச்சாரம் பற்றிய உள்வாங்கல்களே மார்க்சீயம் பற்றிய உணர்வுநிலைக்கு தேவையானவை. மார்க்ஸ் விரும்பியது அதைத்தான். பொப்பெர் தனது வாதத்தில் எதுவுமே தற்காலிகமானது என கூறிச்செல்கின்றார். மேலும் அவரது உண்மைக்கு அண்மித்ததான நகர்வு என்பது ஒருவித Normalize தன்மையை உருவாகி, இயங்கியலை சாத்தியமாக்கின்றது. (கணிதத்தில் Calculas போன்று) பல்சாத்தியப்பாடுகளை கொண்ட தளத்தில் நிகழ்தகவின் கணியத்தில் வாழ்வு நகர்வதாக உணர்ந்தார். பல்லாயிரம் தாயக்கட்டைகள் பல்வேறு தளங்களில் தமது விளையாட்டை நிகழ்த்தி வாழ்வை நகர்த்திச் செல்கின்றன. வேண்டுமானால் முட்டாள்தனமாக சிந்திப்பவர்களுக்காக மார்க்சீயம்1, மார்க்சீயம்2, மார்க்சீயம்3,மார்க்சீயம்4,மார்க்சீயம்5,மார்க்சீயம்6.... என பெயரிட்டால் இவர்கள் திருந்தகூடும். ஆக, பொபெரின் கொள்கை மார்க்சீயத்தை வீரியத்துடன் நகர்த்தி இயங்கிலை சாத்தியமாக்கும் இல்லையா???

இனி சிறீரங்கன் என்பவரது புசத்தலுக்கு வருவோம்..

//...அட நம் திறந்த சமுதாயத்தின்(After the Open Society) பிரதிநிதி,அது கத்தோலிக்க அறக்கட்டளைகளால் கௌரவ"டாக்டர்"பட்டங்கள் பல பெற்றவராச்சே!ஆக,கார்ல் போப்பர் சொன்னால் அது நிச்சியம் கடவுள்(Das offene Universum) சொன்னதாகவே இருக்கும்..//

என்று சொல்கிறார் ஒரு 37 வயசு பெரியவர். அவருக்கு பொபெர் என்ன சொன்னார் என்றே விளங்கவில்லை.. ஹலோ பெருசு, தனியே தத்துவம் மட்டும் படிக்காம அதோட சேர்ந்த வேற துறைகளையும் படியுங்கவா.. அப்ப தான் சிலது விளங்கும்.. அப்ப தான் புத்தி தெளியும்.. இப்பிடியே விடா அப்புறம் சுரண்டித்தான் எடுக்கணும். மூளையை எரிக்க மட்டும் 3 நாள் தேவை.

//...வீனில் காவல் துறைகஇகும் கம்யுனீஸ்டுக்களுக்குமான கெடுபிடியில் ஒன்பது காவல் துறை நாய்கள் செத்தவுடன், புட்டுக்கொண்டு வந்த அவரது திறந்த சமுதாயத்தின் தெள்ளிய மனது கேகலின் கருத்தியல் மனதைப் பின்பற்றிய கார்ல்மார்க்சிடமும் இத்தகைய போகஇகு நிலவுவதாகச் சொன்ன கையோடு நம்ம அமீபாக்களுக்கு அரிக்கத் தொடங்கிவிடுகிறது..//
உங்களுக்கு இப்பவே அரிக்கெக்கை எங்களுக்கு அரிக்காதா? ஹெகலின் மனதை பின்பற்றி வந்த்தல்ல அது. மேலே விளக்கியிருக்கிறன் ஒரு நாளைக்கு வேலைக்கு லீவை போட்டுடு இருந்து விளங்கும்.

//.."எவருக்கு, இலகுவாகவும் தெளிவாகவும் எடுத்துச் சொல்லும் தெளிவில்லையோ அவர் மௌனித்தபடி தொடர்ந்து கற்றுத் தெளிவாக உரைக்கும் வரை மௌனித்திருப்பது உத்தமம்"..//
உதைத்தானெ கண்ணா புலி உங்களுக்கு சொல்லுது. நீ இரு நான் போராடுறன் எண்டு. கேட்டுக்கொண்டு இருங்கோவன். சும்மா ஒவ்வொரு நாளும் நித்திரையால எழும்பி புலிக்கு பாசிச வால் 2 இஞ்ச் வளர்ந்திட்டுது பினாமிபுலிகள கனவில கண்டன் என்று புசத்துறீங்க..

Welt 1, das ist die physikalische Welt
Welt 2, die Welt der individuellen Wahrnehmung und des Bewusstseins
Welt 3, die Welt der geistigen und kulturellen Gehalte

equal to,

World 1: the world of physical objects and events, including biological entities
World 2: the world of mental objects and events
World 3: the world of the products of the human mind

உளவியல் மீது மார்க்ஸ் அதீத கவனம் கொண்டிருந்த போதும் அவரது எழுத்துக்களில்
அது வராமல் போனது துரதிஸ்டவசமானதே. அதன் பின்னான பொழுதுகழிள் பல உளவியலாளர்கள் மார்க்சீயத்துடன் உளவியலை இணைத்து புதிய கருத்துருவாக்கங்களை உருவாகுவதற்கான முயற்சிகள் நடந்தது. அது உருப்படியாய் நிறைவேறவில்லை. அப்பவே உங்களை போல லொங்கு கூட்டம் ஒண்டு இருந்திருக்குது. கருத்தியல் வாதம், பொருள்முதல் வாதம் வெறுமனே கருத்து, பொருள் சார்ந்ததல்ல.

சிறீ அண்ணா,
எனக்கு ஜேர்மன் மொழி தெரியாது. ரொம்ப கஸ்டப்பட்டு போனேன். அதை தமிழ்ல போட்டிருக்கலாம் தானே.உப்பிடி தான் உங்கட எல்ல வேலையளும்.. விளங்குதே.. ஜேர்மன் தெரியாதவனுக்கு ஜேர்மனில எழுதுறியள்.
ம்ம்ம்..

அப்புறம்,
உங்களை பெரிய கெட்டிகாரன் எண்டி நினைச்சு புல்லரிச்சு போய் இருக்கினம் புளொக்கேர்ஸ்.. உங்கட அவ்வளவு பதிவையும் ஒரு கை பாப்பம் எண்டி இருக்கிறன்.

1.
இலங்கையில் இருந்து இன்றைய பிரச்சனையை பார்க்கும் பார்வையுடன்.

2.
கணிதம் மற்றும் பௌதீகவியல் பார்வையுடன் மட்டும்

உங்கட அரங்கு அதிரப் போகுது. உங்கட புழுத்தலுகள் எல்லாருக்கும் தெரியதானே வேணும்.

புழுத்தல்-1-

1.//..கருத்து வளையுங்களுக்கப்பால் நாம் மனிதவுணர்வகளை...அதிகம் உயர்த்திப்பிடிப்பவன..//
2.//காவல் துறைகஇகும் கம்யுனீஸ்டுக்களுக்குமான கெடுபிடியில் ஒன்பது காவல் துறை நாய்கள் செத்தவுடன.....//

மனித உணர்வு???
தூ...

அன்புள்ள சிறீரங்கன் அண்ணா,
ஆரோக்கியமான உரையாடலை ஆரம்பிக எல்லொருக்கும் விருப்பமே. முன்முடிவுகளுடன் பிரச்சனையை அணுகுபவர்களுடன் அதை நிகழ்த்த முடியாது.



சிறீரங்கனின் பின்னூட்டம்-2.

//..இனி சிறீரங்கன் என்பவரது புசத்தலுக்கு வருவோம்..

//...அட நம் திறந்த சமுதாயத்தின்(After the Open Society) பிரதிநிதி,அது கத்தோலிக்க அறக்கட்டளைகளால் கௌரவ"டாக்டர்"பட்டங்கள் பல பெற்றவராச்சே!ஆக,கார்ல் போப்பர் சொன்னால் அது நிச்சியம் கடவுள்(Das offene Universum) சொன்னதாகவே இருக்கும்..//
என்று சொல்கிறார் ஒரு 37 வயசு பெரியவர். அவருக்கு பொபெர் என்ன சொன்னார் என்றே விளங்கவில்லை.. ஹலோ பெருசு, தனியே தத்துவம் மட்டும் படிக்காம அதோட சேர்ந்த வேற துறைகளையும் படியுங்கவா.. அப்ப தான் சிலது விளங்கும்.. அப்ப தான் புத்தி தெளியும்.. இப்பிடியே விடா அப்புறம் சுரண்டித்தான் எடுக்கணும். மூளையை எரிக்க மட்டும் 3 நாள் தேவை...//
//..அன்புள்ள சிறீரங்கன் அண்ணா,
ஆரோக்கியமான உரையாடலை ஆரம்பிக எல்லொருக்கும் விருப்பமே. முன்முடிவுகளுடன் பிரச்சனையை அணுகுபவர்களுடன் அதை நிகழ்த்த முடியாது...//

ஐயா அறுபது வயதுச் சாமி,எனது மூளையைச் சுரண்டியெடுப்பது இருக்கட்டும். உங்கள் மூளையைப் புரட்டிப்போடுவதற்கு நீங்கள் எழுதிய போப்பர் சாம்பாரே போதும் சாமி.மார்க்சியத்தை உளவியலாலோடு முடுக்கிய புரைட்டின் புண்ணாக்கும் தெரியும் .இது இப்படி இருக்கட்டும்! உங்கள் மார்க்சீயப் புரிதலே அதைவிட படு தேவலை.ஆனால், நீங்கள் காட்டும் படம் நன்றாக ஓடாது தம்பி.கார்ல் போப்பர் அறிதலில் நீங்கள் அவிழ்த்துவிடும் புஷ்வாணங்களைத்தான் நான் கேட்டறியும் நிலையொன்று ஒரு கால் நூற்றாண்டின் முன் இருந்திருக்கும்.எனவே வேலை மெனக்கட்டு போப்பர் படைத்ததை தட்டச்சுத் தட்டுவது அல்ல அறிவு.அதைவிட அவர் எங்கே சறுக்கிறார் என்று உங்கள் புரிதலோடு வாருங்கள்.எனக்குச் சொன்னவைகளை மீள நீங்கள் படித்துப்பாருங்களேன்.அது,கண்ணாடி முன் நீங்கள் நின்று புலம்புந் தரணங்களாக உங்களையே வந்து தாக்கும்.நானெடுத்துப் போட்டவை அவர் தனக்கே உலைவைத்த இனவாதக் கருத்து முதல் வாதத்தை. படபடக்காமல் முழுமையாக வாசித்து, மனித சமூகத்தில் முழு மொத்த மனிதகுலமும் ஒருங்கே இணைய முடியாதென்னும் போப்பரின் பினாத்தலுக்கும்,அதைச் செய்ய விரும்புபவர் ஜனநாயகத்தை எதிர்பதென்பதன் நிறுவல்கள்-வறுவல்களையுங் கொஞ்சம் சொல்லுங்கோ.போப்பர் முன்னங்கொண்ட மார்க்சிய வேடம் ஏன் கலைந்ததென்பதற்கு மேலுள்ள புலுடாக்களும் ஒரு காரணம்.

கேகலில் அந்நியமாதலென்ற கருத்தியலானது கருத்து முதலாய்க் குவிந்திருக்கும் இறையிடமிருந்து அந்நியமானதென்ற பொருத்தப்பாட்டை மீறிக் கார்ல் மார்க்ஸ் கண்ட உழைப்பு ,உழைப்பாளியிடமிருந்து அந்நியப்படுவதற்கான தரணத்தை உள்வாங்கியதற்கும் போப்பர் போடும் முடிச்சைத்தாம் கேகலின் கருத்தியல் மனதென்றேன்.இதைக்கூடப் புரியாத புகழ்பூத்த அமீபா, உங்களின் தாழ்மனதை நான் அறிவேன்.புளக்கரில் எங்கே நம்ம தலைபோய்விடுமொவென அச்சம் வேண்டாம். உங்கள் தலையை உருட்டுவதல்ல என் நோக்கம்.ஏனெனில், நீங்கள் ஒரு மண்ணும் இதுவரை அறிவியற்றளத்தில் எடுத்துப் போடவில்லை.அப்படியெடுத்துப் போட்டால் காட்டுங்கோ நாங்கள் அந்தக் கோட்டைக்குள்ளும் போய்வந்து பார்க்கிறோம்.இப்போது போப்பரின் மக்கள் விரோதக் கருத்துக்களையே உங்களோடும்-மற்றவர்களோடும் பகிர்ந்தது.நீங்கள் அதற்காகப் பெளதிகம்,பொருளியல்,போர்மூலா என்று பாடஞ்செய்து பகிர்வது,நேசரிப் பிள்ளை அன்று படித்த ஏ.பி.சீ.டி.யினை பெற்றோருக்குச் சொல்வதுபோன்றே உங்கள் முயற்சியும் உண்டு.

இறுதியாக வயதுக்கும் அறிவுக்கும்(...) என்ன சம்பந்தமென்று கொஞ்சம் சொந்தமாகச் சிந்தித்துரைக்க முடியுமா?



அமீபாவின் பின்னூட்டம்-3

சிறீ அண்ணன்,
நான் ஒன்றும் பொப்பெரின் விசுவாசியோ பொப்பெரை, பொப்பெர் தான் சமூகத்தை வாழ வைக்க வந்த வழிகாட்டியோ என்று சொல்பவனும் அல்லன். பொப்பெரோடு நான் முரண்படும் கணங்கள் அவரது அறிவியல் பற்றிய கருதுகோள்களிலெயே உண்டு. அதற்கு சமாந்தரமான பர்வையையே அவர் தத்துவம் (பொருளியல் சார்ந்த) மீதும் கொண்டிருந்தார். அதன் பாதக அம்சங்களையும் பேச முடியும். அதுவல்ல பிரச்சனை. உங்களை போன்றவர்களின் நிராகரிப்பு. அது உருவாக்கும் ஆரோக்கியமற்ற சமூக உற்பத்திகள். எனது பிரச்சனை என்னவென்றால் உங்களை போல ஒருத்தரை ஒரேயடியாக முத்திரை குத்தி நிராகரிக்க முடியாத மனநிலையை சார்ந்த சமூகப்பிரதிநிதி. ஏனெனில் இலகுவாக எல்லாவற்றையுமே நிராகரித்து சமூகத்தை இன்னும் மோசமான நிலைமைக்கு கொண்டு போகும் நிலையில் எங்கள் சமூகம் இல்லை என்றே நான் கருதுகின்றேன். எங்கள் சமுகம் சார்ந்து சூழல் சார்ந்து எமக்கு முன்னான தெரிவை, நமக்கு பொருத்தமான தேர்வை எடுத்துக்கொள்ளும் மனநிலைக்கு சமூக யதார்த்தம் எங்களை ஆக்கிவிட்டிருக்கின்றது. உங்களை போல ஒரெயடியாக சில விடயங்களை மறுத்து நிப்பவர்களை காணும் போது அந்த வேதனை அதிகரிக்கின்றது. எழுத்தின் தேவை ஆரம்பிக்கப்பட்ட செயற்பாட்டை முன்னகர்த்தி செல்வதற்கே என அர்த்தம் கொள்பவன் நான். என்றைக்கும் எழுத்தாள அடையாளம் ஒன்று எனக்கு இருக்ககூடாது என்பதே எனக்கான விருப்பம். புலிகளின் பாசிசம் மோசமானது தான். ஆனால். புலிப்பாசிசத்தின் மூலவேர் எது? இச்சமூகம் தான் புலிகளின் பாசிச மனோநிலைக்கு தண்ணீர் ஊற்றியதா என யோசிக்க வேண்டும். (உங்கள் நிராகரிப்பின் அரசியலுக்கு முன்னால் உள்ள பாசிசம் அதைவிட மோசமா இருக்கு சிறீ அண்ணன்.) இங்கிலாந்தில் தமிழ் இளஞ்சமுதாயத்தின் வாழ்வுமுறையை பார்த்தால், புலிகளின் பாசிசம் தான் சரியோ என்ற எண்ணப்பாட்டுக்கு வரவேண்டி இருக்கிறது. துவித எதிர் மனநிலைகளில் வாழுபவர்களை வைத்து எவ்வாறு ஒரு விடயத்தை முன்னகர்த்த முடியும்? (அண்மையில் முசாரப் பற்றியும் பாகிசஸ்தான் பற்றியும் ஒரு பெண் இயக்குநர் தயாரித்த Documentry film ஒன்றை பார்க்க நேர்ந்த போது பெரும் வியப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் மக்கள் சில இடங்களில் ஒரு சர்வாதிகாரியை தமது தெரிவாக வைத்திருப்பதற்கான காரணங்களை கேட்ட போது. அமெரிக்காவின் விழுங்கும் ஏகாதிபத்திய கொள்கையில் இருந்தும் முஸ்லிம் அடிப்படைவாதிகளிடம் இருந்து நாட்டை எவ்வாறு பாதுகாக்க வேண்டி இருக்கின்றது என்பதை விபரித்த போது.) சில விதமான நடைமுறை சார்ந்த செயற்பாடுகள் மட்டுமே அங்கீகரிப்பின் மனநிலையையும் முன்னகர்த்தும் செயற்பாடுகள் பற்றிய கவலை மற்றும் கருத்தியலை உருவாக்கும். அங்கே தான் ஆரோக்கியமான கருத்தியல்கள் பிறக்கும். சிறீ அண்ண்ன், நான் விரும்புவது பூக்கோவினதோ, லியோதார்த்தினதோ, பொப்பெரினதோ,மார்க்சினதோ கருத்துக்களை அல்ல. அதை உள்வாங்கிய உங்கள் கருதுக்களையே. (உங்களது உள்வாங்கல்கள் கூட உங்களது செயற்பாடுகள் சார்ந்து வேறுபடும். நடைமுறையின் பிரச்சனைபாடுகளை நீங்கள் எதிர்கொள்ளும் விதம், அதன் மீதான தீர்வு பற்றிய உங்கள் பார்வை கூட செயற்பாடு சார்ந்து மட்டுமே உருவாக முடியும்.) ஒரு விடயத்தை படிப்பதென்பது மேற்கோள் காட்டுவதற்கு அல்ல சிறீ அண்ணன். செயற்பாடு சராத கருத்தியலக்ள் ஒருவிதமான இறுகல் போக்கையே உருவாக்கும். அதன்மீது செயற்பாட்டு வண்டியை ஓட்டுவது மிககடினமான செயல் என்றே நான் நினைக்கின்றேன். உங்களது பார்வையை தளர்த்துங்கள் அது உங்களை சமூகம் மீது ஆரோக்கியமான பார்வை ஒன்றை உருவாக்கும். மார்க்சின் மனித நேயம் நின்று நிலைக்க பாடுபட உதவும். நீங்கள் சொல்லும் அறிவியல் தளம் என்ற ஒன்று இல்லை. அது ஒருவனது சமூகச்செயற்பாடு சார்ந்து மட்டுமே உருவாக முடியும் என்று நம்புபவன். அதுதான் உங்களது சமூகம் மீதான ஆரோக்கியமான பார்வையை நிரூபிக்கும். அல்லது உங்களது பார்வை ஆரோக்கியம் அற்றதாகவே கொள்ளப்படும் அபாயமிருக்கிறது.

//கேகலில் அந்நியமாதலென்ற கருத்தியலானது கருத்து முதலாய்க் குவிந்திருக்கும் இறையிடமிருந்து அந்நியமானதென்ற பொருத்தப்பாட்டை மீறிக் கார்ல் மார்க்ஸ் கண்ட உழைப்பு ,உழைப்பாளியிடமிருந்து அந்நியப்படுவதற்கான தரணத்தை உள்வாங்கியதற்கும் போப்பர் போடும் முடிச்சைத்தாம் கேகலின் கருத்தியல் மனதென்றேன ..//

அதை நான் எனது கட்டுரையில் தெளிவுபடுத்தி இருக்கிறேன். ஒற்றையாக அப்பிடி நினைக்காதீர்கள். இரண்டுக்கும் இடையிலான புள்ளியில் அவர் ஒன்றுபடுவதை பாருங்கள். ஜோர்ஜ் புஷ் மாதிரி தனியே இரு அர்த்தப்பாடுகள் தாம் இருக்கின்றனவென்ற நிலைப்பாடுகள் எவ்வளவு வன்முறையானவை என்று உங்களுக்கு தெரியும். 0 இற்கும் 1 க்கும் இடையில் உள்ள பரந்த வெளியை நிராகரிக்காதீர்கள். உங்களது துவித எதிர் பற்றுய மனநிலை உங்களைப் பாதிப்பதை விட்டுவிட்டு பார்த்தாலும் உங்களது பிள்ளைகள் மீது தாக்கம் செலுத்தும் அது அவர்களது வழ்வை பாதிக்கும். அவர்கள் தமக்கான தெரிவை சுதந்திரமாக மேற்கொள்வதற்கும் பெரும் தடையாக இருக்கும். அவர்கள் தாமாக ஒரு சமூகவெளியை முழுவதுமாக உள்வாங்கிக் கொள்வதற்கு பெரும் தடையாக இருக்கும். அதற்காகவாவது. நான் ஒரு வரியில் சொன்ன பொப்பெரின் கருத்துக்கு பதிவு எழுத தொடங்கிய தாங்கள் எனது மற்றைய கருத்துகளுக்கு எதுவுமே சொல்லவில்லையே... பொப்பெர் என்றவுடன் உங்களுக்கு ஏற்பட்ட உணர்ச்சிகளுக்கும் புலி என்றவுடன் ராம் கு ஏற்படும் உணர்ச்சிகளுக்கு ஏதாவது வித்தியாசம் இருக்கிறதாக கருதுகிறீர்களா? இல்லை. முன்னனுபவம் சார்ந்த முடிவுகளுடன் எதையும் அணுகாதீர்கள். இயங்கியலுக்கு அதுவே எதிரியென்று உங்களுக்கு புரிகின்றதா? உங்களுக்கான எனது இரண்டாவது பின்னூட்டத்தில் கூட நான் சொன்னவற்றை விட ஒரு சில வரிகளில் என்னை பிழைபிடிப்பதே உங்களது நோக்கமாயிருக்கிறது. அதை முன்முடிவு என்று தானெ எடுக்க வேண்டும். வயசுக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இருக்குங்கண்ணா. வயசு அறிவை செயற்பாட்டு தளத்திற்கு அண்மையில் அதற்கு சமாந்தரமாக கொண்டு செல்லும்.
வயசும் அனுபவமும் கூட கூட அறிவு செயற்பாடு சார்ந்து விரிவு பெறும். மற்றைய அறிவு வெறும் புத்தகங்களுடனும் மேற்கோள்களுடனும் முற்றுபெற்றுவிடும். (அண்மையில் கூட wealth of networks எனும் புத்தகம் ஒன்று வந்தது. அதன் main theme வேறு. ஆனால் Data, Information, knowledge, wisdom என்பதன் ஓட்டம் எவ்வாறு வழிப்படுத்தபடுகின்றது. வெறும் தகவல்களை அறிவாக மாற்றுவத்ற்கு சூழ்ல் சர்ந்து செயற்பாடு அவசியம். அதன்பின் தான் wisdom என்பதன் நோக்கம் பற்றி உரையாட முடியும்.) ஒருமனிதன் எவ்வாறு அறிவுத்திரட்சியின் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகர்கின்றான். wisdom என்பதுவும் மீண்டும் மீண்டும் தம்மை ஒருவகை இயங்கு தளத்திற்கு தயார்படுத்திகொள்கின்றன. நீங்கள் நிற்கும் இடம் Information இற்கும் knowledge இடைப்பட்டது. அறிவு உருவாக்கத்திற்கு நீங்கள் உகந்தஉற்பத்தி என்ற போது கூட இறுகல் தன்மை அதை உருவாகவிடாமல் தடுத்தே நிற்கும். அதை விடுங்கவா... பெளதிகம்,பொருளியல்,போர்மூலா பாடம் செய்வதல்ல எனது நோக்கம். தத்துவம் என்பது வானியல், கணிதம், கலை, பௌதீகம், உளவியல் போன்றவற்றுடன் பின்னிப்பிணந்தது. நான் சொல்ல வருவது. ஆரம்பகால தத்துவ அறிஞர்கள் எல்லோரும் அவ்வகைமாதிரியை சேர்ந்தோராகவே இருக்கின்றனர். அத்ற்கான இறுதி மேதையாக மார்க்சை சொல்லலாம். அவர் உலகை மேற்போந்த துறைகளினூடு உள்வாங்கிக் கொண்டார். ஆனால் சமூகப்பொருளாதாரம் பற்றியே தனது வெளிப்படுதிறனை வடிவமைத்துக்கொண்டார். ஆனால், கால ஓட்டத்தில் மேற்போந்த துறைகள் வேறுபடுத்த்ப்பட்டது தான் இவ்வளவு பிரச்சனையோ என்று தோன்றுகின்றது. அதற்கான தொடர்புகள் குறைக்கப்பட்டதுடன் ஒருவிதமான குறுகிய பார்வை குடிகொண்டுவிட்டது. (Noam chomsky ஐ தூக்கிப்பிடிக்க தான் வேண்டி இருக்கிறது. அவரது பார்வை விரிந்தது.) ஆனால் இன்று மீண்டும் கல்வி முறையில் ஒருவிதமாதன combine தன்மையை கொண்டு வர எத்தனிக்கின்றனர். அதன் மூலம் புதிய விடயங்கள் உருவாகும் என்பது தான் அதன் அடிப்படை. அதனால் தானோ என்னவோ நான் சொல்வது உங்களுக்குஅப்பிடி தெரிகின்றது.
.
//நீங்கள் ஒரு மண்ணும் இதுவரை அறிவியற்றளத்தில் எடுத்துப் போடவில்லை.//

அறிவியல் கட்டமைக்கும் ஒருவிதமான அதிகாரம் மிக மோசமானது. உங்களது இக்கருத்தியல் எவ்விதமான வன்முறை சர்ந்தது என்று நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா? ஒருவனை நீங்கள் மறுதலிக்கும் முறை எவ்வளவு கொடூரமானது என்று பாருங்கள். இதே அம்சங்களையே நான் புலிகளிடமும் கண்டேன் நடைமுறையில். கருத்தியல் சார்ந்து கூட இதனை மறுதலிக்க முடியாமல் உள்ள உங்களுக்கு புலிகள் நடைமுறை சார்ந்து இயங்குவது பாசிசமாக இருப்பது தான் முரண்நகை.

//ஆரோக்கியமான உரையாடலை ஆரம்பிக எல்லொருக்கும் விருப்பமே. முன்முடிவுகளுடன் பிரச்சனையை அணுகுபவர்களுடன் அதை நிகழ்த்த முடியாது.//

எனக்கு உங்களை பார்க்கும் கணங்களில் எனது தாத்தா வை பார்க்கும் உணர்வு ஏற்படுகின்றது. பொருளியலில் முனைவர் பட்டம் பெற்ற அவரால் இறுதிவரை சமூகம் சார்ந்து இயங்க முடியாமல் (விருப்புறுதி இருந்தும் கூட) போனதற்கு காரணம் அவரது ஏராளமான சமன்பாட்டு வாதங்களும் முன்முடிவுகளும் மட்டுமே. ஒரு உரையாடலைக் கூட ஆத்மார்த்தமாக நிகழ்த்திவிட முடியாது அவருடன். உரையாடலின் பின்பு வெறுப்பு மட்டுமே எஞ்சும். சகல் உறவுகளில் இருந்தும் தனிமைப்பட்ட அவரது முன்முடிவுகளுக்கு அப்பாலும் என்னால் மட்டுமே நேசிக்கப்பட்டார். உங்களையும் அப்பிடி தான் பார்க்கின்றேன். உங்களது மனநிலை உரையாடலை நிகழ்த்த்துவத்ற்கான ஆரம்ப புள்ளிகளையே மறுத்து நிற்பது. அதை மீண்டும் மீண்டும் நீங்கள் நிகழ்த்துகிறீர்கள் என்பதுதான் வேதனை.