உரையாடல்- 15 (பெயரிலி, சிறீரங்கன், சிவப்பு மார்க்சியன், வளர்மதி, கொழுவி)

பெயரிலின் அலைஞனின் அலைகள் தளத்தில் இடம்பெற்ற உரையாடல்.

I'm Changing My Name to Chrysler (Arlo Guthrie)



சிறீரங்கனது பின்னூட்டம்.

மிக அருமையான கருத்துப்படம்-பாடல்.பலநூறு பக்கங்களில் சொல்லும் இன்றைய பங்குச்சந்தை-சந்தைப் பொருளாதாரச் சூதாட்டத்தை மிக இலகுவான வரிகளினாலும்-கருத்துப்படங்களினாலும் விமர்சித்து,அதன் மக்கள் விரோத நிலையைச் சுட்டுவது அருமையான முயற்சி.


பெயரிலியின் பின்னூட்டம்.

ஸ்ரீரங்கன்,
இரண்டோ மூன்றோ ஆண்டுகள் முன்னதாக இதே பதிவிலே இதே பாடல் பற்றி இரண்டு வரிகள் பேசினோம்; ஞாபகமிருக்கக்கூடும்.

இம்முறை நல்ல கருத்துப்படங்களோடு அகப்பட்டுக்கொண்டது.


சிறீரங்கனது பின்னூட்டம்.

//இரண்டோ மூன்றோ ஆண்டுகள் முன்னதாக இதே பதிவிலே இதே பாடல் பற்றி இரண்டு வரிகள் பேசினோம்; ஞாபகமிருக்கக்கூடும்.//


நான் மறந்திட்டேன்.ஞாபகம் வருகிறது உங்கள் சுட்டிக்காட்டுலுக்குப் பின்.பெயரிலி, ஏன் உங்கள் பதிவினது பின்னூட்டங்கள் தமிழ் மணத்தில் தெரிகிறதில்லை?


சிவப்பு மார்க்சியனினது பின்னூட்டம்.

பெயரிலி,
இன்னும் 2,3 வருடத்திற்குப் பின் இப்பாடலை நீங்கள் போட்டாலும் சிறீரங்கன் இதே மாதிரி பின்னூட்டம் இடுவார்.

இதில் இருந்து என்ன தெரிகிறது?
பொருளாதாரத்தால் ஒடுக்கப்பட்ட வர்க்கத்திற்காக என்றும் குரல் கொடுக்கக் கூடிய ஒருவர் அவரே.. ஆகையால் தான் அன்றும் இன்றும் ஒரே பாடலுக்கு பின்னூட்டம் விட்டு தனது ஏகாதிபத்திய எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்.

எமது மார்க்சியத்திலும் மார்க்சியவாதிகளிலும் உள்ள அழகு என்னவென்றால், அவர்கள் ஒரு பாடலுக்காக 2,3 வருடம் என்ன 20,30 வருடங்களே தமது எதிர்ப்பத் தெரிவிப்பார்கள். அவர்களின் வாரிசுகளும் இதே பாடலுக்காக இதே மாதிரி எதிர்ப்பைத் தெரிவிப்பார்கள்.

இப்படியான மார்க்சியர்களைப் பெற நாம் என்ன தவம் செய்துவிட்டோம்?

முதலாளித்துவம் ஒழிக.
மார்க்சியம் வாழ்க..
மக்கள் எழுச்சி ஓங்கட்டும்
புதிய ஜனநாயகம் வளரட்டும்.

-சிவப்பு மார்க்சியன்

சிறீரங்கனது பின்னூட்டம்.

//இன்னும் 2,3 வருடத்திற்குப் பின் இப்பாடலை நீங்கள் போட்டாலும் சிறீரங்கன் இதே மாதிரி பின்னூட்டம் இடுவார்.

இதில் இருந்து என்ன தெரிகிறது?
பொருளாதாரத்தால் ஒடுக்கப்பட்ட வர்க்கத்திற்காக என்றும் குரல் கொடுக்கக் கூடிய ஒருவர் அவரே.. ஆகையால் தான் அன்றும் இன்றும் ஒரே பாடலுக்கு பின்னூட்டம் விட்டு தனது ஏகாதிபத்திய எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்.

எமது மார்க்சியத்திலும் மார்க்சியவாதிகளிலும் உள்ள அழகு என்னவென்றால், அவர்கள் ஒரு பாடலுக்காக 2,3 வருடம் என்ன 20,30 வருடங்களே தமது எதிர்ப்பத் தெரிவிப்பார்கள். அவர்களின் வாரிசுகளும் இதே பாடலுக்காக இதே மாதிரி எதிர்ப்பைத் தெரிவிப்பார்கள்.//


சிவப்பபு மார்க்சியன்,
வணக்கம் மார்க்சியரே-வணக்கம்!

இன்றுவரை மார்க்சியம் குறித்து நீங்கள் மட்டுமல்ல,உலகம் பூராகவும் எதிர்ப்பைக் கருத்தியல் மற்றும் வன்முறைசார் கருத்தியற்றளத்திலும் முன்னெப்படுபவர்கள் இருக்கும்வரை, நமது தலைமுறையும் இருக்கும்-பயப்படாதீர்கள்!,உலகை ஆள்பவர்கள் பல் நூறு ஆண்டுகளாக மார்ச்சிய-இடதுசாரிய அமைப்புக்களை எதிர்த்துக் கருத்தாடுவதும்-தாக்குவதும் ,தண்டனைக்குட்படுத்துவதும் தொடர்கிறதே,அது ஏனங்க?

கடந்த சனிக்கிழமை உலகம் பூராகவுமுள்ள நாசிகள் ஜேர்மனியப் பெரு நகரான-கோல்ன் மாநகரில்(கேளினில் Koeln) இஸ்லாமியப் பள்ளிவாசல்கட்டுவதை எதிர்த்துக் கூட்டம்போட்டார்கள்.இத்தகைய கூட்டத்தை ஜனநாயகத்தின் பெயரால் அனுமதித்த ஜேர்மனிய அரசு,நாசிகளைப் பாதுகாக்கப் பொலிசை ஏவிவிட்டது.இத்தகைய இருண்ட மானுட விரோதத்தை எதிர்த்து இடதுசாரிகள் வழிமறித்து அவர்களைத் தடுத்துப் பெருவாரியான மக்களை அணி திரட்டிப்போராடி, நம்மையெல்லாம் காத்தார்கள்.இறுதியில் நாசிகளை விட்டுவிட்டு, இடது சாரிகளையும் அவர்களது குழந்தைகள்-குட்டிகளையும் கூட்டுக்குள் அடைத்து இரண்டு நாட்கள் கழித்து வீட்டுக்கனுப்பியது போலீசு.இதுவெல்லாம் எதைச் சொல்கிறது சிவப்பு மார்க்கு?

கடந்த கிழமை திவாலாகிப்போன வங்கிகளுக்கு மக்களின் வரிப்பணத்தைக் கோடிகோடியாய் அள்ளிக்கொடுத்துத் தமது ஆதிகத்தைத் தக்கவைக்கும் புஷ், எதற்காக இங்ஙனஞ் செய்கிறார்?-இந்தக் கொடுக்கல் வாங்கலுக்குப்பின் நேற்றுமட்டும் ஒரு பெறல் மசகு எண்ணை 150.டொலர் வரை உயர்ந்து,25 டொலரை ஒரு தினத்தில்மட்டும் அள்ளி வழங்கியதே இஃது எப்படிச் சாத்தியமானது?; இதன் சூத்திரம் புரியாதிருக்கும்வரை நாங்களும் எல்லாவற்றையும் குறித்து ஓலமிட்டுக்கொண்டுதான் இருப்போம்.இது தவிர்க்கமுடியாத போராட்டம்.நீங்க சில இலட்சம் மக்களின் வாழ்வு மேம்பாட்டைக் கனவுகொள்ளும் கருத்துக்களோடு உலாவருவதாக உங்கள் எழுத்தின்வழி அறிகிறேன்.நாங்கள்(...) கோடிக்கணக்கானவர்களாகிய நமது வறுமைக்கு வழி தேடுகிறோம்-அவ்வளவுதாம்; இங்கே-வித்தியாசம்!மற்றும்படி நீங்கள் சிவப்பா அல்லது கருப்பா என்பதல்ல நமது நோக்கு.இதுவெல்லாம் தங்களது சோப்புக் கண்களுக்குப் புலப்படாதவரை நாமும் இருப்பதன் அவசியம் தொடரும்.

இப்படிக்கு,
காக்கா,கா...கா..காக்காக்கா,கா கா கா கா...அண்டங்காக்க கா,கா கா கா

சிவப்பு மார்க்சியனது பின்னூட்டம்.

அப்போ 20,30 வருசமல்ல 200,300 வருடங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க போகின்றேன் என்கிறீர்கள். என்ன செய்ய எல்லாம் விதி.

உங்களிலோ உங்களது கருத்திலோ எனக்கு முரண்பாடு இல்லை தலைவா. ஆனால், உங்களது சில செய்கைகள் முதலாளித்துவத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. அது புரியலையே உங்களுக்கு. :( ஒரு பாட்டுக்கு 2,3 வருசத்துக்கு ஒருக்கா பின்னூட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தா எப்படிங்க நாம மாற்று பொருளாதார முறையை நடைமுறைப்படுத்துறது.?

ஜேர்மனில கூட்டம் போட்டவங்களைப் பிடிச்சுக் கொண்டு போறவங்களை நான் ஏனுங்க ஆதரிக்கப் போறன். நம்ம வேகம் போதாதுங்க. அதை தான் சொல்றேன். நீங்க பாயின்ட விட்டு எங்கயோ போறீங்களே..! முதலாளித்துவம் என்னமா தன்னை மாற்றி மாற்றி நிலைநிறுத்துது பார்த்தீங்களா? அதை உடச்சு நொருக்க நமக்கு வேகம் போதாது. நம்மட்ட முறையான நகர்வுகள் இல்லங்க. இதைச் சொன்னா உடன நீங்க மார்க்சிய விரோதி ங்கிற மாதிரி பட்டம் கட்டுறீங்களே..!

புஷ் பணத்தைக் கொட்டி தன்னை தக்க வைப்பான். நாமளும் அப்பிடிச் செய்யணும். செய்யிற மாதிரி வளர்த்துக்கணும். அதை தனே நான் சொல்றேன். நீங்க என்னை புஷ் ட பக்கத்துக்கு துரத்தி விடுறீங்களே.! நியாயமா?

முதலாளித்துவத்தின் தேவை. ஓலமிடுபவர்களே.!! அவர்கள் இருக்கும் வரை முதலாளித்துவம் உயிர்வாழும். இருந்து பாருங்களேன்.

நீங்க கோடிக்கணக்கான மக்களுக்காக குரல் கொடுத்திட்டு இருப்பீங்க. ஆனா அவங்கட வறுமை தொடர்ந்து கொண்டே இருக்கும். இதுதான் என்னுடைய கேள்வி. நீங்க கொடுத்த குரல்லால இன்னும் கொஞ்சம் அதிகமன ஆகள் வறுமையாகிடுவாங்க.

நான் குரல் கொடுத்தா உனக்கு என்ன பிரச்சனை எண்டு நீங்க கேக்கலாம். உங்கட ஓலத்துக்கு பினால ஓலம் போடுறதுக்கு ஒரு கூட்டம் வருதே. அதுதான் நமக்கு பிரச்சனையா இருக்கு. எல்லா இடத்திலயும் ஒரே ஓலம். மனிசர் நிம்மதியா வேலை செய்ய முடியல. உங்க ஓலம் எலாரையும் பழதாக்குது தலைவா.

உங்கட எல்லாம் எண்ட சோப்புக் கண்ணுக்கு விளங்கிச்சு. விளங்கி என்ன பண்றது எண்டு யோசிச்சு யோசிசு மண்டை காஞ்சு போச்சு தலைவா. எல்லா சூத்திரமும் நல்லா புரியும் தலைவ எனக்கு. புரிஞ்சுட்டு அப்புறம் என்ன பண்றது எண்டு யோசிக்க மண்டை விறச்சு போகுது. சூத்திரம் விளங்கிட்டுது எண்டு புல்லரிச்சு போய் தூங்குற விருப்பம் எனக்கில்லை. சூத்திரம் புரிஞ்சா அதை மாத்தணும் தலைவா. மாத்திறதுக்கு வெளிக்கிட்டா கொஞ்ச பேர் ஓலம்வாத் தொடங்குறாங்க. :(

2, 3 வருசத்துக்கு ஒருக்கா ஒரே பாட்டுக்கு பின்னூட்டம் விட்டு விளையாடுறது தான் உங்கட தவிர்க்க முடியாத போராடம் எண்டு கருதினால் நான் என்னங்க செய்யிறது? அதுக்கு மேல கனக்க இருக்கு தலைவா.

/நாங்கள்(...) கோடிக்கணக்கானவர்களாகிய நமது வறுமைக்கு வழி தேடுகிறோம்-அவ்வளவுதாம்/
அப்படி வழி தேடினால் நான் கையெடுத்துக் கும்பிடுவேன். ஆனா எனக்கப்படித்த் தெரியலயே தலைவா. ஏதோ பொழுது போக்கிற மாதிரியெல்லோ தெரியுது.

நான் கேக்கிறது உங்களை கையெடுத்துக் கும்பிட செய்யுங்க. அவ்வளவுதான்.

-----------------------------------------------------------------------

நான் ஏதோ சொல்லப் போக நீங்க எங்கயோ போயிட்டீங்க.

2,3 வருசத்துக்கு முதலே விளங்கிட்டுது உங்களுக்கு. சரி. விளங்கினாப் பிறகு என்ன பண்ணனும்? இதுக்கு எனக்கு விடை கொடுத்தா நான் இண்டைக்கே உங்களைப் போல பிளாக் தொடங்கி உங்களை மாதிரியே எழுதுறேன் தலைவா.

சரி உங்க ஜாலியை கெடுத்துட்டன் போல இருக்கு..

ஏதோ பாட்டு பாட தொடங்குனீங்க நான் பாடுறன் நீங்க ஆடுங்க என்ன?

"அண்டக்காக்கா கொண்டைக் காரி ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க..
அச்சுவெல்ல சிரிப்புக்காரி.. ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க"

முதலாளித்துவம் ஒழிக.
மார்க்சியம் வாழ்க..
மக்கள் எழுச்சி ஓங்கட்டும்
புதிய ஜனநாயகம் வளரட்டும்.

-சிவப்பு மார்க்சியன்

சிவப்பு மார்க்சியனினது பின்னூட்டம்.

சிறீரங்கர்,
இன்னுமொரு விசயம். மக்கள் போராட்டம் மக்கள் போராடம் எண்டுறீங்களே அது என்னங்க?

புலம்பெயர்ந்த பன்னிகள் எல்லாம் சேர்ந்து ஒவ்வொரு நாளும் சிறீலங்கா எம்பசிக்கு முன்னால போய் நிண்டு தங்கட எதிர்ப்பை ஏன் வெளிக்காட்டேல்லை.? எல்லா சூத்திரமும் புரிஞ்ச நீங்களாவது ஏதாவது பண்ணலாமே..! புலம்பெயர்ந்த 10 லட்சம் பேரும் ஒரு மாதத்துக்கு ரோட்டுக்கு இறங்கினா என்ன நடக்கும்? உங்களுக்கு தெரிஞ்ச ஆக்களைக் கொண்டு போய் இண்டைக்கே தொடங்குங்கோ பாப்பம். கோடிக்காணகான மக்களின் வறுமையைத் தீர்க்கிறதை விட்டுப் போட்டு முதல் 1 லட்சம் மக்களின் உயிரைக் காப்பாத்தப் பாருங்க தலைவா.

இந்த சூத்திரங்களை விளங்கி வச்சு ஒரு பலனும் இல்லை. இப்பல்லாம் இந்த சூத்திரங்கள் கனபெருக்கு விளங்குது.

சிறீரங்கனது பின்னூட்டம்.

//ஜேர்மனில கூட்டம் போட்டவங்களைப் பிடிச்சுக் கொண்டு போறவங்களை நான் ஏனுங்க ஆதரிக்கப் போறன். நம்ம வேகம் போதாதுங்க. அதை தான் சொல்றேன். நீங்க பாயின்ட விட்டு எங்கயோ போறீங்களே..! முதலாளித்துவம் என்னமா தன்னை மாற்றி மாற்றி நிலைநிறுத்துது பார்த்தீங்களா? அதை உடச்சு நொருக்க நமக்கு வேகம் போதாது. நம்மட்ட முறையான நகர்வுகள் இல்லங்க. இதைச் சொன்னா உடன நீங்க மார்க்சிய விரோதி ங்கிற மாதிரி பட்டம் கட்டுறீங்களே..!

புஷ் பணத்தைக் கொட்டி தன்னை தக்க வைப்பான். நாமளும் அப்பிடிச் செய்யணும். செய்யிற மாதிரி வளர்த்துக்கணும். அதை தனே நான் சொல்றேன். நீங்க என்னை புஷ் ட பக்கத்துக்கு துரத்தி விடுறீங்களே.! நியாயமா?

முதலாளித்துவத்தின் தேவை. ஓலமிடுபவர்களே.!! அவர்கள் இருக்கும் வரை முதலாளித்துவம் உயிர்வாழும். இருந்து பாருங்களேன்.//



சிவப்பு மார்க்சியன்,மீளவும் வணக்கம்.தங்கள் எழுத்தின்வழி சிலவற்றைக் குறித்துரைப்பது அவசியம்.

நீங்க ஊன்றியுறைக்கச் சொல்லும்:

//முதலாளித்துவம் ஒழிக.
மார்க்சியம் வாழ்க..
மக்கள் எழுச்சி ஓங்கட்டும்
புதிய ஜனநாயகம் வளரட்டும்.//


மேற்காணும் கோசம், வெறுமனவே கோசமாகிப்போனதென்பதன் உணர்வினது நிலையில் நீங்கள் மீளவும்-மீளவுஞ் சொல்கிறீர்கள்!இத்தகைய போக்குப் பெயரிலியிடமும் உண்டு.


மேற்காணும் கோசத்தைத் தூக்கிப்பிடித்தபடி தமிழகத்தில் மக்கள் கலை இலக்கியக்கழகம் மற்றும் புதிய ஜனநாயக்கட்சி தமது போராட்டத்தைப் பல தளங்களில் செய்தபடி கைதாகிச் சிறைவரை சென்று மீள்கிறார்கள்-மடிந்தும் போகிறார்கள்!இங்கே-புலம்பெயர் தேசங்களில்-ஓலம்போட்டபின் நாம் ஒடுங்கி விடுவதாகச் செயற்றளம் இருப்பதற்கான காரணம் நீங்கள் அறிந்ததே.தனிநபகர்களின் புரட்சிகர மனது ஒருபோதும் செயற்பாட்டுக்கு வழிவகுப்பதில்லை.இதனால் உங்களது எள்ளலுக்கு நாம் ஆட்படுவது தவிர்க்க முடியாதுதாம்!


உலக ஆளும் வர்க்கமானது மனித சமூகத்தை மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டது இருஷ்சியப் போல்ஸ்விக்கட்சியின் வெற்றிக்குப் பின்பான உலகமாற்றங்களின் காலவர்த்தமானத்தில் ஒரு தேசம் இப்படியும் உருவாக முடியுமென்ற நிதர்சனத்தில்.

"இன்றைக்கு அதே இருஷ்சிய மக்களிடம் கடந்த புரட்சிபற்றிக் கேட்டால்,அன்றைய இருஷ்சியப் புரட்சியானது சாரம்சத்தில் புரட்சியல்ல.அது, பிரஞ்சுப் புரட்சியைப்போல் பார்க்கமுடியாதது.மற்றும்படி,ஜேர்மனிய மன்னன் கைசர் வசமிருந்து பெற்ற பணத்தில் லெனின் இருஷ்சிய ஆளுமையை உடைத்தார்-ஐரோப்பாவில் பலம்பொருந்திய இருஷ்சிய யார் மன்னனையும்,அவனது ஆளுமை-ஆதிக்கத்தை உடைக்கவெண்ணிய டொச்ச கைசர் லெனின் மூலம் இதைத் செய்ததாக இன்று சொல்லித் திருகிறார்கள் இருஷ்சியர்கள்".


இதிலிலிருந்து ஒரு உலகத்தைப் புரிய முடியும்.லெனின் ஜேர்மனிய மன்னனின் பண உதவியைப் புரட்சிகரக் கட்சிக்கும்,புரட்சிக்கும் பயன்படுத்திப் புரட்சியை சாதிக்கும் தந்திரபோயத்தில் அன்று செயற்பட்டதை இன்று இங்ஙனம் புரிவதற்கான சமூக உளவில் என்ன?


இதற்கான விடையில்தாம் நாளை புரட்சிகரக் கட்சியின் தோற்றுவாய் சாத்தியமாகும்(...).


//முதலாளித்துவம் என்னமா தன்னை மாற்றி மாற்றி நிலைநிறுத்துது பார்த்தீங்களா? அதை உடச்சு நொருக்க நமக்கு வேகம் போதாது. நம்மட்ட முறையான நகர்வுகள் இல்லங்க//


இன்று, மனிதர்கள் எல்லோருமே அதீத தனிநபர் வாதத்தில் மூழ்கிச் சுதந்திரத்தைத் தமக்குள் கோருகிறார்கள்.இது,தனித்துவம் எனும் தேர்வில் மிக விருத்தியாகும் மிலேச்சத்தனமான தனிநபர் அகங்காரம் இந்த முதலாளித்துவ வர்த்தகச் சமுதாயத்தின் சந்தைப் பொருளாதாரத்தின் மிக வேகமான தயாரிப்பு.இது,ஒரு வகையான மனிதர்களை உருவாக்கப் பற்பல சமூக நடாத்தைகளைச் சுமூகப் பொருளாதாரத்தின் கட்டங்களாகப் பிரித்து, அவைக்கேற்ற தத்துவார்த்தப் போக்குகளை கருத்தியற்றளத்தில் தோற்றுவித்துத் தமது அடிமட்ட அமைப்பைக் காத்து வருகிறது.எனவே,முதலாளித்துவம் "தன்னை மாற்றி,மாற்றி"ப் புதுப்பிக்கும்-புனர் நிர்மாணிக்கும் நிலைமை மிகவும் இயல்பானவொரு கட்டமாக உருவாகிறது.இவர்கள் இத்தகைய மாறுகாலக்கட்டங்களை வெறுமனவே கருத்தியல்-வன்முறைசார் கருத்துநிலைகளுக்குள் நிகழ்த்தவில்லை.மாறாகத் தமது பொருளாதார உற்பத்திப் பொறிமுறைக்குள்ளும் இவற்றைச் செய்து பார்க்கும்போது மேற்காணும் புதிய மனிதத் தெரிவு ஒவ்வொரு தனிப்பட்டவர்களுக்குள்ளும் முளையரும்புகிறதாக நான் கருதுகிறேன்.


//முதலாளித்துவத்தின் தேவை. ஓலமிடுபவர்களே.!! அவர்கள் இருக்கும் வரை முதலாளித்துவம் உயிர்வாழும். இருந்து பாருங்களேன்.//


இதன் தொடர்பான ஆளும் வர்க்கமானது ஒவ்வொரு தனிநபர்களையும் இந்தச் சமுதாயத்தை; தூற்றவும்,முதலாளித்துவத்தைச் சலித்துக்கொள்ளவும் அதை விமர்சித்துப் புரட்சிகரமாகச் சிந்திக்கவும் சதா அனுமதிக்கிறது.இந்த அனுமதிப்பில் சமூகத்திலிருந்து தன்னை விடுவித்து,ஒற்றை மனிதர்களாகப்பட்ட"அதீத சுதந்திர"மனிதர்கள் இந்த முதலாளிய உற்பத்திப் பொறிமுறையிலிருந்து அந்நியப்படுகிறார்கள்.இத்தகைய மனிதர்கள் எவ்வளவுதாம் புரட்சிகரமாகச் சிந்தித்தாலும் கூட்டுழைப்புக்கு எதிரானர்வர்கள்.அங்கே,ஒவ்வொரு தனிமனிதர்களும் தமது தனித்துவத்தை மனித நடாத்தையால் பிரதியெடுக்கும்போது, இவர்களால் ஒரு கட்சியையோ அல்லது சிறு அமைப்பையோ உருவாக்க முடியாது.இந்த இடத்தில் பொருளாதார வாதத்தை முன்னிறுத்தும் தொழிலாளர் சங்கங்கள் ஒரு வடிகாலாக மாற்றங் காண்கிறது.இது, முதலாளியத்துக்குப் போதுமான பாதுகாப்பை வழங்கும் கருத்தியல் மனதை நமக்குள் உருவாக்கும்போது,நாம் தனிநபர் புரட்சிப் பாத்திரத்தோடு தடுத்தாட்கொள்ளப் படுகிறோம்.இங்கே,தனிநபர்களாக இருக்கும் எமது புரட்சிகர மனதுக்கு இந்த முதலாளித்தவத்தின் ஒவ்வொரு முகத்தையும் பார்த்துக் கொதிப்பதைத் தவிர வேறுவழியில்லை.


இதுதாம்"வேகம்"குறைவென்ற ஆதங்கம்.


உலகத்தில் எந்த மூலையிலாவது ஒரு புரட்சிகர கட்சியின் புரட்சிகர நகர்வு இந்த முதலாளிய ஜனநாயகத்தால் அனுமதித்துச் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதா?-இல்லை.வெறுமனவே,போலிச் சோஷலிசக் கட்சிகள் பாராளுமன்றச் சகதிக்குள்ளும் அதன் வாதத்துக்குள்ளும் வீழ்ந்து மக்களை ஏமாற்ற அதுவே,ஷோசலிசத்தின் தோல்வியாக வர்ணிக்கப் படுகிறது.இது, இன்றைய முதலாளித்துவத்துக்கு மிகவும் ஒத்திசைவாகிறது.


இதை உடைத:துப் புரட்சிகரக் கட்சியின் தோற்றம் எங்கும் உருவாகாதிருக்க இந்த அமைப்பு பலகோடிக்களை கொடுத்துக் கருத்தியல் யுத்தத்தை ஏற்படுத்துகிறது.மறுபுறுத்தில், அணு ஆயுத்தம் தரித்த படைகளைக்கொண்டு பலமாகப் புரட்சியாளர்களைக்கொன்று குவிக்கிறது.


அதாவது,தனிநபர்களைப் புரட்சிகரமாகச் சிந்திக்க வைத்தவர்கள்,அவர்களை ஒரு அணிக்குள் திரண்டுவிடாது பார்த்துக்கொள்கிறர்ர்கள்.எங்கே,புரட்சிகரச் சூழலும் அதுசார்ந்து புரட்சிகரமான கட்சி உருவாகிறதோ அங்கோ பற்பல உடைவுகளைச் செய்து,தமது வன்முறை ஜந்திரத்தின்மூலம் புரட்சி ஒடுக்கப்படுகிறது,ஜனநாயகத்தினது பெயரால்.இதன் பின்,"புரட்டுசி" புரட்சிகரத் தன்மையிலான ஒரு சமூகப் பாத்திரத்தை எடுக்கு வைக்கப்படும்போது,அந்தத் தளத்தில் மக்கள் விரோதிகள் கம்யூனிசப் போராளிகளாகவும்,போதகர்களாகவும் நமக்குள் அறிமுகமாகி முதலாளித்துவத்துக்கு ஓலம் போடுகிறார்கள்.அதனால் முதலாளியம் என்றும் நிலைக்க முடிகிறது.எனினும,; அதன் பிறப்பில் அது தனது சவக்குழியைத் தொடர்ந்து தோண்டியபடியே இருக்கும்போது பாரிய சரிவுகள் இந்தச் சந்தைப் பொருளாதாரத்துக்கு ஏற்படுகிறது.அதைச் சரிக்கட்டவொரு தேசத்தைப் பயங்கரவாதிகளின் தாயகமாகக் கருத்துக்கட்டி யுத்தஞ் செய்து கொள்ளையிட்டுக் குறுகிய காலத்துக்கு உயிர்வாழ்வை நீடிக்கிறது.இது தொடர்கதை.


இத்தகைய சூழலில் தனிநபர்களான நாம் "வேகம்"பற்றி வெதும்புவது இயல்பாகிறது.இது,ஒரு புறநிலை யதார்த்தமாக இன்று இருக்கிறது.இதுவே,அகத்தில் தனிநபர் முனைப்போடு அறிதலில் உச்சம் பற்றிய மிதப்பில் ஒற்றை மனிதர்களாகி வருகிறது.இது, எவரோடும் பொருத்தமான எண்ணத்தை எப்போதும் அணுகமுடியாது அரசியல் தற்கொலையை தனக்குள் வற்புறுத்துகிறது.இதனிடம் வேதனையும்-விகாரமும்,அவ நம்பிக்கையைத் தூண்டி சமுதாயத்தின் முற்முழுதான ஆளுமையையும் மிகச் துச்சமாக மதிப்பிடும் மனதைத் தோற்றுவித்துக்கொண்டிருக்கிறது.

இனியென்ன நடக்கணும்?

ஓலம்,
அதி தீவிரம்,
வேகமான மாற்றம்,
திடீர் புரட்சி
திடீர் கட்சி,
திடீர் போராட்டம்
திடீர் வெற்றி

அதன் உலகுக்கு அவசியமாகிறது.இது தவிர்ந்த அனைத்தும் மிக வேகங் குறைந்த நிலையாக இருக்கிறது.

முதலாளியத்தின் பரப்புரையும்,வன்முறைசார் கருத்தியலும் ஒரு கணமும் ஓயாது நமக்குள் காரியமாற்றி நம்மைத் தயார்ப்படுத்திச் சமுதாயத்தைத் தனது கைக்குள் வைத்திருக்க முனைகிறது.நாளும் பொழுதும் இதுதாம் அதன் வேலைத் திட்டம்!

இந்த நிலையில் நீங்கள் சொல்வதிலிருந்து நாம் வேறுவிதமாக இந்த நடாத்தைகளை வெற்றிகொள்ள செயற்படுகிறோம்.அங்கே,மேற்காணும் நோக்குக் கிடையாது.எனவே,தனிநபர் வாதமோ அல்லது திடீர் வேகமோ இருப்பதற்கில்லை.அல்லது,இன்றைய சூழலுக்கு அவசியமானதற்ற கருத்து நிலையாகவும் இருக்கலாம்.ஆனால்,இது ஒரு கட்டத்தில் பொது வேலைத்திட்டத்தைப் புரட்சிகரமாக்கிக்கொள்ள முனைதலே புரட்சிகரக் கட்சியின் தோற்றமாக இருக்கும்.இதையும் மிக வேகமாகப் புரிந்த முதலாளியம்,தொழிலாள வர்க்கத்தை "இழப்பதற்கு அரிய வேலை உண்டு" என்று கருத்தியல் மனதை உருவாக்கி அவர்களை மிக இலகுவாக அடிமைப்படுத்துகிறது.உயிராதாரம் அனைத்தம் உழைப்பினால் தங்கி நிறைவுப்படுத்தும் உலகில்,வேலையே இழப்பதற்கரியதாக மாறுகிறது.இது புரட்சிக்கு எதிராகவே நிற்கும்.

நாம்,நிதானிப்போம்.


சிவப்பு மார்க்சியனது பின்னூட்டம்.

சிறீரங்கன் அண்ணை,
தனிநபர் வாதங்களை நீங்கள் மறுதலிக்கவும் முடியாது. நான் உங்களில் இருந்து இவ்விடங்களில் வேறுபடுகின்றேன். தனிநபர் வாதங்களை அதீதமாக நீட்டிச் செல்லும் போது நாம் வேறு வகையான புள்ளிகளை வந்தடைய முடியும் எனக்கு சில நம்பிக்கைகள் இருக்கு.

இனக்குழுக்களிடையேயும், பொதுவம்சங்கள் சிலவற்றுடன் ஒன்றிடும் குழுக்களுக்குமான அதீத சுதந்திரம் சில காலத்துக்கு முன்வரை மர்க்சியர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பாட்டாளிவர்கம் உடைந்துவிடும் என்று அவர்கள் கருதியதே அதன் காரணமாகும். இதன் காரணமாக தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளை ஏற்றுக்கொள்ளாமல் விட்ட உதாரணங்களை நமது சூழலியே காட்ட முடியும்.

con-federal என்பதன் மூலம் ஒன்றிணைய முற்படும் நாடுகளை நாம் காண்பதற்கான சூழல் காணப்படுகிறது. ஐரோப்பிய யூனியன் அதன் மூலம் ஒன்றிணைந்திருக்கிறது. (தயவுசெய்து முதலாளித்துவ பொருளாதார முறையை பலப்படுத்தவே ஒன்றிணைந்தது என்பதாக கூற முற்பட வேண்டாம். எனது பிரச்சனை அதுவல்ல. அக்கட்டமைப்பில் எவ்வாறு சில விடயங்களை சாதிப்பது என்பது தான்.)

அதீத சுதந்திரத்தில் நிகழும் இணைவு வித்தியானமானது. அதிக அங்கீகரிப்பை கொடுப்பது. வித்தியான அங்கீகரிப்பை நிலைநிறுத்துவது. தம்மளவில் (வர்க்க அடிப்படையில் அல்ல) கலப்பதற்கான ஏதுவாய்களைக் கொண்டவை.

என்னைப்பொறுத்தவரை தன்னிலைகளின் பெருக்கம் என்பது மார்க்சிய கனவின் வழிப்பட்ட சிந்தனையே. இது உங்களது வழிப்பாதை அல்ல. ஆனால், முடிவுப்புள்ளி உங்களது முடிவுப்புள்ளிய அண்மித்தது.

என்னைப்பொறுத்தவரை மர்க்சியம் இந்த நூற்றாண்டின் இறுதிக்கானது அல்லது அடுத்த நூற்றாண்டுக்கான சிந்தனை. இக்காலகட்டம் தன்னிலகளை பெருக்குவதையும் தன்னிலை அங்கீகரிப்புகளை நிகழ்த்துவதற்குமான காலம். அதன் மூலம் பரஸ்பர நம்பிக்கைகளைப் பலப்படுத்துவதற்கான காலப்பகுதி. இக்காலத்தில் முதலாளித்துவத்தினூடாக- அதன் கட்டமைப்பில் இருந்தவாறு- நாம் சில விடயங்களை செய்ய முடியும். அதுவரை சாதிய அரசியல் மட்டுமல்ல ஒரு சாதிக்குள்ளயான பிரதேச அரசியலையும் நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும். வேறுவழியில்லை. இவ்வகையான உடைவுகளை விரைவுபடுத்துவதும் அதனூடாக அங்கீகரிபுகளை அதிகரிப்பதும் எம்முன் உள்ள சில கட்டங்கள். அதீதமான பிளவுகளும் அங்கீகரிப்புகளும் மட்டுமே ஒன்றிணைவின் ஆரம்பப் புள்ளி. (முதலாளித்துவத்தை விரைவுபடுத்தல் என்று சிலர் இதனைக் கூற முடியும்.) இதன்வழி மட்டுமே இப்போதிருக்கும் முதலாளித்துவத்தை மாற்றியமைக்க முடியும். இண்டைக்கு இருக்கிற நிலையில முதலாளித்துவத்திற்கு பின்னல அணி திரண்டு அதன் டிரக்சனை சோசலிச சமூகம் நோக்கித் திருப்புவோம். இதுதான் எனது நிலைப்பாடு.


என்னைப் பொறுதத வரை உங்களால் செய்யக் கூடிய சிலவிடயங்கள் இருக்கின்றன.

1. ஜேர்மனில் உள்ள தமிழ்மக்களிடம் வேலை செய்வது. (அதற்கு முன்னர் புலிக்காச்சலுக்கு மருந்து எடுக்க வேண்டும். எதையும் பார்க்காமல் எல்லாவறையும் புதிதாக அணுக வேண்டும். புலி, எலி, பன்னிகள் எண்டெலாம் பார்க்கக் கூடாது.) அதற்காக சிறிது கலத்திற்கு உங்களை அரசியல் நீக்கம் செய்து கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் புதிதாக அணுக வேண்டும். எல்லாத்தையும் சி.ஐ.ஏ தான் செய்யுது பரவாயில்லை. நான் சி.ஐ.ஏ யில தானே வெலை செய்யிறன் எண்டு நினச்சு கொள்ளுங்கோ. ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து இது சி.ஐ.ஏ செய்யுது எண்டு கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு கொண்டு இருந்தா, அது மனசை புளங்காகிதமடைய வைக்கும். சிறிது காலத்தில் அந்த புளங்காகிதத்திற்கு அடிமையாகிவிடுவோம். அப்புறம் கண்டுபிடிப்புகளை செய்யாட்டி நம்மால சில 'திருப்திகளை' அடைய முடியாம போயிடும். இந்த திருப்திகள் எங்களை ஒண்டையும் உருப்படியா செய்ய விடாது. ஈகோ வை திருப்திபடுத்திக் கொண்டு வாழுறதுக்கு பேர் மக்களுக்காக குரல் கொடுக்கிறத? இல்லையே தலைவா.. (எல்லாம் என்ட அனுபவம்.. )

2. சும்மா சும்மா எழுதுவதை விட்டுவிட்டு உங்களிடம் இருந்து பரந்த அறிவை வைத்து ஆய்வுமுயற்சிகளைச் செய்வது. தகவல்களை கடந்து ஆய்வுகளுகான காலகட்ட்த்தை இன்னும் சில வருடங்களில் எதிர்கொள்ளப்போகின்றொம். நீங்கள் எழுதி வைத்த ஒண்டையும் கொஞ்ச காலத்துக்கு பின் ஆரும் பாக்க மாட்டாங்கள். ஆனால், ஆய்வுகள் எவ்வளவோ காலத்திற்கு உதவக் கூடியவை. நீங்கள் வெறும் தகவலுடன் உங்களை விட்டு போனல் உங்களது அனுபவங்கள், அறிவு எல்லாமே வீணாய் போய்விடும். உங்களுக்கு அடுத்து வாறவனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி விட்டு செல்ல வேண்டும். அவனையும் முதல்ல இருந்து வா எண்டிற நினலையை வைக்க கூடாது. ஒரு பொறுப்பும் இல்லாம இருக்கிறியள். :(

இல்லை நான் ஓலமிடப்போறேன். உழைக்கும் வர்க்கத்திற்கு சார்பாக எனது குரல் எப்போதும் இருக்கும் என நீங்கள் கருதி இருந்தா, நானும் இன்னும் 100 பேரில வந்து அலம்பிட்டிருப்பேன். இதால ஆருக்கும் பிரயோசனம் இல்லை. :(

இன்னுமொரு அட்வைஸ் சொல்றன் கேளுங்கோ. நீங்களும் ரயாகரன் அண்ணையும் கொஞ்ச காலத்துக்கு மனிசிமாரின் சொல்லைக் கேளுங்கோ. அதைக் கேட்டு நடந்து பாருங்கோ.

பி. கு- எங்கட உறுதியான குரலை சி.ஐ.ஏ சிவப்பு மார்க்சியனை அனுப்பி மாத்தப் பாக்குது எண்டு கற்பனை பண்ண வேண்டாம்.

-சிவப்பு மார்க்சியன்

சிறீரங்கனது பின்னூட்டம்.

ஃஃஇனக்குழுக்களிடையேயும்இ பொதுவம்சங்கள் சிலவற்றுடன் ஒன்றிடும் குழுக்களுக்குமான அதீத சுதந்திரம் சில காலத்துக்கு முன்வரை மர்க்சியர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பாட்டாளிவர்கம் உடைந்துவிடும் என்று அவர்கள் கருதியதே அதன் காரணமாகும். இதன் காரணமாக தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளை ஏற்றுக்கொள்ளாமல் விட்ட உதாரணங்களை நமது சூழலியே காட்ட முடியும். ஃஃ

//con-federal என்பதன் மூலம் ஒன்றிணைய முற்படும் நாடுகளை நாம் காண்பதற்கான சூழல் காணப்படுகிறது. ஐரோப்பிய யூனியன் அதன் மூலம் ஒன்றிணைந்திருக்கிறது. (தயவுசெய்து முதலாளித்துவ பொருளாதார முறையை பலப்படுத்தவே ஒன்றிணைந்தது என்பதாக கூற முற்பட வேண்டாம். எனது பிரச்சனை அதுவல்ல. அக்கட்டமைப்பில் எவ்வாறு சில விடயங்களை சாதிப்பது என்பது தான்.)ஃஃ


ஃஃ ,,,என்னைப்பொறுத்தவரை மர்க்சியம் இந்த நூற்றாண்டின் இறுதிக்கானது அல்லது அடுத்த நூற்றாண்டுக்கான சிந்தனை.ஈஈஈ இக்காலகட்டம் தன்னிலகளை பெருக்குவதையும் தன்னிலை அங்கீகரிப்புகளை நிகழ்த்துவதற்குமான காலம். அதன் மூலம் பரஸ்பர நம்பிக்கைகளைப் பலப்படுத்துவதற்கான காலப்பகுதி. இக்காலத்தில் முதலாளித்துவத்தினூடாக- அதன் கட்டமைப்பில் இருந்தவாறு- நாம் சில விடயங்களை செய்ய முடியும். அதுவரை சாதிய அரசியல் மட்டுமல்ல ஒரு சாதிக்குள்ளயான பிரதேச அரசியலையும் நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும். வேறுவழியில்லை. இவ்வகையான உடைவுகளை விரைவுபடுத்துவதும் அதனூடாக அங்கீகரிபுகளை அதிகரிப்பதும் எம்முன் உள்ள சில கட்டங்கள். அதீதமான பிளவுகளும் அங்கீகரிப்புகளும் மட்டுமே ஒன்றிணைவின் ஆரம்பப் புள்ளி. (முதலாளித்துவத்தை விரைவுபடுத்தல் என்று சிலர் இதனைக் கூற முடியும்.) இதன்வழி மட்டுமே இப்போதிருக்கும் முதலாளித்துவத்தை மாற்றியமைக்க முடியும். இண்டைக்கு இருக்கிற நிலையில முதலாளித்துவத்திற்கு பின்னல அணி திரண்டு அதன் டிரக்சனை சோசலிச சமூகம் நோக்கித் திருப்புவோம். இதுதான் எனது நிலைப்பாடு. ஃஃ


சிவப்பு மார்க்சியன், தங்கள் கருத்துகளை எந்த முடிந்த முடிவுகளோடான தீர்ப்புகளோடு கொன்றுவிடுதல் மிகவும் அபத்தமானது.எனவே,உங்களைக் குறித்துச் "சி.ஐ.ஏ.என்ற பொதுப்புத்திக்கு" நீங்கள் கோடிட்டுக்காட்டுவது சரிதாம்.இன்று,பின் மதச்சார்பின்மைச் சமுதாயங்களின் காலத்தில் புதிய தெரிவுகளோடு மனித உருவாக்கம் நிகழ்வது குறித்து, நான் அதிகஞ் சிந்திப்பதுண்டு.இத்தகைய தருணங்களினது மனிதர்களின் மனமென்பது மென்மைத்தன்வகையான விருத்தியின்பால் புனிதத்தினது தூதுவர்களாகின்ற நிலையைப் பின் நவீனச் சமுதயங்களாக ஏற்றுக் கொள்ளபட்ட இன்றைய மனித நடத்தையில் தங்களது கருத்தின் மெய்நிலைகள் தொடர்கின்ற தொனிப்பை அவதானிக்கிறேன்.மனிதர்கள் தமது பாதயைத் தொடர்ந்து தெரிந்துகொள்கிறார்கள்.உள்ளொளியின் குரலை மேலும் தனித்துவமானதென்பதாகத் தொடர்ந்து, அதற்கானவொரு பாதையைத் தெரிகிறார்கள்.நேர்மையைச் செல்லுபடியாக்கும் செயலூக்கத்தில் முயற்சிகளைத் தொடருகிறார்கள்.அதற்கும் எல்லை இன்னொரு தலைப்பட்சமாக"நியாயப்படுத்தலில்"வந்து விடுகிறது.

இந்தப் பின் மதச்சார்பின்மைச் சமுதாயங்களின் முக்கியமான கோரிக்கைகள் சுயதெரிவோடு தன்னிலைகளைப் பெருக்குவதன் வாயிலாக அங்கீகரித்தலென்பதை இன்னொரு புறவயமான காரணிகளிடமிருந்து பெறுவதிலும்பார்க்க அகவயமான உள்ளொளியோடு சங்கமித்து அதன் அங்கீகாரத்தைப் பெறுதலென்ற போக்கு இன்றைய மேற்குலகில் காரசாரமாக இடம்பெறும் உரையாடல்.இதுகுறித்து அறியப்பட்ட பிராங்பேர்ட்பள்ளி யூர்கன் ஹபர்மார்ஷ் இந்தப் பின் மதச்சார்பின்மைச் சமுதாயங்கள் குறித்து, தனது உரையில்(பதிப்பகப் பரிசு 2001 க்கான உரை,பிராங்பேர்ட் சென் பவுல் தேவாலயம்) தன்னிலை அங்கீகரித்தலோடான தேடுதலும் கண்டடைதலும் என்பது சுயபெறுமானங் குறித்த பிரச்சனையாக மனவெளியில் மனிதர்களை அலைத்துக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்.இதன் ஆரம்பம் புனிதம் என்ற பிம்பத்தில் தனது சுய தெரிவை உரைப்பதற்கெடுக்கும் முயற்சியில் மனிதர்கள் மீளவும் சடங்குச் சங்கதிக்குள் சென்று நித்தியத்தின் மகிமையைத் தேடுவதற்காகவும்-மதத் தாயகமொன்றை உருவாக்கி விடுவதில் தமது நிறைவுகளை தேடுவதாகச் சொல்கிறார்.

இந்த நிலைகளை கடப்பதில் "அங்கீகரப்புக்களை"வலியுறுத்துவதென்பது ஒரே நேர்கோட்டுப்பாதையாகச் சமுதாயத்தில் அதன் அடித்தளத்தில் நிலவும் பொருள்வாழ்விலிருந்து முற்றுமுழுதாகத் துண்டித்துச் சென்றுகொண்டிருப்பதாக எண்ண முடியவில்லை.இத்தகைய தன்னிலைகளின் பின்னே படியெடுக்கப்படும் ஒரு "பொது நிலை"மீளவும் அந்தத் தன்னிலைகளைக் குறித்துக் குழப்பகரமான மறுத்தல்களைச் செய்வதை நாம் பார்க்கின்றோம்.

உதாரணமாக இன்றையபொழுதில் "இஸ்லாமியப் பயங்கர வாதம்"என்ற சமூக உளவியலுக்குப்பின் படையெடுக்கும் மேற்குலக உழn-கநனநசயட துருக்கியை இதுவரை "ஐரோப்பிய ஜனநாயகத்துக்கு"முரணற்ற மக்கள் சுமுதாயமாக அங்கீகரிக்வில்லை.ஐரோப்பிய மையவாத்தின் மொத்த இயல்புகளுக்குள் இன்னொரு தேசத்தையும் அதன் மக்களையும் அங்கீகரித்தலென்பதன் இன்னொரு தொடர் அண்மிக்கும் இடம் இனம்சார்ந்த பெருமைகளாக விரிகிறது.இது, எந்தத் தன்னியல்புகளையும் தனது அண்மையப் பெருமைகளுக்கமைய அங்கீகரத்துவருவதை நாம் பார்க்கிறோம்.இன்றைய இலங்கைப்பிரச்சனையில் சாதிய-பிரதேசவாரியான வாதங்களின் பின்னே ஒளிந்திருக்கும் அரசிய(;(In Moral Consciousness and Communicatative Action-Habermas) முழுமொத்த தமிழ்பேசும் மக்களினதும் உரிமைகளையும் வேட்டையாடுவதில் "தன்னிலை அங்கீகரிப்புகளை"கோருகிறது!

"சுய ஊசலாட்டம்";"(mit instabilen Ich)எங்கள் மக்கள் கூட்டத்தில் பிரதேசரீதியான வேறுபாட்டு முனைப்பைக் கோரிக்கொண்டது.மிகவும் தற்காலிகமான இந்த வாதம் அங்கீகரிப்புக்காக எடுத்த வைத்த அரசியல் சமாந்திரமாக விரிவடைந்து இன்றைய அரசியல் போக்கில் பாரியவொரு தாக்கத்தைச் செய்கிறது.இதை முன்கூட்டி அறிவதிலுள்ள மார்க்சியப் பொருளாதார முறைமை அத்தகையவொரு வெளியினது தெரிவைப் புறக்கணித்திருக்கும் அரசியல் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை வெறும் உணர்வுத் தளத்தில் பார்க்காத போக்கின் விருத்தியே.இது,இலங்கையின் இன்றைய அரசியலில் சரியானதாகவே படுகிறது.

ஃஃஅதீதமான பிளவுகளும் அங்கீகரிப்புகளும் மட்டுமே ஒன்றிணைவின் ஆரம்பப் புள்ளி. (முதலாளித்துவத்தை விரைவுபடுத்தல் என்று சிலர் இதனைக் கூற முடியும்.) இதன்வழி மட்டுமே இப்போதிருக்கும் முதலாளித்துவத்தை மாற்றியமைக்க முடியும். இண்டைக்கு இருக்கிற நிலையில முதலாளித்துவத்திற்கு பின்னல அணி திரண்டு அதன் டிரக்சனை சோசலிச சமூகம் நோக்கித் திருப்புவோம். இதுதான் எனது நிலைப்பாடுஃஃ


சிவப்பு மார்க்சியன் உங்கள் நிலையை ஏற்கிறான ஸ்ரீரங்கன்;.இது உங்கள் தெரிவு-நிலை.ஆனால்,எனது அரசியல் தெரிவென்பது இதற்கு மாறுபட்டதெனினும்"அதீதமான பிளவுகளும் அங்கீகரிப்புகளும் மட்டுமே ஒன்றிணைவின் ஆரம்பப் புள்ளி"என்ற கருத்தில் (சமூக இயங்கியல் புள்ளி) ஒன்றுபடுகிறேன்.எனினும்,முதலாளித்துவத்திற்குப் பின்னால் அணிதிரண்டு அதன் டிரக்சனை மாற்றியமைக்க முடியாது திண்டாடும் வெனிசூலா போன்ற தென் அமெரிக்க நாடுகளைப் பற்றி யோசிக்கிறேன்.

ஃஃஎன்னைப்பொறுத்தவரை மர்க்சியம் இந்த நூற்றாண்டின் இறுதிக்கானது அல்லது அடுத்த நூற்றாண்டுக்கான சிந்தனைஃஃ

மார்க்சியம் என்பது கடந்துவிட்ட ஒரு கட்டம் என்று பீட்டர் சிம்பா,தோமஸ் றைத்தனர் போன்ற அவுஸ்த்திரிய சமூகவியலாளர்கள் சொல்லிக்கொண்டிருக்க உங்கள் கருத்து இதற்கு வேறொரு தெரிவைச் செல்கிறது.என்றபோதும் இந்த நிலைகள் ஒரு உண்மையைச் சொல்கிறது.அது,அடுத்தகட்டம் உயிர்த்திருப்பதற்கான தேடுதல் நெருங்கிவரும் கட்டம்.இதற்குள் நீங்கள் குறித்த கருத்துகள் மிக அண்மித்துவரும் என்பதும் உண்மையே.

வளர்மதியின் பின்னூட்டம்.

பாடலுக்கு ஏற்றவாறு கருத்துப் படங்களைக் கோர்த்துத் தந்தது நீங்கள்தான் என்று ஊகிக்கிறேன்.

மிகவும் பிடித்திருந்தது :)

திரு. சிறீரங்கனுக்கும் 'சிவப்பு மார்க்சியனுக்கும்' இடையிலான கருத்துப் பகிர்வுகள் சுவாரசியம்.

எனது சார்பு ‘சிவப்பு மார்க்சியன்' பக்கமே என்பதை சொல்லிவிடுகிறேன் :)

இதை ஒரு பக்கச் சாய்வாகப் பார்க்காமல் விஷயத்தை நோக்குவோர்க்கு இரு பகிர்வுகளை இங்கு பதிய விரும்புகிறேன்.

1) திரு. சிறீரங்கனின் பகிர்வில்,

//மேற்காணும் கோசத்தைத் தூக்கிப்பிடித்தபடி தமிழகத்தில் மக்கள் கலை இலக்கியக்கழகம் மற்றும் புதிய ஜனநாயக்கட்சி தமது போராட்டத்தைப் பல தளங்களில் செய்தபடி கைதாகிச் சிறைவரை சென்று மீள்கிறார்கள்-மடிந்தும் போகிறார்கள்!//

எனது மறுப்பு.

அது “புதிய ஜனநாயகக் கட்சி” அல்ல.

மாநில அமைப்புக் கமிட்டி (மா - லெ) என்பது அவர்களுடைய கட்சியின் பெயர். (தற்சமயம் மாற்றிவிட்டார்களா என்பது அறியேன்.)

”புதிய ஜனநாயகம்” என்பது அவர்களுடைய 'வெகுஜன' அரசியல் இதழுக்கான பெயர். அதை வைத்து அவர்களுடைய கட்சியை அடையாளப்படுத்துவதாகாது. அவர்களுடைய உள்கட்சி இதழான “புரட்சிப் புயல்” - டன் எத்தனை பேர் அவர்களை அடையாளப்படுத்த முடியும் என்பது எதிர்க்கேள்வி.

அவர்கள் சிறைக்குச் செல்வதெல்லாம் ‘ஜுஜுபி'. அரசையெதிர்த்து உயிரைப் பலிகொடுக்கும் போராட்டங்களையெல்லாம் அவர்கள் இதுவரை நடாத்திவிடவில்லை.

2)//மிலேச்சத்தனமான தனிநபர் அகங்காரம்//

என்கிறார் சிறீரங்கன்.

“மிலேச்சத்தனம்” என்பது இந்துத்துவவாதிகள் இஸ்லாமியர்களைக் குறிக்கப் பயன்படுத்திய சொல் (மேலதிகமான விவரங்களையும் பதிவு செய்திருக்கிறேன் - சிற்றிதழ்களில்). இதை 'மார்க்சியரான' சிறீரங்கனால் எப்படிப் பயன்படுத்த முடிகிறது.

இவை ஏதோ இரண்டு சொற்கள் 'unconscious slip' - ஆக விழுந்துவிட்டன என்று நியாயப்படுத்தாமல் சிறீரங்கன் அல்ல, வாசகர்கள் யோசிக்க வேண்டுகிறேன்.

அவருடனும் அவரைப் போன்றவர்களுடனும் பகிரும் திராணி எனக்கில்லை.

மன்னிக்கவும்.

தொடர்ந்து உங்கள் பக்கத்திற்கு வந்து கொண்டிருக்கிறேன் பெயரிலி.

விவாதங்களைத் தவிர்த்து ஆக்கப் பூர்வமான உங்கள் எழுத்துக்களை நம்பி :)

அன்புடன்

வளர் ...


சிவப்பு மார்க்சியனது பின்னூட்டம்.

சிறீரங்கன்,
பொது அடையாளங்களினூடு பிளவுறும் அடையாள அரசியல் என்பது கூட அடிப்படைவாத மனநிலையூடாகக் கட்டமைக்கப்பட முடியும். ஆயினும், அதனைத் தத்துவப்பிழையாகச் சொல்ல முடியாது. நாம் எதிர்ப்பக்கம் நின்று குரல் கொடுக்கிறோமா அல்லது அதனை மாற்ற முயற்சி செய்கின்றோமா என்பதிலேயே எமது சமூகப்பறுமானம் தங்கியுள்ளது எனக் கருதுகின்றேன்.

60 களில் வலுப்பெற்ற பண்பாட்டுமூலங்கள் என்பது தொடர்பான கருத்துக்கள் கூட அடிப்படைவாதமாக பார்க்கப்படக்கூடும். ஆபிரிக்க அரசியல் என்பது அவர்களது பண்பாட்டின் மூலங்களைக் கண்டுபிடிப்பதென்பதனூடாகவே வலுப்பெற்ற முடிந்தது. அமில்கர் கப்ரால் போன்றவர்கள் ஒருவகை அடையாள அரசியலையே செய்தார்கள். எந்தவொரு அடையாள அரசியலின் பின்னும் அடிப்படைவாத மனநிலை ஒழிந்திருப்பதென்பது நாம் மறுத்துவிட முடியாது. ஆயினும், அடையாள அரசியலின் அவ் அடிப்படைவாத மனநிலை தேக்கமுறுவதை தடுப்பதொன்றே எம்முன் உள்ள தெரிவு. அதனை மறுத்தல் என்பது கூட அவர்கள் 'மாற்றம்' அடைவதை தடுப்பதற்கான காரணியாகப் போய்விடும் அபாயம் உள்ளது.

**************************************************8

ஹேபர்மாசினது Public sphere என்பதன் அடுத்தடுத்த கட்டங்களாக தொழில்நுட்பத்தால் இனங்காணப்பட்ட பகுதிகள் எமக்குச் சொல்லும் செய்திகள் முக்கியமானவை. பிளவுற்ற தன்னிலையை எதிர்கொண்டே ஆகவேண்டிய கட்டாயத்தை தொழில்நுட்பம் எமக்கு அளிக்கப்போகின்றது. மார்க்சிய சிறீராங்கனுடன் virtual சிறீரங்கனது இருப்பு தவிர்க்க முடியாதது. அது மட்டுமல்ல மிகவும் இறுக்கமான தன்னுணர்வோடும் தன்னியல்போடும் virtual சிறீரங்கன் இருப்பு கட்டமைக்ப்படக் கூடும். அதன் நுண்ணிய புத்திசாலித்தனத்துடன் கூடிய நகர்வென்பது உண்மையான சிறீரங்கனது நகர்வை ஒரு கட்டத்தில் கட்டுபடுத்துவதான நிலையைச் சாத்தியமாக்கும். இங்கேயான முரண் இரு தன்னிலைகளின் 'வாழ்விற்கு' அங்கீகாரம் வேண்டி நிற்கும். தன்னிலைகளை மேலும் பிளப்பதை அனுமதிப்பதன் மூலம் மட்டுமே அந்நேரத்தைய துவித தன்னிலை முரண்களுக்கிடையில் இருந்தான 'விடுதலைக்கு' வழிவகுக்கும். artificial intelligence என்பது தவிர்க்க முடியாமல் எம்முன் காணப்படும் விநோதமான புதிய '______'. ?

பிளவுறும் தன்னிலைகள் என்பது கூட சில மறுப்புகளை வேண்டி நிற்கும் செயற்பாடே. வலிமையாகக் கட்டமைக்கப்பட தன்னிலைகளுக்கு எதிரான போரில் பிளவுறும் தன்னிலைகள் தோன்றுகின்றன. கட்டமைக்கப்பட்ட தன்னிலையின் இறுக்கம் அதனை நொருக்கி பிளக்கின்றது. தனித்த தனிலையின் இருப்பு என்பது கூட அடிப்படைவாதமாகக் கருதப்பட முடியும். இத்தன்னிலையின் இருப்பு என்பது எமது சூழலால் கட்டமைக்க்ப்படுகின்றது. சூழல் என்னும் போது கருத்துக்கள், நம்பிக்கைகள், சடங்குகள், ஆசைகள் போன்றனவற்றைக் குற முடியும். ஆக, தன்னிலை என்பது கூட ஒருவித அடிப்படைவாத அம்சமே. அக்கட்டில் இருந்து விடுபடும் நோக்கிலேயே தன்னிலைகள் பிளவுற ஆரம்பிக்கின்ற்ன. பிளவுகள் இறுக்கத்தைத் தளர்த்தும் போது சிலவிதமான சமநிலைகளை வந்தடையும். (இங்கே கட்டமைக்கப்பட்ட தன்னிலைகளில் இருந்தே மருத்துவம், பொறியியல், சட்டம் என அனைத்தும் உருவாக்கப்படுகின்றன. தன்னிலை மாற்றத்தினூடு அவற்றிலும் மாற்றங்கள் நிகழ்ந்தவாறிருக்கும்.)

**************************************************

இனி நாம் மீண்டும் விடயத்திற்கு வருவோம். அங்கீகரிப்புக்குள்ளான தன்னிலைகளுக்கு பின்னே படியெடுக்கப்படும் பொதுநிலைகள் மீண்டும் குழப்பத்திற்கு உள்ளாக்கும் சூழல் பற்றிய உங்களது கருத்து முக்கியமானது. ஆயினும் இங்கே எனது கருத்து வேறுவகையான சில விடயங்களையும் கூட உளடக்கியது. அதீத அங்கீகரிப்பின் பின் கூட 'நிரந்தர பொதுநிலை' என்பதை இயன்றவாறு மறுத்தடியிருத்தல் முக்கியமானது. நிரந்தர பொதுநிலை என்பது கூட சிலவகையான இறுக்கங்களை மீண்டும் மேற்கொள்ளத் தொடங்குதல் என்பது மீண்டும் பிழையான விடயமாகக் கூடும்.

அவ்வாறே இன்றைய இலங்கை அரசியலின் பின்னே ஒளிந்திருக்கும் வேட்டைக்காரர்கள் பற்றிய விடயம். எல்லாவிதமான அடையாள அரசியல்களும் ஆதிக்கத்தை விரும்புபவர்களால் பயன்படுத்தப்படும் என்பத்ற்கு எம்முன் இலங்கை அரசியல் மடுமல்ல இந்திய அரசியலும் சாட்சி பகருகின்றது. இதில் மக்கள் நலன் சார்ந்தவர்களுக்கு இருக்க வேண்டிய தெளிவு என்னவென்றால் அவ்வரசியலை மேற்கொள்பவர்கள் புகும் இடைவெளிகளை நிச்சயம் கருத்தில் எடுத்தே ஆகவேண்டும். அதன் போது மடுமே மக்கள் விரோத சக்திகளை துரத்தியடிக்க முடியும். தேசியவாத எழுச்சியின் போதான காலகட்டத்தின் போது ரஷ்ய சார்பு மார்க்சியர்கள் தேசியவதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆயினும் மிகவும் பின்பாக அதனை ஏற்றுக்கொண்டார்கள். அன்றைக்கே அவர்கள் அதன் தேவையை ஏற்றுக் கொண்டு சிலவகையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தால் இன்றைக்கு நிலைமை வேறாக இருந்திருக்கக் கூடும். குறைந்தபட்சம் சிங்கள் மக்கள் மத்தியிலாவது தமது வேலைத்திட்டங்களை அன்று தொடர்ந்திருந்தால் சிலவேளை இன்றையநிலைமை வந்திருக்காது. தனியே கருத்தியலும், தனியே உணர்வுத்தளமும் பிளவுற்றதால் நாம் இன்றைக்கு மிகமோசமான நிலையை வந்தடைந்திருக்கிறோம். சிறிய விடயங்களுக்காக பிளவுபட்ட நாம் சாதகமான காரணிகளை நினைத்து ஒன்றுபடாமல் போய்விட்டோமே. சிறிய விடயங்களைக் கூட தேடித்தேடி விமர்சிக்கும் நாம் சாதகமான விடயங்களில் ஒன்று சேர்ந்திருந்தால் இன்றைக்கு இக்கட்டான நிலையில் இருப்போமா?

நீங்கள் சொல்லும் உணர்வுரீதியான தளத்தில் வைத்து அணுகப்படும் நிலைஎன்பது 'மிகவும் கடமைக்கப்பட்டது'. அதனை நீங்கள் சொல்வது மாதிரியான பொது அடையாளங்களூடு நிலைநிறுத்துவதென்பது கூட தற்காலிகமாக மட்டுமே சாத்தியப்படும். எமது தெரிவுகள் கலப்படைந்தவையாக இருக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. நாம் தெரிவுகளை மேற்கோளும் போது மற்றைய தெரிவுகளை நிராகரிக்கின்றோம். அங்கே நாம் மக்கள் நலன் என்பதை புறக்கணிப்பதாகவே அர்த்தப்படுகின்றது.

மாற்றுக்கருத்து என்ற தளம் இறுதியில் இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து வேலை செய்வது வரை எம்மைக் கொண்டுவந்துவிடது. அரசாங்கத்தையும் புலிகளையும் எதிர்ப்பாவர்கள் கூட அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்பவர்களுடன் மட்டுமே நட்புடன் இருக்க முற்படுகிறார்கள். மகேஸ்வரி வேலாயுதத்திற்கு அஞ்சலி செய்பவர்களால் திலீபனை நினைவு கூர முடியவில்லை. இங்கே புலிகள் மட்டும் பிழை செய்யவில்லை மாற்றுக்கருத்தாளர்களும் சேர்ந்தே பிழை விட்டார்கள். வன்னியில் மக்கள் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்திலும் மாற்றுக்கருத்தாளர்களும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். புலிகளை எதிர்ப்பதாக நினைத்து ஒரு மக்கள் கூட்டம் கொன்றொழிக்கப்படுவதற்கு துணை போய்விட்டார்கள் மாற்றுக்கருத்தாளர்கள். இதில் அரசாங்கத்தை எதிர்க்கும் மாற்றுக்கருத்தாளர்களும் அடக்கம். :(

முதலாளித்துவத்துடன் கைகோர்த்துவிட்டது நேபாளம் என்ற கருத்திலோ மார்க்கியத்தின் தூய பிரதிநிதிகள் நேபாள மார்க்சியக் கட்சியினர் என்ற வாதங்களில் எனக்கு நம்பிக்கை. அவை எனக்கு தேவைப்படுவதும் இல்லை. ஆனால், நேபாளத்தில் ஓரளவுக்காவது மக்கள் நலன் சார்ந்த அரசாங்கம் நின்றுநிலக்கத்தான் போகின்றது. முதலாளித்துவன் கைகோர்த்தாவது, படுத்தாவது அவர்கள் மக்கள் நலனை முன்னிறுத்திய அரசியலை செய்யத்தான் போகின்றார்கள். அவன் தான் மார்க்சின் குழந்தை. அவன் தான் மார்க்சிஸ்ட். மக்கள் போராளி மக்கள் நலனுக்காக சமரசம் செய்வான். சமரசத்தினூடாக தனது மக்கள் அரசியலை மேற்கொள்ளுவான். புதிய உலக ஒழுங்கில் எமக்கான சாத்தியத்தை நாம் பெற்றே ஆகவேண்டும். இந்துத்துவா இந்தியா நேபாளத்தில் காலூன்ற வழிசமைப்பதை விட முதலாளித்துவத்துடன் படுத்தெழும்பிய 'மார்க்சிய' கட்சி இருப்பது மேலானது. (டக்ளஸ் செய்யும் சமரசம் மக்களுக்கானது அல்ல. அதில் யாருக்கும் சந்தேகம் இருக்கக் கூடாது.)

மார்க்சியம் புதிய வடிவில் இந்த நூற்றாண்டின் இறுதியில் தன்னை வெளிப்படுத்தும் என நான் நிச்சயமாக நம்புகின்றேன். தேசிய அரசாங்கங்களின் வளர்ச்சி என்னும் பேரில் அதிக வருமானத்திற்கான வரிவிதிப்பு என்பது அதன் முதல்கட்டமாக இருக்கக்கூடும். இலவசக் கல்வி, இலவச மருத்துவம் என்பவை இதன் ஆரம்ப கட்டமாக இருக்கக் கூடும். இங்கே நுகர்வுக் கலாச்சாரம் உருவாக்கும் வர்க்கப்பிளவை எதிர்கொள்வதுதான் எமக்கான தேவை. fashion design இல் விளிம்புக் கதையாடல்களை புகுத்துவது கூட முக்கியமானதே.

our ultimate goal of establishing a Socialist Communism. However, in the current national and international circumstances, we have decided to move ahead by institutionalising the federal democratic republic.
- Pushpa Kamal Dahal (Prachanda) - Maoist leader

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7596523.stm

இயங்கியல் என்பதே எப்போதும் இருப்பது.

-சிவப்பு மார்க்சியன்


கொழுவி யினது பின்னூட்டம்.

நான் சொன்னவை பொதுவாக சகல புலம்பெயர்ந்தவர்களுக்கும் பொருத்தமானதுதான். நான் உட்பட- சந்தடி சாக்கில் தகவல்களைப் பெற்று தனக்கெதிராக கொழுவி பயன்படுத்துகிறார் என்று சிறிரங்கன் கருதுவதில் உண்மையில்லை.

கொழுவி,
இந்த 3 மாசம் எல்லாரும் நல்ல உழையுங்கோ. ஜனவரி மாதம் போராட்டம் எண்டு நினச்சுக் கொண்டு உழையுங்கோ. தவிர்க்க முடியாம போராட்டம் புலம்பெயர் சமூகத்திடம் கையளிக்கப்பட்டுவிட்டது.
//

இதை நான் விளங்கிகொண்டது சரியானதெனில் அது இதுதான். அதாவது அங்கே இராணுவத்தின் கையோங்கி.. புலிகள் தோற்கடிக்கப்பட்டு அழித்தொழிக்கப் பட்டால் பிறகு அங்குள்ள தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும் பணி புலம்பெயர் தமிழர்களின் கைகளில் என்று நீங்கள் நினைத்து இதை சொல்லியிருந்தால் ஐ யாம் வெரி சாரி..

புலிகள் அங்கு சண்டைபிடிப்பதால் மட்டுமே இங்கு வருசத்திற்கு ஒருதடவையாவது வீதியில இறங்க முடிகிறது.

ஆகக்குறைந்தது மாதம் ஒரு விமானத்தாக்குதலைத்தன்னும் அவர்கள் செய்ய வேண்டும்.

புலிகள் இல்லையெனின் -
கொஞ்ச காலத்துக்கு பிரபாகரனைச் சனம் திட்டும். என்ன பண்ணினவர் என ஏசும். பேசாமல் ரணிலை வரவிட்டிருக்கலாம் என்று அட்வைஸ் செய்யும். பிறகு உதெல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கும்.

ஒரு 5 வருசத்தில விடுமுறைக்கு சனம் ஊருக்கு போகும். முல்லைத்தீவிலும் கிளிநொச்சியிலும் இருந்து ரோமிங்கில செல்போனில பேசும். விடுமுறை முடிய - சரியான கொசுக்கடியப்பா எண்டு மனிசி முணுமுணுக்க தங்கட தாயகப் பிரதேசமான ஐரோப்பா கனடா பகுதிகளுக்கு திரும்புவினம்.

சிறிரங்கன் இராயகரன் ஆட்கள் - புலிகளின் முடிவு எல்லா பாசிசங்களின் முடிவுதான் என கொஞ்ச காலத்துக்கு கட்டுரை எழுதுவினம். பிறகு அவையும் புலிகளை மறந்து விடுவார்கள். பிறகும் அவலா அவைக்கு யாரும் கிடைப்பினம். இடிக்க

ஆ.. சொல்ல மறந்து விட்டேன். அமீபா செத்து ரொம்ப நாளாகிவிட்டது. அமீபா மேல் விழும் வெளிச்சம் ஒருவித அதிகாரத்தை கட்டமைக்கின்றது என அமீபா புரிந்து கொண்டு தன்னைத்தானே சாகடித்துக் கொண்டதாயக் கேள்வி


சேகர், சுதன், சுதா, தர்மா, அந்நியன், சிவப்பு மார்க்சியன் ஆகியோரது கூட்டான பின்னூட்டம்.

கொழுவி,
எங்களின் கல்வெட்டுக்களிலும் ஏடுகளிலும் காணப்படும் வசனங்களை இச்சந்தர்ப்பத்தில் உங்களுடன் நினைவு கூருகின்றேன்.

'அமீபா என்பது எம்முன்னோர் தமக்கு தாமே வைத்துக் கொண்ட பெயராகும். அவர் பரவலாக அமீபா என்றே அழைக்கப்பட்டார். அவர் காடு, மேடு, இணையம், பார் எங்கும் அலைந்து திரிந்தார். அவரை தன்னால் எவ்விடத்திலும் பொருத்திக்கொள்ள முடியவில்லை. எல்லா இடங்களிலும் அவர் விட்டுச் சென்ற எச்சங்கள் காரணமாக, எம்மூதாதையரான தனித்த அமீபாவின் தன்னிலை இறுக்கம் கொள்ள எத்தனித்த நிலையில் அமீபா தன்னைத்தானே பிளந்துகொண்டார். அதில் இருந்து இருவகையானோர் தோற்றம் பெற்றனர். அவர்கள் நாளெல்லாம் தம்மீது படர்ந்திருந்த அமீபாவின் நிழல்களை உரிந்துகொண்டிருந்தனர். நிழல்களை உரிக்க உரிக்க அமீபாவின் நிழல்கள் தம்மீது கவிவதைக் கண்டு அச்சமுற்றனர். தம்மில் இருந்து அமீபாவின் வாசம் வருவதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அமீபாவின் நிழல்கள் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக கருத்த போர்வைகளை போர்த்தவாறு வெவ்வேறு வழிகளில் பிரிந்து சென்றனர். ஒருவர் மிகப்பெரும் புகையில் மாட்டிக் கொண்டு புகையின் வாசத்தை தனக்காக்கிக் கொண்டார். தனக்கு புகை எனப் பெயரைச் சூட்டிக் கொண்டார். மற்றவர் சுனாமியில் அகப்பட்டு, சுனாமியை நினைத்து சுனாமி என்ற பெயரைத் தனக்குச் சூட்டிக் கொண்டார்..

அவர்களால் அதே வாசத்துடனும், இயல்புகளுடனும், பெயருடனும் இறுதிவரை இருக்க்வே முடியவில்லை. அடையாளமற்று தாம் இருக்க முற்படும் போதெல்லாம் எதோ ஒருவிதமான அடையாளங்கள் தம்மீது சுமத்தப்பட்டுக் கொண்டே இருப்பதை அவர்கள் வெறுத்தார்கள். அடையாளம் இழந்து போகும்போதெல்லாம் போகும் இடங்களில் உள்ளது அவர்கள் தொடர்புபடுவதுமான அடையாளங்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுக் கொண்டே இருப்பதை தாங்கிக்கொள்ள முடியாமல், தம்மைப் பிளந்து அடையாளமற்ற தன்னிலைகளை உருவாக்கி விட்டு கரைந்து மறைந்து போனார்கள். தமது மூதாதையான அமீபா உடைந்து தாம் இருவராகத் தோன்றியதை விரும்பாத இவர்கள் தம்மை ஒவ்வொருவரும் மூன்றாகப் பிளந்து கொண்டார்கள்.

சேகர், சுதன், சுதா, தர்மா, அந்நியன், சிவப்பு மார்க்சியன் ஆகிய ஆறு பேரும் தோன்றினார்கள். ஆயினும் எவரில் இருந்து யார் தோன்றினார்கள் என்பதை மறைத்துவிட்டே போனார்கள். எம்மீது சுமத்தப்பட்ட ஞாபகங்கள் கூட புகை, சுனாமி ஆகிய இருவரினதுமே. எம்மால் எம்மை வேறுபிரித்து அறிய முடியவில்லை. நம் எல்லோர் மீதும் புகையில் மணமும், சுனாமியின் பயங்கரமும் தெரிகின்றது. இந்த ஞாபகங்களை தொலைத்து ஓடிக்கொண்டிருக்கின்றோம். நாம் எம்மைச் சந்தித்துக் கொள்வதை தவிர்க்கின்றோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தளங்களில் உலாவித்திரிகின்றோம்.

ஆயினும், எமது மூதாதையான அமீபா தனது கட்டமைக்கப்பட்ட தன்னிலையை தாங்க முடியாது பிளந்த நாளில் எதேச்சதிகரமாக நாம் 6 பேரும் சந்தித்துக் கொள்கின்றோம். அமீபா எதற்காக தன்னைப் பிளந்து மறந்தாரோ, அவ்வுறுதியை நாமும் எடுத்துக் கொள்கின்றோம். நாம் தன்னிலைகள் இறுக்கமடைவதை விரும்பவில்லை. நாம் அடையாளமற்றவர்கள். எம்மீது அடையாளங்கள் சுமத்தப்படுவதை விரும்பவில்லை. ஒடுக்கப்படவர்கள் எல்லோருடனும் எம்மைத் தற்காலிகமாக எம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றோம். அது 'நிரந்தரமாக' இறுக்கம்பெறும் தருணத்தில் எம்மைப் பிளந்து மறைந்துவிடுவோம். அடையாளங்களைச் சுமப்பது எமக்கு மிகவும் வேதனை தருவதாயிருக்கிறது. ஆயினும் செல்லும் இடங்களின் மூலம் அடையாளங்கள் சுமத்தபடுவதை எம்மால் தவிர்க்க முடியவில்லை. அவ் அடையாளங்கள் இறுக்கம் பெறுவதை நாம் ஏற்றுக்கொள்வதில்லை. நாம் ஒவ்வொரு முறையும் எம்மை அடையாள நீக்கம் செய்து கொள்கின்றோம். நாம் எம்மை ஒவ்வொரு முறையும் எம்மை அரசியல் நீக்கம் செய்து கொள்கின்றோம். நம்மை இடைகொரு முறை பால்நீக்கம் செய்து கொள்கின்றோம்.

அப்போது மட்டுமே, புதிய விடயங்களை புதிதாக அணுக முடிகின்றது. நிலைப்பட்ட விடயங்களும், தேங்கிக் கொண்டிருக்கும் அடையாளங்களும் அடிப்படைவாதத்தைத் தோற்றுவித்துவிடும் என்பதை நாம் அறிவோம். எமது முன்னோரான அமீபாவின் நோக்கம் அதாக இருந்தது எனக் கூறுகின்றார்கள்.

விரைவில் நாம் எம்மையும் பிளந்து கொள்வோம். நாம் யார் என்பது எமது பிளவுறும் தன்னிலைகளுக்கு தெரிந்துவிடக்கூடாதென்பதற்காக ஞாபகப்பரப்புக்களை அழித்துக்கொண்டேயிருக்கிறோம்.

எம்மைப்பற்றிய கட்டுக்கதைகளையும் புனைவுகளையும் அழிக்கும் நோக்கில் எமது முனோர்களான அமீபா, புகை, சுனாமி ஆகியோரை நினைவில் நிறுத்தியும்-அழித்தும் நாம் கூட்டாக இவ்விடயங்களை எல்லோருக்கும் தெரிவிக்க நினைத்தோம்.

நன்றி.

-சேகர், சுதன், சுதா, தர்மா, அந்நியன், சிவப்பு மார்க்சியன்

உரையாடல் - 14 (ஏகாந்தி, Constantine, சேகர், த. ஜெயபாலன்)

தேசம் வலைத்தளத்தில் இடம்பெற்ற உரையாடல்

வன்னியில் யுத்தம் உக்கிரம். நியுயோர்க்கில் ஜனாதிபதி, சொல்ஹெய்ம் சந்திப்பு
- ஏகாந்தி

வடபகுதியில் யுத்த நிலை கடந்த இரு வாரங்களாக மிகவும் உக்கிரமமான நிலையில் இருப்பதாக வன்னியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றுமுன்தினம் (22) வடபகுதியில் ஐந்து இடங்களில் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதேபோல நேற்று (23) மோதல்கள் தொடர்ந்துள்ளன.

இம்மோதல்களின் போது இரு தரப்புக்கும் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தரப்பினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்த ஏக காலத்தில் இலங்கை விமான படைக்குச் சொந்தமான ஜெட் ரக தாக்குதல் விமானங்கள் புலிகளின் இலக்குகள் மீது குண்டுவீச்சு தாக்குதல்களையும் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன்குளம், கரம்பைக்குளம், மாங்குளம், கொக்காவில் கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய பகுதிகளிலேயே இந்த மோதல்கள் தற்போது தீவிரமடைந்துள்ளன.

நேற்று முன்தினம் மாலை ஆரம்பித்த இம்மோதல்கள் நேற்றும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் நேற்றுக் காலை வரை இடம்பெற்ற மோதல்களின் போது 41 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

மோதல்களை அடுத்து அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது விடுதலைப் புலி உறுப்பினர்களின் 10 சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் 13 சடலங்களும் நேற்றுமுன்தினம் பிற்பகல் ஐ.சி.ஆர்.சி. யிடம் கையளிக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் இருந்து பொலிசாரின் ஊடாகப் பொறுப்பேற்ற ஐ.சி.ஆர். சி அதிகாரிகள் அவற்றை விடுதலைப் புலிகளிடம் ஒப்படைப்பதற்காக ஓமந்தை ஊடாக புளியங்குளம் பகுதிக்கு உடனடியாகவே கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் சடலங்களைப் பார்வையிட்ட வவுனியா மாவட்ட நீதிபதி அவற்றை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறு வவுனியா சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார் எனவும் தெரியவருகிறது.

உணவுப் பொருட்களைக் கொண்டு செல்வதில் நெருக்கடி.

வவுனியாவில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற மகாநாட்டில் வன்னிப் பிரதேசத்தில் உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு இல்லையெனவும், வன்னியில் அரச கட்டுப்பாடற்ற பகுதிகளுக்கு அடுத்த வாரமளவில் 4,800 மெற்றிக் தொன் உணவுப் பொருட்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் திவாரட்ண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடங்களுக்கு கூறியவை வருமாறு: வடக்கில் உள்ள அரச கட்டுப்பாடற்ற பகுதிகளில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது. அதில் எந்த உண்மையுமில்லை.
அப்பகுதிகளுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனைத்தும் குறைவின்றி அனுப்பப்பட்டுக் கொண்டு வருகின்றன.
அப்பகுதியில் உள்ள அரச அதிபர்களின் ஊடாக இப்பொருட்கள் மக்களுக்கு உரிய முறையில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
அரச அதிபர்களின் தகவலின்படி அங்கு உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு கிடையவே கிடையாது. கடந்த வாரம் கூட நாம் கோதுமை மா, அரிசி, சீனி மற்றும் பருப்பு உள்ளிட்ட ஆயிரம் மெற்றிக் தொன் பொருட்களை வன்னிக்கு அனுப்பி வைத்தோம். அதேபோல் அடுத்த வாரம் 4 ஆயிரத்து 800 மெற்றிக் தொன் பொருட்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உணவுத் தட்டுப்பாடுகள் ஏற்படாத வகையில் நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். வடக்கில் உள்ள அரச அதிபர்களுடன் இது தொடர்பாக நாம் தெளிவான தொடர்பாடலைப் பேணி வருகிறோம். அடுத்த வாரம் வன்னிக்கு அனுப்பப்படும் பொருட்களை கிளிநொச்சி அரச அதிபரின் ஊடாக மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Sri Lankan Forcesஅதேநேரம், இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்ற முறை நாளாக இருந்த போதிலும், பொருட்களை ஏற்றிக்கொண்டு வவுனியாவிலிருந்து புறப்பட்டுச் சென்ற 20 ட்ரக் வண்டிகளுக்கு ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாகச் செல்வதற்குப் படையினர் அனுமதி வழங்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த ட்ரக் வண்டிகளை ஓமந்தையூடாகச் செல்ல அனுமதிப்பதற்கு உயர்மட்டப் படைத் தரப்பினரிடமிருந்து தங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என படையினர் தெரிவித்ததையடுத்து பல மணித்தியாலங்கள் காவல் இருந்துவிட்டு, இந்த ட்ரக் வண்டிகள் ஓமந்தையிலிருந்து வவுனியா திரும்பியதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

கடந்த வாரம் இரண்டு தினங்கள் கிளிநொச்சி மாவட்டத்துக்கான பொருட்களைக் கொண்டு செல்வதற்கென ஏற்பாடுகள் இருந்த போதிலும் அந்த மாவட்டத்திற்கான பொருட்களை ஏற்றிச் சென்ற ட்ரக் வண்டிகளுக்கு ஓமந்தை சோதனைச்சாவடியில் படையினரால் அனுமதி வழங்கப்படவில்லை.

இதற்கிடையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான அத்தியாவசிய பொருட்கள், உணவுப்பொருட்கள் என்பன தொடர்ந்து ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக விநியோகிக்கப்பட்டு வருவதாக இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.

கடந்த 5 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையிலான ஒரு வார காலப்பகுதியில் இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் 73 ட்ரக் வண்டிகளில் அரிசி, பருப்பு, கருவாடு உள்ளிட்ட உணவு மற்றும் கட்டிடப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.

கிளிநொச்சி நகரப் பகுதி பாடசாலைகள் மீளவும் இயங்க ஆரம்பித்துள்ளன.

ஒரு புறத்தில் யுத்தத்தின் பாதிப்பும், மறுபுறத்தில் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பும் வன்னிப் பிரதேசத்தில் பாரிய சிக்கலை உருவாக்கியுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், திங்கட்கிழமை தொடக்கம் கிளிநொச்சி நகரப் பகுதி பாடசாலைகள் நேற்றிலிருந்து மீளவும் இயங்க ஆரம்பித்துள்ளன.

படையினரின் எறிகணை வீச்சுக்கள் காரணமாக கிளிநொச்சியிலிருந்து மக்கள் இடம்பெயரத் தொடங்கிய பின்னர் கடந்த சில தினங்களாக கிளிநொச்சி மேற்கு, தென்மேற்கு மற்றும் நகரப் பகுதிகளிலுள்ள பாடசாலைகள் இயங்கவில்லை. தற்போது கிளிநொச்சி நகரிலுள்ள பாடசாலைகளான கிளிநொச்சி மகாவித்தியாலயம், கிளிநொச்சி மத்தியகல்லூரி, புனித திரேசாள் மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகள் இயங்க ஆரம்பித்துள்ளன.

பல குடும்பங்கள் கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்து விட்ட நிலையில் குறைவான மாணவர்களே பாடசாலைகளுக்கு தற்போது வருகை தருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வன்னிப் பகுதிக்கான தபால் சேவை தடைப்பட்டுள்ளது.

மறுபுறமாக வன்னிப் பகுதிக்கான தபால் சேவை கடந்த 10 நாட்களாக தடைப்பட்டுள்ளன. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கமையவே வவுனியா ஓமந்தையில் வன்னிக்கான தபால் சேவையை நிறுத்தியுள்ளதாக வவுனியா மாவட்ட தபால் திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்ததும் வன்னிக்கான தபால்களை அனுப்ப முடியும் எனவும் அவர் தெரிவித்தார். 10 நாட்களாக இத்தபால் சேவைத் தடையினால் அவசரமான நேர்முகப்பரீட்சை, நியமனக் கடிதங்கள் போன்ற முக்கிய கடிதங்கள் கிடைக்கப் பெறாமல் மக்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளத.

நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடையில் பேச்சுவார்த்தை.

அதேநேரம், திங்கட்கிழமை நியுயோர்க் நகரில் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடையில் பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது இடம்பெயர்ந்த மக்களுக்காக மனித நேயப் பணிகளை முன்னெடுப்பதில் தமக்கு எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை எனவும் உதவிகள் அனைத்து தமது அரசாங்கத்தின் தரப்பினர் ஊடாகவே கொண்டு செல்ல முடியும் எனவும் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்மிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐ.நா. கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் திங்கட்கிழமை நோர்வேயின் அமைச்சரும் இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம், விசேட தூதுவர் ஜோன் ஹன்சன் பௌவியர் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தினார். சுமார் ஒரு மத்தியாலம் நீடித்த பேச்சில், வடக்கில் இடம்பெறும் போர் பற்றியும், மனிதநேய அமைப்புக்களின் வெளியேற்றம், போர் முன்னெடுப்புகளால் இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளை வழங்குவது தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ரோஹித போகொல்லாகம, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிநாட்டமைச்சின் செயலாளர் பாலித கோஹன ஆகியோர் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கிழக்கு மாகாணத்தை புலிகளிடம் மீட்டெடுத்து அபிவிருத்திகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. நாடு பூராகவும் சமாதானம் மற்றும் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதையே ஒரே இலக்காகக் கொண்டு எமது அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

கிழக்கில் இடம்பெற்ற மாகாண சபை தேர்தலின் பெறுபேறுகள் மூலம் அரசின் கொள்கையை அம்மாகாண மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளமை புலனாகின்றது. பயங்கரவாதத்திற்கு மாறாக ஜனநாயகத்தின் மீது அந்த மக்கள் கரிசணை கொண்டுள்ளமை இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.

தற்போது வடக்கில் நிலவும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வினை கண்டு வருகின்றது. படையினர் முன்னகர்ந்து வரும் பகுதிகளில் மக்களை, புலிகள் பலிகடாக்களாக பயன்படுத்தி வருகின்றனர். வன்னியில் வாழ்ந்து வரும் மக்களுக்கு அரசாங்கத்தின் ஊடாக மனிதாபிமான உதவிகளை நோர்வே வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின்போது, சமாதானத்தின் அவசியம் குறித்து நோர்வே தரப்பினர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

“ஐ.நா. சபை, சார்க் அமைப்பு, நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும் மாநாடுகளில் சமாதானம் பற்றிய பேச்சு, சம்பிரதாய பூர்வமானதொன்றாகிவிட்டது - ஓய்வுபெற்ற திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி அன்ரன் பாலசிங்கம்

இதேநேரத்தில் திருகோணமலை மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நிலையம் கடந்த சனிக்கிழமை நிலைய மண்டபத்தில் நடைபெற்ற உலக சமாதான நிகழ்வில் பிரதம அதிதியாக பங்குபற்றிப் பேசிய ஓய்வுபெற்ற திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி அன்ரன் பாலசிங்கம் அவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவையே.

அதாவது “ஐ.நா. சபை, சார்க் அமைப்பு, நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும் மாநாடுகளில் சமாதானம் பற்றிய பேச்சு, சம்பிரதாயபூர்வமான தொன்றாகிவிட்டது. இன்று மனிதம் மதிக்கப்படுவதில்லை. மனித விழுமியங்கள் பேணப்படுவதில்லை. சட்டம், சமயம், சம்பிரதாயங்கள் போற்றப்படுவதில்லை’ என்று தெரிவித்தநீதிபதி அன்ரன் பாலசிங்கம் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“நான் என்ற அகங்காரம், நசுக்கி ஆளும் போக்கு, குரோத மனப்பான்மை ஆகியனவே இன, மத, நாடு ரீதியாக பிரிவினை, முரண்பாடு மற்றும் வேறுபாடுகள் தோன்றுவதற்கு காரணமாக அமைகிறது. சமாதானம் என்றால் என்ன? சமாதானம் ஏன் வேண்டும்? சமாதானம் எங்கே? என்று ஒவ்வொருவரும் தமக்குள் கேட்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு மனித சமுதாயம் தள்ளப்பட்டுள்ளது.

20 ஆம் நூற்றாண்டு விஞ்ஞான யுகம், ஆக்கத்திற்குச் செய்யவேண்டிய பங்களிப்பை அணு ஆயுத உற்பத்திக்குச் செலவு செய்து மனிதனை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்கிறது. இன்று எமது சமூகம் உயர்வெனக் கருதுவது பொருளாதார உயர்வு, சமூக அந்தஸ்து உயர்வு, பதவி உயர்வு, புகழ் போன்றவற்றையே. இவையனைத்தும் பேறில்லா உயர்வுகளாகும். மனித மனங்களில் அன்பு மற்றும் அஹிம்சையினால் கட்டியெழுப்பப்படுகின்ற சாந்தி, சமாதானமே உரமும் உறுதியும் வாய்ந்த உயர்வானதாகும்.

மனித மனங்களிலே உயர்வான எண்ணங்கள் உருவாக வேண்டும். நல்லவற்றை சிந்திக்க வேண்டும் என்று திருவள்ளுவர் வலியுறுத்தியுள்ளார். ‘தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் இச்செகத்தினை அழித்திடுவோம்’ என்று மகாகவி பாரதியார் முழக்கமிட்டது மனிதத்தன்மையை தனிமனித உரிமையை நிலை நாட்டுவதற்கும் சமத்துவத்தை வளர்த்து சமாதானத்தை நிலைகொள்ளச் செய்வதற்குமேயாகும். அகங்காரம், மமகாரம் மனிதனிடத்தில் இருக்கும் வரை மனித குலத்தினால் சமூகத்திற்கோ, இனத்திற்கோ, நாட்டிற்கோ நன்மை ஏற்படப்போவதில்லை. இது வெறுமனே அச்சத்தையும் அழிவையுமே ஏற்படுத்தும்.

கொடிய யுத்தத்திற்கும் உயிர், உடமை நாசத்திற்கும் மூலகாரணமாக நவீன விஞ்ஞானம் காணப்படுகிறது. இருதரப்பினருக்குமிடையே ஏற்படும் போட்டி நிலையை முரண்பாடு எனலாம். முரண்பாடும் ஓர் உறவே. இந்த உறவு வேறுபட்டதாக இருக்கும். இந்த உறவு சரியான முறையில் கையாளப்படுமானால் ஒரு தீர்வைக் கொண்டுவர முடியும். மனித தேவைகள் நிறைவேறாமை காரணமாகவும் முரண்பாடு தோன்றுகின்றது. திருக்குறளில் கூறப்பட்டது போன்று காகங்கள் தங்களுக்கிடையே உணவைப் பகிர்ந்து கொள்வது போல நாமும் சமாதானத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்” என்றார்.

இக்கருத்து சிந்திக்கப்படக் கூடியதே.

Constantine இனது பின்னூட்டம்.

Its bit worrying to note that lots of people have grate things to say when there is an article about SDLF or Braziers (On thesamnet). But no one seems to be commenting on these kinds of articles i.e. Human sufferings

I just concerned about THESAMnet readers priorities. Isn’t it worrying reflection????

Constantine


சேகர் இனது பின்னூட்டம்.

Constantine,
நீங்கள் கூறுவது போல் இப்படியான விடயங்களை யாரும் கவனத்தில் எடுக்க மாட்டார்கள். ஏனெனில் இது அவர்களது பிரச்சனை அல்ல. மேலும், அவர்களது ஆர்வத்திற்கு உட்பட்ட கதையாடல் பிரதேசமும் அல்ல.

விடுதலைப்புலிகள் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டால் மட்டும் நாட்டில் சமாதானம் வந்துவிடும் என்று நம்பும் சிலர் மட்டுமே இங்கே வந்து இன்றோ நாளையோ அரசாங்கத்தை பராட்டி சில வார்த்தைகள் கூறிவிட்டுப் போகக்கூடும்.

வன்னியில் சகோதரர்களையும் பெற்றோர்களையும் கொண்டுள்ளோரின் வலி யாருக்கும் புரிவதுமில்லை. எல்லோரும் தாங்கள் சரி என்பதை நிறுவுவதில் கொண்டுள்ள கரிசனையை வேறெதிலும் காட்டுவதில்லை.

இது, போராடப் புறப்பட்ட தலைமுறையின் குறைபாடா அல்லது போராட்டத்தின் விளைவுகளா தெரியவில்லை.

தேசம்நெட் ஐ ஆரம்பத்தில் நான் ஒரு ஊட்கமாக மட்டும் நினைக்கவில்லை. மாற்றுக்கருத்துள்ளோர் பலரைக் கொண்டுள்ள இயக்கமாக கருதியே அதில் ஆர்வம் காட்டத் தொடங்கினேன். சில உரையாடல்களின் முடிவில் சில செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படக் கூடும் என்ற வெகுளித்தனமான நம்பீக்கை எனக்கிருந்தது. அல்லது சில வகையான உரையாடல்கள் சில வகையான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுவதற்கு உதவக் கூடும் என்று அப்பாவித்தனமாக நம்பக் கூடியதாக இருந்தது.

எனது நம்பிகைகளுக்குச் சில காரணங்கள் இருந்தது. ஹேபர்மாசினது Public sphere என்ற கருத்தியலை சாதகமாக்கக் கூடிய சந்தர்ப்பத்தைக் கொண்டிருந்த ஒரே தளம் தேசம்நெட் மட்டுமே. மக்களுடன் ஊடாடக் கூடிய நவீன இணைய ஊடகவியலின் web 2.0 ஐ சாத்தியத்தையும் தேசம்நெட் கொண்டிருந்தது. ஆயினும் தேசம்நெட் அதனை பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதை இழந்துகொண்டிருக்கிறது.

extremely productive discussions of liberal democracy, civil society, public life, and social changes என்பதைச் சாத்தியமாக்கக் கூடிய தளம் சரிநிகருக்கு பின்னர் தேசநெட் கு மட்டுமே வாய்த்தது. இருவருமே அதனைப் பயன்படுத்த தவறிவிட்டீர்கள்.

-The claim that the Internet can lead to a greater democratization of society is founded on tenets of unlimited access to information and equal participation in cultural discourse. But will this inundation of texts and voices lead to anarchic, rather than democratic, forms of communication? To put it another way, does discourse on the Internet lead to a completely postmodern world in which multiple centers compete with one another in a debate which can only lead to complete divergence and fragmentation? -

இன்று கூட சில விடயங்களை நீங்கள் மறந்து உங்களின் ஊடகத்தை செயற்பாட்டுத் தளத்தை நோக்கி நகர்த்த முடியும். அல்லது காலப்போக்கில் வம்பளக்கும் தளமாக மட்டுமே மாறிப் போய்விடும்.

a theater in modern societies in which political participation is enacted through the medium of talk என்று நன்சி பிரேசர் கூறுவார்.

சிங்கள மக்களது ஊடாட்டம் இன்றி தமிழர்களுக்கு எவ்வாறு உரிமைகள் கிடைத்துவிடாதோ அவ்வாறே புலி ஆதரவாளர்கள் இல்லாமல் மாற்றுக் கருத்து வெற்றிபெற்றுவிடாது. புலி ஆதரவாளர்களை புலி எதிர்ப்பளர்களும், புலி எதிர்ப்பாளர்களை புலி ஆதரவாளர்களும் தீண்டத்தகாதவர்களாகக் கருதும் மனநிலையை கைவிட வேண்டும். அப்போது மட்டுமே சில வகையான மாற்றங்களை எதிர்பார்க்க முடியும். அறிவார்த்த ரீதியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் புதிய ‘சாதியம்’ ஒழிக்கப்பட வேண்டும்.

‘The Structural Transformation of the Public Sphere’ என்னும் நூலில் ஹேபர்மாஸ் கூறுவது போல் எமக்குச் சில வகை மாற்றம் வேண்டும். அதற்காக நாம் எல்லோரும் சில வகையான விட்டுக் கொடுப்புக்களைச் செய்தவாறு உரையாடத் தயாராக வேண்டும். உரையாடல்களை செயற்பாட்டுத்த்ளத்தில் நடைமுறப்படுத்தூவதற்கான கட்டுமானங்கள் வேண்டும்.

இப்படியே போனால், ஒரு கடத்தில் பின்னூட்டம் அளிப்பவர்களே தேசத்திற்கு கடிதம் எழுதிக் கேட்பார்கள். கன காலமாக பிரா கட்டுரை ஒண்டு வ்ரவில்லையே. ஒண்டு போடுங்கோ எண்டு.

2010 இல் உலகம் தகவல் பெருக்கத்தின் காரணமாக அதனைக் கடந்து ஆய்வுரீதியான முயற்சிகளை நோக்கி சென்றுவிடும் என எதிர்பார்க்கப்படுக்ன்றது.

தேசம்நெட் தனக்குள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி தமிழ்சூழலில் சில வகையான மாற்றங்களை ஏற்படுத்தலாம். இன்றும் காலம் கடந்துவிடவில்லை. தமிழர் அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அதற்காக உரையாடல்களை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

எனது கருத்தை கவனத்தில் எடுப்பீர்கள் என நம்புகின்றேன். உங்களில் இருக்கும் மதிப்பின் காரணமாகவே இதனை எழுதத் தலைப்பட்டேன். பலரும் பல வகைகளில் பிழை செய்யக் கூடும்.

தேசம்நெட்டின் தீவிர வாசகன்,
-சேகர்


த. ஜெயபாலன் இனது பின்னூட்டம்.

நண்பர் சேகருக்கு

உங்களுடைய கருத்துக்கள் மிகவும் ஆரோக்கியமானவையாகவே கருதுகிறேன். நிச்சயம் கவனத்தில் எடுப்போம்.

//தேசம்நெட் தனக்குள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி தமிழ்சூழலில் சில வகையான மாற்றங்களை ஏற்படுத்தலாம். இன்றும் காலம் கடந்துவிடவில்லை. தமிழர் அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அதற்காக உரையாடல்களை பயன்படுத்திக் கொள்ள முடியும்.//

தேசம்நெற் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே இந்நோக்கத்துடனேயே செயற்படுகிறோம். தேசம்நெற் மீதான குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் அதன் கருத்துப் பகிரும் பகுதி மீதே வைக்கப்படுகிறது. இப்பகுதியை நாம் திறந்த வெளியாகவே விட்டு உள்ளோம். அதில் தேசம்நெற் ஆசிரியர்கள் இறுக்கமான கட்டுப்பாட்டை கொண்டிருக்கவில்லை.

கட்டுரைகளைப் போன்று கருத்துப் பகுதியும் கட்டுப்படுத்த வேண்டும் என்ற குரல்கள் எமக்கு ஆரம்பத்தில் இருந்தே உள்ளது. நாம் தொடர்ந்தும் கருத்துக்களை இறுக்கமாக கட்டுப்படுத்துவது இல்லை என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளோம்.

தற்போது தேசம்நெற் இவ்வாறான வடிவில் இணையமாக ஆரம்பிக்கப்பட்டு 11 மாதங்கள் கடந்துவிட்டன. தேசம்நெற் ஒரு பல தடங்கல்களுக்கும் இடையில் தனது பயணத்தை தொடர்கிறது.

தேசம்நெற் இணையத்தின் வாசகன் என்ற வகையில் நீங்கள் தேசம்நெற் பற்றிய விமர்சனத்தை ஒரு கட்டுரையாக முன்வைத்தால் அதனையொட்டி ஒரு ஆரோக்கியமான விவாதத்தை தொடர முடியும். உங்கள் விமர்சனத்தல் கட்டுரைகளையும் செய்திகளையும் பின்னூட்டங்களையும் தனித்தனியாக விமர்சித்து பின்னர் முழுமையாகவும் விமர்சனத்தை முன் வைப்பது விவாதத்திற்கு ஆரோக்கியமாக அமையும்.

மேலும் நாங்கள் தேசம்நெற்றை ஒரு மக்கள் ஊடகமாகவே பார்ப்பதால் மக்களுடைய பொதுத் தளத்தில் இருந்து பங்குபற்றுதல் இல்லாமல் இருப்பது பலவீனமானதே.

தொடர்ந்தும் உங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.

த ஜெயபாலன்.


சேகர் இனது பின்னூட்டம்.

ஜெயபாலன் அண்ணா,
பதிலுக்கு நன்றிகள்.

கருத்துப்பகுதிதான் இன்றைய ஊடகவியலின் முக்கியமான பகுதியாகக் கருதப்படுகின்றது. கருத்துப் பகுதியை முற்றுமுழுதாக திறந்துவிட்ட ஊடக்ங்களும் உண்டு. ஆயினும் தேசம் மட்டிறுத்தலைக் கொண்டுள்ளது. சிலவேளை முற்றுமுழுதாகக் திறந்துவிடுதல் உரையாடலை சாத்தியமாக்கமல் போவிடக்கூடும். ஆகையால் பின்னூட்ட மட்டிறுத்தல் சிலநேரங்களில் அவசியமானவை.

உரையாடல்களுக்கு அடுத்த கட்டமாக செயற்பாட்டுதளத்தில் அவ்விடயங்களை நடைமுறைபடுத்துவதற்கான கட்டமைப்புகளை நீங்கள் ஏற்படுத்த வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. செயற்பாட்டினூடு அதன் குறைகளை அறிந்தவாறு அடுத்த உரையாடலைச் செம்மைப்படுத்தியவாறு நகர முடியும் என நினைக்கிறேன்.

ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட விடயம் ஒன்றை எடுத்து அதனைக் குறித்து உரையாடுதல் பயன் உள்ளது. அவ்வுரையாடலில் நீங்கள் இணையத் தொடர்பு இல்லாதவர்களையும் கூட பயன்படுத்த முடியும். தொலைபேசி மூலமாக உரையாடி அவற்றை எழுத்தாக்கம் செய்ய முடியும்.

ஒரு மாதத்திற்கிடையில் இது தொடர்பான எனது கட்டுரையை எழுதி அனுப்பிவைக்கிறேன்.

நன்றி.
-சேகர்

உரையாடல் - 13 (பொன் சிவகுமார், சேகர், த. ஜெயபாலன், ஜே. ஜென்னி, ஜெபன்)

தேசம் தளத்தில் இடம்பெற்ற உரையாடல்.

போலி ஜனநாயகத்தின் மீது எனது உள்ளக் குமுறல் : பொன் சிவகுமார்

யாருக்கும் எந்த ஜீவராசிக்கும் தீங்கும் இழைக்காத எனது பாசம் கொண்ட அண்ணனை ஈசியாக சிம்பிளாக கொன்றுவிட்டு இருக்கிறார்கள். ஒரு அண்ணனாக, ஒரு நண்பனாக, ஒரு ஆசாணாக, எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு கடவுளாக நானும் எனது குடும்பமும் மதித்தவரை கொன்றுவிட்டார்கள். எத்தனை குடும்பங்களில் இழப்புகள் ஏற்பட்டு உள்ளது. ஏன் இப்படிச் செய்கிறார்கள்? வெளியே இருந்து பார்க்கும் போது அரசியல்வாதி தலைவன். ஆனால் எனக்கு சகோதரன் ஒரு உறவின் இழப்பு அதன் வலியும் அதிகம். நாங்கள் இன்னமும் இதிலிருந்து மீள முடியவில்லை. எப்படி இந்த இழப்புகளில் இருந்து மீளப் போகின்றோம் என்பதும் தெரியவில்லை.

எனது அண்ணனின் 10வது ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு என்னுடுன் துயரில் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இவ்வாறான சம்பவங்கள் இழப்புகள் நடந்துவிடக் கூடாது அதற்கு அடையாள எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கலந்து கொண்டவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நிற்க.

ஆனால் இந்நிகழ்வை தடுக்க சில முயற்சிகள் செய்யப்பட்டு இருக்கிறது. அவற்றை நண்பர்களாக இருந்தவர்களும் நான் மதிப்பளித்தவர்களுமே செய்தார்கள் என்பது மிகவும் வேதனையானது.

இணையத் தளங்களில் நாமும் எமது சோகமும் சிக்கித் தவிக்கிறது. எனது அண்ணனின் மறைவையொட்டி நினைவு நிகழ்வை ஒழுங்கு செய்து மனித உரிமைபற்றிப் பேசி எங்கள் உறவுகளுடன், எங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வது தவறா? ஜனநாயகத்தின் காவலர்கள் தாங்கள் என கங்கணம் கட்டி நிற்பவர்களே!!! நீங்கள் எனது சகோதரனின் நினைவு நிகழ்வில் சாக்கடை அரசியல் நடத்துவது நியாயமா? உங்களுக்கு உறவுகளை இழந்த துயர், வலி, வேதனை தெரியாதா? இழப்புகள் என்பது உங்களுக்குப் புதியதா? உங்களுக்கு ஓர் இழப்பு ஏற்படும் போதும் இவ்வாறா நடந்து கொள்வீர்கள்? உங்களுக்கு மட்டும் சோகம். எமக்கு சோதணையா? எனது அண்ணன் உங்களுக்கு செய்த கொடுமைதான் என்ன?

ஜனாநாயக அரசியலில் தன்னை ஈடுபடுத்தியவன். அந்த ஜனநாயக அரசியலுக்காக தன்னுயிரையும் இழந்த ஒருவனை நினைவுகொள்ளும் ஒரு மகத்தான நாளை செம்ரம்பர் 14 அன்று, நாம் ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கையில் அதற்கு இருபத்தி நான்கு மணிநேரத்திற்கு முன் கையெழுத்து வேட்டை நடத்தி பெட்டிசம் அடித்த உங்கள் ஜனநாயகத்தை என்ன என்பது. நிகழ்ச்சியில் பேச இருந்தவர்களைத் தடுத்து, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்தவர்களுக்கு போன் பண்ணி தடுத்து, என்னென்ன கீழ்த்தரமான முறைகளையெல்லாம் நீங்கள் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தீர்கள். நீங்கள் எல்லாம் அரசியல் ஜனநாயக சக்திகள் என்று கூறுவது எவ்வளவு பொருத்தமானது என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்.

விமர்சனங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாத நீங்கள் எப்படி மற்றவர்களைப் பற்றி விமர்சிக்க முடியும். இதுவரை காலமும் ஜனநாயகம் என்ற போர்வையில் உங்கள் கருத்துக்களைத் திணித்தீர்கள். உங்கள் செயல்கள் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டதும் எப்படியாகி விட்டிர்கள் என்று எண்ணிப் பாருங்கள்.

ராகவன் அண்ணா! உங்கள் மேல் எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் இருந்தது. இந்நினைவு நிகழ்வில் நீங்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். நீங்கள் எனக்கு வருவதற்கு விருப்பம் ஆனால் தேசம் நடத்துவதால் வரமாட்டேன் என்று சொன்னீர்கள். அதனை நான் மதிக்கிறேன். ஆனால் எனக்கு தெரிந்தவர்களையும் வரவிடாமல் தடுப்பேன் என்று நீங்கள் சொன்ன போது, அந்த நேர கோபத்தில் தான் அப்படிச் சொல்கிறீர்கள் என்று நினைத்தேன். ஆனால் நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களும் உண்மையாகவே தடுக்க முயற்சித்ததையும் தடுத்ததையும் அறிந்த போது உண்மையிலேயே வேதனைப்பட்டேன்.

மற்றையவர்களின் உறவுகள் படுகொலை செய்யப்பட்ட போது அதற்கு எதிராக உரக்கவே குரல் கொடுத்தோம். நினைவு நிகழ்வுகள் நடத்தப்பட்ட போதும் அதற்கும் முழு ஒத்துழைப்பையும் வழங்கினோம். அது கேதீஸ் லோகநாதனுடையதாக இருந்தாலென்ன, மகேஸ்வரி வேலாயுதமாக இருந்தாலென்ன, அதனை ராஜேஸ்பாலா நடத்தினாலென்ன எஸ்எல்டிஎப் நடத்தினாலென்ன. ஆனால் அந்த இழப்பு எனது குடும்பத்தில் நடந்த போது ஜனநாயக சக்திகள் என்று சொல்லிக் கொண்டவர்கள் நடந்து கொண்டதை என்னால் மறக்க முடியவில்லை. ஏன் உங்களால் பிரிவின் வலியை உணர முடியவில்லை. ஏனெனில் நீங்கள் எங்களில் மக்களில் இருந்து அந்நியமாகவே நிற்கிறீர்கள். அதனால் உங்களால் அவ்வலியை உணர முடியாது.

எனக்கு தெரிந்தவர்கள் பலர் கையொப்பமிட்டு ஒரு பெட்டிசம் வெளிவந்தது. அதனை நான் பிழையானது என்று சொல்வதற்கு முன்னால் இது திட்டமிட்டு எனது அண்ணனின் நினைவு நிகழ்வுக்கு முதல் நாள் வெளியிடப்பட்டு உள்ளது. இயன்ற அளவு யாரையும் நினைவு நிகழ்வுக்கு வராமல் தடுப்பதைத் தவிர அந்த நேரத்தில் அவ்வறிக்யை வெளியிடுவதற்கு வேறு எந்த நோக்கமும் இல்லை. தயவு செய்து, யார் அந்த அறிக்கையை அந்த நேரத்தில் வெளியிடுவதற்கு முடிவெடுத்தது என்பதனை அதில் கையெழுத்திட்டவர்கள் எனக்கு அடையாளம் காட்ட வேண்டும். ஏனென்றால் அவர்களிடம் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது.

உங்களுக்கும் தேசம் நண்பர்களுக்கும் முரண்பாடுகள் இருக்கலாம் ஆனால் அதனைத் தீர்த்துக் கொள்வதற்கு எனது அண்ணனின் நினைவு தினத்தை எதற்காக ஆடுகளம் ஆக்கினீர்கள்.

இந்த நினைவு நிகழ்வை சென்ற ஆண்டு நடத்த முயற்சித்தேன். அப்போது நண்பன் ஜெயபாலன் ஆண்டு தோறும் நினைவு நிகழ்வு நடத்தப்படாததால் இது 9வது ஆண்டு என்பதாலும் 10வது ஆண்டு நினைவு தினத்தை சிறப்புற நடத்துவோம் என்று என்னிடம் கூறி இருந்தான். அதற்கு அமைய இவ்வாண்டு இந்நிகழ்வை நடத்த தீர்மானித்தோம். மேலும் ஜெயபாலனது சகோதரனும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்தவர். அதனால் எனது சகோதரனின் நினைவு நிகழ்வை அரசியலுக்கும் அப்பால் ஜெயபாலன் ஒழுங்கமைப்பதே பொருத்தமாயும் இருந்தது. இதிலென்ன தவறு கண்டிர்கள்?

அது ஜனநாயக விரோதப் படுகொலைகளின் நினைவு நிகழ்வாக இருந்தாலென்ன, மாவீரர் தின நிகழ்வாக இருந்தாலென்ன, அவற்றை சுயநல காரணங்களுகாக கொச்சைப்படுத்தாதீர்கள். இவ்வாறான சம்பவங்களுக்கு இதுவே ஒரு முற்றுப் புள்ளியாகட்டும்.

நாம் படித்த மேதாவிகள், புத்திஜீவிகள் எங்களுக்குத் தான் எல்லாம் தெரியும், நாங்கள் மட்டும்தான் எல்லாம் படைப்போம் என்றுதான் நீங்கள் இனியும் மார்தட்டிக் கொண்டு இருக்கப் போகிறீர்களா? ஒன்றை மட்டும் விளங்குவோம் இந்த நிகழ்வை தடுத்து நிறுத்திவிட்டு வீறு நடைபோட நினைத்த நீங்கள், எப்படி ஒரு அரசியலை நடாத்த முடியும்? இது உங்களுக்கு கேவலமாகத் தெரியவில்லையா?

எனது அண்ணனை அன்று புலிகள் சாகடித்தார்கள். அவன் நினைவு தினத்தன்று நீங்கள் அவரை இன்னுமொரு தடவை சாகடித்துவிட்டிர்கள். உண்மையில் உங்கள் ஜனநாயகம் நன்றாகத்தான் புலப்படுகிறது.

ஒருவேளை நீங்கள் தடுக்காவிட்டால் இவ்வளவு பேர் வந்திருப்பார்களோ எனக்குத் தெரியாது. இவ்வளவு சிக்கல்களுக்கு மத்தியிலும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் எனது குடும்பத்தின் சார்பில் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் பெட்டிசங்களைக் கண்டு ஆடிப் போகாமல் இந்த நிகழ்வை ஒழுங்கமைத்த தேசம் நண்பர்களுக்கும், அதன் வாசக உள்ளங்களுக்கும் ஒரு சபாஸ்!! வாழ்க உனது ஜனநாயகப் பணி!!!

சேகர் இனது பின்னூட்டம்.

பகுதி - 1

பொன்.சிவகுமார் அவர்களே,
எனது 15 ஆவது வயதில் 98 ஆம் ஆண்டில் உங்களது அண்ணனின் மரணம் நடைபெற்றது. அந்நேரத்தில் நான் யாழ்ப்பாணத்தில் மாணவனாக இருந்தேன். கட்டமைக்கப்பட்ட மனநிலை காரணமாக அந்நேரத்தில் நாம் சந்தோசப்பட்டதாக ஞாபகம். ஆயினும் அன்று அச்செய்தியைப் பற்றி அப்பாவுடன் பேசும் போது, அப்பா அம்மரணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்பாவின் கூட்டணியுடனான மென்போக்கு அவர் இதனை ஏற்றுக்கொள்ளாமைக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் அன்று என்மனதில் இருந்தது. ஆயினும் எனது வயது காரணமாக அப்பா எனக்கு விளக்கம் எதனையும் சொல்லவுமில்லை. அரசியல் பற்றிய உரையாடல்களை சூழல் நமக்கு அனுமதிக்கவும் இல்லை.

சில காலங்களின் பின்பு ‘கொலை’ களின் மோசமான முகம் எமக்கு பிடிபடத் தொடங்கிற்று. ஒரு உயிரைப் பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதை நாம் எவ்வளவு வன்மையாகக் ஆதரிக்க வேண்டும் என்பதான மனநிலையை பிரிவிகளும் கொலைகளும் எமக்கு அனுபவ பூர்வமாக உணர்த்தியது. சகலவிதமான கொலைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகவும் ஒருவன் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற மனநிலையை, எமது சூழல் எம்மீது கட்டமைத்துக் கொண்டிருக்கும் வலைப்பின்னல்களை மீறி வளர்த்துக்கொள்ள வேண்டி இருக்கின்றது. கொலைகளைக் கொண்டாடும் சமூகத்தில் இருந்து- அதன் அங்கமாக இருந்தவாறு அதனை எதிர்ப்பதற்காக நாம் போராட வேண்டியிருக்கிறது. உங்களது தலைமுறை அல்ல நமது தலைமுறை. ‘கலவரத்தில்’ பிறந்து போராட்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

கொலைகளுக்கு எதிரான மனநிலையை வளர்ப்பதற்கு நாம் அரசியல் எல்லைகளைத் தாண்ட வேண்டும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. இன்றைய இளைய சமூகச்சூழலை வைத்துச் சொல்கின்றேன். இச்சூழலில் அம்மனநிலையை வளர்த்துக் கொள்வதின் கடினம் உங்களில் யாருக்கும் புரிபடாதது. இது தோடர்பாக தமிழ்சமூகத்தின் மீது அக்கறை உள்ள அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற அவா எனக்குள்ளது.

பகுதி - 2

கொலைகளை அரசியல்மயப்படுத்தும் போதும் அவை அரசியல் வெளியில் வைத்துப் பார்க்கப்படும் போதும் அவற்றினிடையே கொலைக்கலாச்சாரம் தன்னை வளர்த்துக் கொள்கின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினரின் கொலை, ஈ.பி.டி.பி உறுப்பினரின் கொலை மற்றும் விடுதலைப் புலி ஒருவரது கொலை என்பன எந்தவொரு காரணத்தாலும் நியாயப்படுத்தப்படக் கூடாதது. அதில் இருந்து எம்மை நாம் வெளியொதுக்கல் செய்யும் போது மட்டுமே நாம் உண்மையாக கொலைக்கலாச்சாரத்திற்கு எதிராக எம்மை உண்மையாகவே இயக்குகிறோம் என்று பொருள்படும். அவ்வாறல்லாது நாம் கட்சியுடன் இணைத்தவாறு அதனை நினைவு கூர்ந்தால் என்ன எதிர்த்தால் என்ன மறைமுகமாக பலர் அக்கொலையை ஆதரிக்க துணை போகின்றோம் என்றே கொள்ள வேண்டும்.

உங்களுக்கு உள்ளது போலவே பல புலி உறுப்பினர்களும், அவர்களது ‘ஞாபகங்களால்’ ஆய்க்கப்படக் கூடும் என்பதை நீங்கள் மறுத்துவிட முடியாது. ‘எனது சகோதரனை ஆமி சுட்டுப் போட்டான்’ என்றும் ‘எனது அப்பாவை ஈ.பி.டி.பி’ சுட்டது என்றதுமான ஞாபகப்பரத்தினால் இயங்கக் கூடிய புலி உறுப்பினர்கள் எவ்வளவோ பேர் இருக்கக் கூடும். இங்கே நாம் கொலைகளை இன்னார் செய்தது என்னாரைச் செய்தது என்னும் அடையாளப்பரப்பை மேவி அதனை ‘கொலை’ அல்லது ‘மரணம்’ என்ற பரப்பினுள் எப்போது அடைக்க முற்படாவிட்டால் 25 வருட தவறை எமது தலைமுறையும் தொடரும் என என்னால் உறுதியாகக் கூற முடியும்.

உதாரணமாக சாதாரண புலி உறுப்பினர்கள் இக்கொலையை வேறுவகையில் சிந்திக்க முடியும். அரச ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போரிடும் நாம், அதனை எவ்விதத்திலவது ஆதரிக்கும் அல்லது பேண முற்படும் எல்லா கட்டமைப்பையும் சீர்குலைக்க வேண்டுமென்பதாக. (இம்மனநிலையின் வழியிலேயே 15 வயசில் கொலைக்காகச் எம்மால் சந்தோசப்பட முடிந்தது.) ஆக, இங்கே நீங்கள் கொலைக் கலாச்சாரத்தை விமர்சிக்கும் போது அதனை உளப்பூர்வமாக விமர்சிக்க வேண்டும். சொந்த விருப்பு வெறுப்புக்களைத் தாண்டியதாக அது இருக்க வேண்டும். அப்போது மட்டுமே நாம் இனி நடைபெறும் கொலைகளை கொஞ்சமாவது நிறுத்த முடியும். அல்லது ‘நாம்’ ‘எதிர்ப்பதன்’ மூலம் ‘இன்னொருவர்’ ‘ஆதரிப்பதை’ நாமே களமைத்துக் கொடுத்தவாறிருப்போம்.

பகுதி - 3

தேசம் நெட் பலவகையான கொலகளையும் கண்டித்து வருவதும் கருத்துச் சுதந்திரத்திற்காக தனது நிலைப்பாட்டைத் தெரிவிப்பதும் பாராட்டக் கூடிய விடயம். இதனை தேசம் தொடர வேண்டும் என்ற விருப்பம் எனக்கிருக்கிறது. ஆயினும் இதனைக் கூட தேசம் சில எல்லைகளுக்குள் மட்டுப்படுத்தியிருப்பதான எண்ணமும் என்னைத் தொடர்கின்றது. இதனைத் தேசம் தவிர்க்க வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.

ஈ.பி.டி.பி உறுப்பினரது கொலைகளைக் கண்டிக்கும் அதேநேரம் தமிழர் விடுதலைக் கூட்டணியினர்களது கொலைகளைக் கண்டிக்கும் அதே நேரம் இறுதிவரை தமிழீழம் என்ற எண்ணக்கருவை ஏற்றுக் கொள்ளாமல் சமஸ்டி என்ற தீர்வினடிப்படையில் நகர வேண்டும் என்ற ரவிராஜ் ஐயும் நினைவு கூருங்கள்.

சில கூட்டுக்களின் அதிகார வெறிக்கு எதிராக உங்க்ளது கருத்துச் சுதந்திரத்தை தெரிவிப்பதன் அதேநேரம் பலமாதங்களாக குடும்பத்துடன் சிறையின் வாடும் யசிதரனுக்காகவும், ஊடகம் ஒன்றைத் தொடங்கியமையை மட்டுமே குற்றமாகக் கொண்ட திசநாயகத்திற்காகவும் உங்களது குரலைப் பதிவு செய்யுங்கள். அரசியல் காய்நகர்த்தல்களுகாகச் சிறையில் வாடும் தேவதாசனை மறந்து நாம் கருத்துச் சுதந்திரத்தை பேசிவிட முடியாது நண்பர்களே. தனது கருத்து பிழையோ சரியோ தனியாக நின்று ஆர்ப்பாட்டம் செய்யக் கூடிய ஒரு மனிதனை மறந்து அல்லது வெளியொதுக்கல் செய்தவாறு நாம் நிகழ்காலத்தைக் கடந்து விட முடியாது. அவ்வாறு கடப்பதாக நாம் கருதினால் நாம் அச்சூழ்ல் தொடர்வதை விரும்பினோம் என்பதே கருத்து. ரவிராஜ் ஐ மறந்தவாறு நாம் சிவபாலனுக்கு கூட்டம் நடத்தும் போதும் திசநாயகத்தை மறந்து நாம் கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசும்போதும் நாம் செய்யும் வெளியொதுக்கல்கள் இன்னுமொரு தரப்பை அவர்களது வழியில் ஊக்குவிக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

ரவிராஜ் ஐ புலிகள் நினைவு கூர முடியும். ஆனால் சிவபாலனை யாரும் நினைவு கூர்வதில்லையே என்ற உங்களது பக்க நியாயம் எமக்கு விளங்காமலில்லை. ஆயினும், சிவ்பாலனை நினைவு கூராத புலிகளுக்கும் ரவிராஜை நினைவு கூராத தேசத்திற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். நீங்கள் என்றைக்கு மாற்றுத்தளத்தில் நின்றவாறு ரவிராஜை நினைவு கூருகின்றீர்களோ அன்றைக்கு புலிகள் தமது தளத்தில் ஆட்டம் காணுவார்கள். இப்போது இருக்கும் வழியில் அவர்களால் போக முடியாது. அவர்கள் வேறு தளத்தைத் தேட வேண்டிய நிலை ஏற்படும். அவர்கள் தமது போராட்டத்திற்காக- தாம் நம்பும் போராட்டத்திற்காக- என்றைக்கு சிவபாலனை நினைவு கூருகின்றார்களோ அன்றைக்கு மட்டுமே இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் சரியான அரசியல் போராட்டத்தை ஆரம்பிக்க முடியும்.

புலிகளின் இன்றைய நிகழ்ச்சிக்கு மாற்றுக்கருத்தாளர்கள் என்று அறியப்பட்டவர்களும் முக்கிய காரணம் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்நச்சுச் சூழலில் இருந்து தமிழ் மக்களை மீட்பதற்கு அனைவரும் சில மனத்தடைகளைக் கடந்து முயற்சிக்க வேண்டும்.

பகுதி - 4

ராஜினி திரானகமே நான் மிகவும் மதிக்கும் ஒருவர். அவர் புலிகளால் கொல்லப்பட்டார். சிபலானும் புலிகளால் கொல்லப்பட்டார். ஆயினும் ராஜினியைக் கொண்டாடும் ஒரு குழு சிவபாலனது நினைவு முயற்சியைத் தடுக்க முயற்சி எடுத்துள்ளது என்பது மிகவும் வருத்தம் தரக் கூடீயது. ராகவனோ நிர்மலாவோ இதனை விளங்கிக் கொள்ளாமல் இவாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது வருத்தம் தரக் கூடியது.. தேசத்திற்காக நாம் போராடினால் கூட அதன் சாதக அம்சங்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்ற பற்றுதி எம்மிடம் இருக்க வேண்டும். சமூகத்தின் ஒவ்வொரு பாதகாமான கூறுகளுக்கு எதிராகவும் எம்மை எதிர்நிலைப்படுத்தும் தருணத்தில் அதனுடன் பிணைந்துள்ள சாதகமான விடயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. எமது எதிர்நிலைப்பாடுகள் சாதகாம அம்சங்களை பதித்து விடக் கூடாது. ஜனநாயகத்தின் சாராம்சம் அதுதான். மாற்றங்கள் சடுதியானவை அல்ல. மாற்றங்கள் சடுதியானவை என்ற மனநிலையில் இருந்து நூற்றாண்டுகளைக் கடந்து விட்டோம்.

இது தொடர்பாக நாம் சில விடயங்களை மாற்றிக் கொண்டவாறு நகரவேண்டும். அதுதான் எமக்கு நல்லது. குழுவாதங்களை ஊக்குவித்தலும் இறுக்கப்படுத்தலும் எதனையும் சாதிக்க உதவப் போவதில்லை. இதில் இருந்து நாம் விடுபடும் போது மட்டுமே எமக்கு உண்மையான சமூக அக்கறை இருந்தது என நாம் எதிர்காலத்தில் நினைத்துக் கொள்ள முடியும். அல்லது நாமும் சில்வகையான கேவலங்களை செய்து தொலைத்தோம் என்று கவலைப்பட வேண்டியிருக்கும்.

பகுதி - 5

பொன். சிவகுமார் அவர்களுக்கு,
நான் சிறுவயதில் உங்களது அண்ணனது இறப்பில் சந்தோசப்பட்டேன் என்ற குற்றவுணர்வுடன் தான் இதை எழுதத் தொடங்கினேன். அதற்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன். மன்னிப்பீர்கள் என நம்புகின்றேன்.

நன்றி.
-சேகர்

த. ஜெயபாலன் இனது பின்னூட்டம்

முகம் தெரியா நண்பர் சேகருக்கு

படுகொலைகளுக்கு எதிரான உங்களுடைய கருத்துக்கு வெளியே எனக்கு எந்தக் கருத்தும் இருப்பதாக தெரியவில்லை. அதனுடன் நான் முழுமையாகவே உடன்படுகிறேன். இதுவே என்னுடைய கருத்தாகவும் இருந்து வருகிறது.

பா உ ரவிராஜ் கொல்லப்படுவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன் நானும் பொன் சிவகுமாரும் அவர் லண்டனில் தங்கி இருந்த இல்லத்தில் சந்தித்து தேசம் சஞ்சிகைக்காக ஒரு நேர்கதாணலையும் பெற்றிருந்தேன். மரணங்கள் மிகவும் துயரமானவை. எவ்வுயிராயினும் அது இயற்கையாக அல்லாமல் வன்முறையாகப் பறிக்கப்படுவது இன்னமும் வேதனையானது. ரவிராஜ்யை நான் சில மணிநேரங்கள் சந்தித்து அறிமுகமானது இன்னும் என் மனக் கண்முன் தோன்றுகிறது.

நிச்சயமாக யார் யாரை எதற்காக என்பதற்கு அப்பால் படுகொலைகள் கண்டிக்கப்பட வேண்டும். புலி ஆதரவு - புலி எதிர்ப்பு துருவ அரசியலைக் கடந்து படுகொலைகளை தமிழர்கள் என்று கண்டிக்கிறோமா அப்போது தான் இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

உங்கள் மேலான கருத்துக்களை தேசம் நிச்சயம் உள்வாக்கும். உங்களைப் போன்றவர்கள் தொடர்ந்தும் தேசத்தை வளம்படுத்த வேண்டும்.

த ஜெயபாலன்.


சேகர் இனது பின்னூட்டம்.

நன்றி ஜெயபாலன் அண்ணா.
அதைத்தாண்டியும் சில செய்திகள் உள்ளன.

1.
நேற்று ராஜனி திராணகம (23.02.1954 - 21.09.1989) அவர்களது 19 ஆவது ஆண்டு நினைவு நாள். அதனை யாரும் நினைவு கூர்ந்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை தேசம் ராஜினிக்காக நினைவு நிகழ்வு நடாத்தியிருந்தால் ராகவன் என்ன செய்திருப்பார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நிச்சயமாக தடுத்திருக்க முடியாது. அரசியலையும் உறவுகளையும் தாண்டிய இச்செயலை தேசம் செய்திருந்தால் நான் மிகவும் சந்தோசப்பட்டிருப்பேன். குறைந்தபட்சம் ஒரு கட்டுரையையாவது பிரசுரித்திருக்கலாம். இதன் மூலம் தேசத்திற்கு எதிராகக் கையொப்பமிட்ட ஷெரிகா திராணகம விற்காவது சில விசயங்களைப் புரிய வைத்திருக்க முடியும்.

2.
என்றைக்கு பதமநாபாவிற்கும், உமாமகேஸ்வரனுக்கும், மகேஸ்வரி வேலாயுதத்திற்கும், சபாரத்தினத்திற்கும், திலீபனுக்கும், தமிழ்ச்செல்வனுக்கும் ஒரே குழுவால் நினைவு நிகழ்வு ஒரே மேடையில் நடாத்தப்படுகின்றதோ அன்றைக்குத்தான் தமிழ் மக்களது உரிமைக்கான அரசியல் போராட்டத்தின் தொடக்க நாளாகும். அதுவரை யார் என்னதான் சொன்னாலும் தமிழர்களின் காட்டுமிராண்டிக் காலமே.. அதனை யார் செய்யப் போகின்றார்கள் என்பது எமக்கு முன்னுள்ள மிகப்பெரிய கேள்வி. அப்போது மட்டுமே புலிகளிடம் மாற்றத்தை எதிர்பார்க்க முடியும். அல்லது புலிகளின் ‘மாறாநிலைக்கு’ நாமும் காரணமானோம் என்ற விடயம் உறுத்தாமலே வாழ்ந்து முடிப்போம்.

ஜெயபாலன் அண்ணா,
Bad memories என்பதைத்தாண்டி சிந்திக்கும் தலைமுறை என்றைக்கோ இதனைச் செய்யத்தான் போகின்றது. அதனை தேசம் ஆரம்பித்து வைக்க வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.

-சேகர்


j.jenney இனது பின்னூட்டம்.

தம்பி சிவகுமார்!
உங்களின் மிக ஆதங்கமான கட்டுரை எனது உள்ளத்தை மட்டுமல்ல மனிதநேயத்தை மதிக்கும் எந்த நபரையும் ஒரு நிமிடமாவது நின்று நிதானிக்க வைக்கும்.இதற்கு சாட்சி பகிர்வது போல் சேகாpன் பதிவுகள் உள்ளன.அதிலும் எதிர்காலத்தில் சமூகத்தை வழிநடத்தப் போகும் இளைஞர் சமூகத்தின் ஒரு பிரதிநிதி தானாக முன்வந்து சுயவிமர்சனம் செய்து தனது இரங்கலைத் தெரிவித்ததே எமது அண்ணருக்கு இந்த சமூகத்தால் கிடைக்கப்பெற்ற பெரும் அங்கீகாரம்.உங்களைப் போன்ற இளைஞர்கள் முன்வந்து ஆரோக்கியமான முறையில் இச்சமூகத்தைப் பார்த்து-மனதைத் தொட்டு -விட்டு போன கேள்விகளும் உண்மையில் எம்மவர்களின் வக்கிரத்தனமைகளையும்>எம்மக்களின் எதிர்காலத்தையும் பற்றி எமக்கிருந்த மனச்சோர்வை நீக்கியிருந்தது.மக்களுக்காகவே வாழ்ந்து மக்களோடு மக்களாக மடிந்த”மண்ணின் மைந்தரான”அமரர் பொன் சிவபாலன் அண்ணா அவர்களின் நினைவுகூறலையொட்டி புரையோடிப்போன மனிதர்கள் அடையாளப்படுத்தப்பட்டதும்-புதியதொரு சமூகம் தளிர்விடத்தொடங்கியதுமே அண்ணர் அவர்கள் மறைந்தும் எம் மக்களினுள்ளும் -எம் மனித மனங்களினுள்ளும் வாழ்ந்து சமுதாயச் சாக்கடைகளை அம்பலப்படுத்தி சரியான பாதையில் எமை வழிநடத்துகின்றார் என்பதை அறைகூவி நிற்கின்றது.


Jeban இனது பின்னூட்டம்.

என்றைக்கு பதமநாபாவிற்கும், உமாமகேஸ்வரனுக்கும், மகேஸ்வரி வேலாயுதத்திற்கும், சபாரத்தினத்திற்கும், திலீபனுக்கும், தமிழ்ச்செல்வனுக்கும் ஒரே குழுவால் நினைவு நிகழ்வு ஒரே மேடையில் நடாத்தப்படுகின்றதோ அன்றைக்குத்தான் தமிழ் மக்களது உரிமைக்கான அரசியல் போராட்டத்தின் தொடக்க நாளாகும். - சேகர்

Im 100 percent agree with this coments. Its important sentence for next Sri lankan related tamil generation.


சேகர் இனது பின்னூட்டம்.

/உங்களைப் போன்ற இளைஞர்கள் முன்வந்து ஆரோக்கியமான முறையில் இச்சமூகத்தைப் பார்த்து-மனதைத் தொட்டு -விட்டு போன கேள்விகளும் உண்மையில் எம்மவர்களின் வக்கிரத்தனமைகளையும்>எம்மக்களின் எதிர்காலத்தையும் பற்றி எமக்கிருந்த மனச்சோர்வை நீக்கியிருந்தது/ - j. jenney

ஜென்னி,
உங்களுக்கு எனது நன்றிகள். உங்களது கருத்தை நான் பெரிதும் மதிக்கின்றேன். பல காலங்களாக அரசியலில் செயற்பட்டு வரும் உங்களைப் போன்றவர்கள் இக்கருத்தில் இருந்து இன்னும் சிறிது நகர வேண்டும் என எதிர்பார்க்கின்றேன். அப்போது மட்டுமே நாம் அரசியல் ரீதியாக உரிமைகளைப் பெற்ற சமூகமாக தமிழ்சமூகத்தை மாற்ற முடியும்.

அதற்காக நீங்கள் சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்தாக வேண்டும். உங்கள் விட்டுக் கொடுப்புகளுக்குத் தகுந்த பலன் நிச்சயயமாக எம் தமிழ்ச்சமூகத்திற்குக் கிடைக்கும்.

தேசம்நெட் உடனான உரையாடலில் நாகர்ஜுனன் சொன்ன வாக்கியங்கள் எனக்கு தற்போது ஞாபகம் வருகின்றன.

/உங்கள் பிரச்னையில் எவ்வித அரசியல் தீர்வு வந்தாலும் சரி. உங்கள் சமுதாயமும் இலங்கையின் மற்ற சமுதாயங்களும் அனுபவித்த ரணங்கள், கசப்புணர்வு எல்லாம் ஆறுவதற்கு தனித்த காலம் தேவைப்படும்ன்னு நினைக்கறேன். இதற்குக்காரணம் உங்களுக்கெல்லாம் ஏற்பட்டிருக்கும் இழப்புகள் ரொம்ப அதிகம், தவிர இழப்புகளுக்கு நீதி கிட்டாத சூழ்நிலை, இந்த அநீதி தொடர்கிற சூழ்நிலை, அது உண்டாக்கியிருக்கற கோபம், வன்மம், எதிர்வன்மம்.. இதெல்லாம் போக ரொம்பக்காலம் ஆகலாம். ஆனா இதெல்லாம் போனால்தான் சமாதானம் நிலைக்கும்னு அடித்துச் சொல்ல முடியும். / - நாகர்ஜுனன்

சில கசப்புணர்வுகளில் இருந்து நாம் விடுபடும் போது மட்டுமே உண்மையான சமாதானம் தோன்ற வழிசமைத்துக் கொடுத்தவர்கள் ஆவோம். சின்ன பொடியன் சொல்கின்றான் என்று ஒதுக்கிவிட மாட்டீர்கள் என நம்புகின்றேன்.

நன்றி.
-சேகர்


j.jenney இனது பின்னூட்டம்.

“இருதரப்பும் உடனடியாக யுத்தத்தை நிறுத்தி சர்வதே அணுசரணையுடன் ஒரு அரசியல், தீர்வுக்கான நிலைப்பாட்டை முன்னெடுக்க வேண்டும். புலிப் போராளிகளையும் உள்வாங்கி அனைத்து தரப்பு தமிழ்பேசும் மக்களின் பிரதிநிதித்துவ கட்சிகளுடன் - குறிப்பிடத்தக்க ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் ஒன்றிணைத்து ஒரு பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும். எனவே உடனடி போர் நிறுத்தத்தையும் இவ்வாறான தீர்வுதிட்டத்தையும் முன்னெடுப்பதற்காக புலம்பெயர் சூழலிலுள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்து சர்வதேசங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். “ஜெ.ஜென்னி

தம்பி சேகர்!
உங்களைப் போன்ற எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள் வெளியே- மின்ன வழிவகுத்த இந்த தேசத்தின் இணையத்திற்கு நன்றி கூறிக்கொண்டு உங்களைப் போன்றோறின் புதுவரவையும் உற்சாகத்தையும் உங்களது அறீவுரைகளையையும் ஆரோக்கியத்துடன் வரவேற்கின்றோம். கண்டிப்பாக கடந்த கசப்பனுபவங்களை மறந்து குரோத மனப்பான்மையை கொன்றொழித்து பல விட்டுக்கொடுப்புக்களுடன் பல தரப்பினரும் அங்கு அடையாளமே அற்றுக்கொண்டிருக்கும் எம்மக்களுக்காகவும்-எம்மவர்களின் மண்ணுக்காகவும் அவர்களின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்க குறைந்த பட்ச வேலைத்திட்டத்திலாவது நாமனைவரும் ஒன்றிணைந்து அரசியல் தீர்வு திட்டத்தை முன்னகர்த்த வேண்டும். இவற்றை முன்னெடுக்க உங்களைப் போல் இளைஞர்கள் முன்னிற்க வேண்டும்;எனவே இதுபோன்றஆரோக்கியமான எழுத்துக்களும்- எண்ணங்களும்- கலந்துரையாடல்களும்- சந்திப்புக்களும்- விமர்சனங்களும்- வாசிப்புக்களும்- தேடல்களும் -ஆலோசனைகளும் எல்லா மட்டத்தினராலும் எல்லோருக்கும் தேவையானதே.எனவே உங்கள் இனிய வரவு இனிதே தொடரட்டும்
நன்றி


சேகரினது பின்னூட்டம்.

ஜென்னி அக்கா,
உங்களது பதிலுக்கு எனது நன்றிகள்.

உங்களது கட்டுரை படித்தேன். மாற்றுக்கருத்தாளர்கள் முன் இன்றைக்கு உள்ள பணியை கூறியிருக்கிறீர்கள். புலிகளின் அழிவில் தான் தமிழ் மக்கள் ஜனநாயகக் காற்று வீசும் எனக் கருதுபவர்களுக்கு நீங்கள் கூறியிருக்கும் விடயம் மிக முக்கியமானது. ஏற்படப் போகும் பெரும் அழிவுகளை தடுப்பது மாற்றுக் கருத்தாளர்களின் மிக முக்கியமான கடமை. அதற்கான வேலைத்திட்டங்கள் உடனடியாக முன்னெடுக்கப்படவேண்டும். உங்களுக்கு மீண்டும் எனது நன்றிகள்.

-சேகர்

உரையாடல்- 12 (சுதா, சந்திரன் ராஜா, Rapheal a.k.a Vincent Paul)

தேசம் வலைத்தளத்தில் இடம்பெற்ற உரையாடல். வேறொரு இடத்திலான சில பதில்களும்..

வன்னி யுத்தகளத்தில் புதிய திருப்பம். புலிகள் இயக்கம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துகின்றதா? - ஏகாந்தி

கடந்த செவ்வாய்க்கிழமை வன்னிப் பகுதியிலிருந்து தொண்டர் நிறுவனங்கள் பெருமளவில் வெளியேறிவிட்டன. தொண்டர் நிறுவனங்களில் பாதுகாப்பு கருதியே வெளியேறச் சொன்னோம் என்று அரசு பல சந்தர்ப்பங்களில் அறிவித்திருந்தது. தற்போது உத்தியோகபூர்வமாக ‘சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்’ மாத்திரமே யுத்தப் பகுதியில் செயலாற்றுகின்றது.

அதேநேரம், வன்னிப் பகுதியில் யுத்தநிலை வரவர உக்கிரமத்தன்மையை அடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுக்(17) காலை வட்டக்கச்சிப் பிரதேசத்தில் கபீர் விமானங்களும், எப்-7 ரக விமானங்களும் பாரிய தாக்குதல்களை நடத்தியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இன்றையதினம் இலங்கையில் வெளியாகியுள்ள சகல சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகளிலும் போல வட்டக்கச்சித் தாக்குதல் பற்றியே பிரதான செய்திகள் வெளியாகியிருந்தன. அத்தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் முக்கிய தலைவர்கள் ஒன்றுகூடும் வீட்டுத் தொடரொன்று அழிக்கப்பட்டதாக ஊடகங்கள் கூறுகின்றன. தாக்குதலுக்குட்பட்ட வீட்டுத் தொடரில் பாதுகாப்பு பங்கர்கள் அமைக்கப்பட்டிருந்ததாகவும் சொகுசுமிக்கதாக அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

அதேநேரம், கிளிநொச்சி அக்கராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற இரு தரப்பு மோதல்களின் போது விடுதலைப் புலிகளால் மூச்சுத் திணறல் ஏற்படக்கூடிய விஷவாயுவைக் கக்கும் கிரனைட் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இவ்வாறு புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் 6 இராணுவ வீரர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேலும் கூறியதாவது

மோதல்கள் இடம்பெறும் தருணத்தில் எதிர்த்தரப்பினரை பலவீனப்படுத்தும் வகையில் பல்வேறு நடைமுறைகள் கையாளப்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. அந்த வகையிலேயே படையினரின் உற்சாகத்தையும், பலத்தையும் முறியடிக்கும் வகையில் விடுதலைப் புலிகள் புதியதொரு நடைமுறையைக் கையாண்டுள்ளனர்.

கடந்த சில தினங்களாக கிளிநொச்சி அக்கராயன்குளம், வன்னிவிளாங்குளம் மற்றும் மேற்கு மாங்குளம் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இரு தரப்பு மோதல்களின் போது விடுதலைப் புலிகளால் மூச்சுத் திணறல் ஏற்படக்கூடிய விஷ வாயுவைக் கக்கும் கிரனைட் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் 6 படையினர் மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்ணீர்ப் புகைக்குண்டுகளை ஒத்ததான இந்த குண்டுத் தாக்குதலினால் எவ்வித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை.

எதிர்காலத்திலும் விடுதலைப் புலிகளால் இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் அதனை முறியடிக்கும் வகையில் படையினரும், சுகாதாரத் துறையினரும் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றார்.

யுத்தம் உக்கிரமமடையும் நிலையில் விடுதலைப் புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் தற்போது அக்கராயன்குளம் பகுதியில் இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படும் மூச்சுத் திணறல் ஏற்படக்கூடிய விஷவாயுவைக் கக்கும் கிரனைட் குண்டுத் தாக்குதல் இரசாயன ஆயுதத்தாக்குதலில் முதல் கட்டமா? என யுத்த ஆய்வாளர்கள் மத்தியில் சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.

கொழும்பிலிருந்து வெளிவரும் “டெய்லி மிரர்” பத்திரிகை, கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் மற்றும் வன்னிவிளாங்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மோதல்களில் புலிகள் ஒரு வகையான “வாயு”வைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர். இதனால் படையினருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்த்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அக்கராயன்குளத்தில் 57 ஆவது படையணியினர் மீதும் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனப்பட்டிருந்தது. கண்ணீர்ப்புகைக் குண்டுகளை ஒத்ததான ஒரு வகை “வாயு”வைப் பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி வருவதாக இலங்கை இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், எத்தகைய தாக்குதல்களுக்கும் முகங்கொடுக்க படையினர் தயார் நிலையில் உள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்திருந்தார். மேலும், யுத்தகளத்திலுள்ள படைவீரர்களுக்கு விசவாயு தாக்காதிருக்கக்கூடிய முகமூடிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

இத்தகைய நிலையில் மோதல்களில் ஈடுபட்டு வரும் படையினருக்கு அவசியமான அனைத்து சுகாதார வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். அதற்காக மருந்துவப் பொருட்களை அனுப்பிவைப்பதுடன் மருத்துவர்கள் மற்றும் தாதியர்களையும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அடிப்படையில் குறித்த விஷ வாயுத் தாக்குதல்களை எதிர்கொள்ளக்கூடிய வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றன.


புலிகள் இரசாயனத் தாக்குதல் நடத்தும் பட்சத்தில் முன்னேற்பாடு - வவுனியா அநுராதபுரம் வைத்தியசாலைகளை தயார்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம்.

புலிகள் இயக்கத்தினர் இரசாயனத் தாக்குதல் நடாத்தும் பட்சத்தில் அதற்கு முகம் கொடுப்பதற்கு ஏற்ற வகையில் வவுனியா மற்றும் அனுராதபுரம் பொது வைத்தியசாலைகளைத் தயார்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

புலிகள் இயக்கத்தினர் இரசாயனத் தாக்குதல் நடாத்தும் பட்சத்தில் பாதிக்கப்படும் பாதுகாப்பு படையினருக்கு உடனுக்குடன் உரிய சிகிச்சைகளை அளிப்பதற்கு ஏற்ற, ஏற்கனவே ஒரு தொகுதியினருக்குரிய பயிற்சிகள் நிறைவு பெற்றுள்ளதென சங்கக் கிளைத் தலைவர் டாக்டர் பி. சத்தியலிங்கம் தெரிவித்தார்.

யுனிசெப் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அனுசரணையுடன் இலங்கை செஞ்சிலுவைச் சங்க வவுனியா கிளையினர் பயிற்சி நெறிகளை நடத்திவருகின்றனர்.
முதலுதவி சிகிச்சைகளை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பாகவும் பயிற்சிகள் இடம்பெற்றுவருகின்றன.


சுதாவின் பின்னூட்டம்.

CS gas ஐ உபயோகிப்பது இரசாயன ஆயுதம் உபயோகிப்பது போல் எனக் கருதினால், இலங்கையில் நடைபறும் அனைத்து வகையான ஆர்ப்பாட்ட வகையிலான போராட்டங்களும் கூட இரசாயான ஆயுதத்திற்கு எதிரான போராட்டமாகவே பார்க்கப்பட வேண்டும். ஏனெனில் O-CHLORO- BENZYLMALONONITRILE எனப்படும் இராசாயனப் பெயரை கொண்ட CS gas ஐ, அப்பாவிகளைக் கைது செய்தலையே தொழிலாகக் கொண்ட இலங்கை காவல்துறை நூற்றுக்கணக்கான முறை பல்கலைக்க்ழக மாணவர்கள் மீது நடத்தியிருக்கிறது. சகல பத்திரிகைகளாலும் பிக்ஞையின்றி பயன்படுத்தப்படும் சொல் ‘கண்ணீர்ப்புகைக் குண்டு’ என்பது உண்மையில் CS gas என்பதே.

CS gas ஆயிரக்கணகான தொன்கள் வியட்னாம் யுத்ததில் அமெரிக்க அரசு பயன்படுத்தியது. ஒரு சில செக்கன்களில் தமது வேலையைக் காட்டத்தொடங்கும் CS gas ஐ இரசாயன ஆயுதம் எனக் கூறுவது எவ்வகையில் பொருத்தப்பாடான விடயம் என்பது புரியவில்லை. சாதாரணமாக இராணுவப் பயிற்சி பெறும் போது CS gas ஐ எதிர்கொள்ளும் நோக்கில் கவசம் அணிந்து பயிற்சி மேற்கொள்வது பெரும்பாலான இராணுவங்களின் நடைமுறையாகும்.

எதிரில் உள்ளவரை உடனடியாக செய்லற்றதாக மாற்றக்கூடிய CS gas ஐ பயன்படுத்தி இராணுவத்தினரைக் கைதுசெய்ய மட்டுமே முடியும். அதற்கு அப்பால் வேறெந்த விடயத்தையும் செய்ய முடியாது. சில வேளைகளில் புலிகள் இராணுவத்தினரை ஆயிரக்கணக்கில் கைது செய்வதற்கான பரிசோதனை முயற்சியாக இதனைக் கொள்ள முடியும்.

நரம்புகளைப் பாதிக்கக் கூடிய வகையில் அமைந்ததும் உடனடியாக இரத்தத்தை வரவழைக்கக் கூடியதுமான இரசாயன ஆயுதங்கள் உலகத்தில் வல்லரசு நாடுகளால் பரவலாகக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. Hydrogen Cyanide போன்ற ஆளைக் கொல்லக்கூடிய இரசாயன ஆயுதங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் CS gas ஐ இரசாயன ஆயுதம் எனக்கூறவே முடியாது.

ஆயினும் cyanide மீதான பிரக்ஞை உள்ள புலிகள் CS gas உடன் cyanide சேர்த்து உபயோகிப்பார்களேயானால் விளைவு மோசமாகக் கூடும். Hydrogen Cyanide ஐ வன்னியில் பாவிப்பது ஒப்பீட்டளவில் குளிர் நாடுகளில் பாவிப்பதை விட சுலபமானது. ஏனெனில் அவர்களது தயாரிப்புக் கூடத்திலேயே வாயு நிலையில் அதனைத தயாரித்து பாதுகாத்து வைக்க முடியும். குளிர்நாடுகளில் அது சில வேளைகளில் திரவமாகும் வாய்ப்புக்கள் உண்டு. ஆகையால் எவ்விதமான நிலையில் பயன்படுத்தப் போகின்றார்கள் என்ற சிக்கல் எழ முடியும். அதற்கு ஏற்றபடி பயன்படுத்த வேண்டி வரும். ஆயினும் வன்னியில் வாயு நிலையில் தயாரிப்பு மேற்கொண்டு வாயு நிலையில் பயன்படுத்த முடியும். பயன்படுத்தத்தான் போகின்றோம் என முடிவெடுத்தால் எதிர்காலத்தில் புலிகள் நிச்சயமாக Hydrogen Cyanide ஐ பயன்படுத்துவார்கள் எனக் கூறமுடியும்.

கருணா அண்மையில் தெரிவித்த கருத்தின் பிரகாரம் Ammonium nitrate ஏ புலிகளால் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அவ்வேளையில் புலிகள் Ammonium nitrate பயன்படுத்தப் போகின்றார்கள் என்ற கதை பரவலாக அடிபட்டது. ஆயினும் Ammonium nitrate ஐப் பயன்படுத்தி பெரியவெடிப்புக்களை ஏற்படுத்த முடியுமே தவிர பெரும் இழப்புக்களை ஏற்படுத்த முடியாது. ஆயினும் புலிகள் வழமையைப் போல சைக்கிள் போள்ஸ் கலந்து மாதிரியான வெடிபொருட்களை உற்பத்தி செய்வார்களேயானால் அதன் விளைவு பெரிதாகும் எனக் கூறமுடியும்.

ஆயினும், Ammonium nitrate ஐ புலிகள் பெருமளவில் தருவித்தது வேறிவகையான ஆயுதங்களைச் செய்வதற்காகவே இருக்குமே தவிர அதனை நிச்சயமாக நேரடியாகப் பயன்படுத்த மாட்டார்கள். ஏனெனில் நேரடியாகப் புலிகள் பயன்படுத்தும் எவ்வகை ஆயுதங்களுக்கும் மாற்றாக வெளிநாடுகள் உடனடியாக இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்கும் என்பதை அவர்கள் மிகநிச்சயமாக உணர்ந்து வைத்திருப்பார்கள். சிறுவகையான ஆயுதங்களையே தமக்கு ஏற்றபடி மாற்றத்திற்கு உட்படுத்தும் புலிகள் இவ்வகையான ஆயுதங்களை எவ்வாறாயினும் மாற்றத்திற்கு உட்படுத்தியிருப்பார்கள். அதில் யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது.

Hydrogen Cyanide ஐ கூட அவர்களது உருவாக்கத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக மாற்றி அமைப்பது கடினம். ஒவ்வொருமுறையும் விமானத் தாக்குதலின் போதும் சில குண்டுகள் வெடிக்காத நிலையில் புலிகளுக்கு Hydrogen Cyanide இதனை வெற்றிகரமாகப் பயன்படுத்த முடிந்தால் அது ஆச்சரியமானதே.

ஆயினும் கார்பன், குளோரின் பிணைப்புக்களை மையமாக வைத்து இவறை விடப் பெரியளவிலான பாதிப்பையும் Biological effects ஐயும் ஏற்படுத்தக் கூடிய பொருட்களை இலகுவாக உற்பத்தி செய்ய முடியும். சிறிது காலத்தின் பின்னரே புலிகள் அவற்றை பயன்படுத்துவார்களா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இலங்கை இராணுவம் மரபுவழிப்படையணி அல்ல என டி.சிவராம் சொல்லுவார். அதுவே இன்று இலங்கை இராணுவத்திற்கு வசதியாகப் போய்விட்டது. மரபுவழிப்படையணியாக மாறியிருந்தால் அடிக்கடி போர் நுட்பங்களை மாற்றியவாறு தாக்குதலை நடாத்தும் புலிகளை அவர்களால் எதிர்கொள்ள முடியாமல் போயிருக்கும். அதற்கு தகவமைத்துக் கொள்வது மரபுவழிப்படையணியாகப் பயிற்சி பெறவர்களுக்கு மிகக்கடினமான ஒரு செயல். தற்போது இலங்கை இராணுவம் கொரில்லா அமைப்பு முறைக்கு ஏற்ற மாதிரியாகத் தன்னை தகவமைத்துக் கொள்வதென்பது அவர்களுக்கு வலுச் சேர்ர்க்கும் ஒரு காரணியாகும்.

இதனை விட இராணுவ கட்டளைப் பீடத்தை அவர்கள் யாழ்ப்பாணத்தில் de-centrlaize (அய்.. பினவீனத்துவம்.. !) செய்திருக்கிறார்கள். இது இலங்கை இராணுவம் மிக பக்காவான திட்டமிடலுடன் களமிறங்கியோருப்பதைக் காட்டுகின்றது. centrlaize செய்யப்பட்ட இராணுவ அமைப்பை புலிகள் இலகுவாக நிர்மூலமாக்குவார்கள். ஏனெனில் புலிகள் அடுத்த கட்ட ஈழஒப்போருக்கு தம்மைத் தயார் செய்த போது மையத்தை அழித்தொழிக்கும் முறையில் அமைந்த இராணுவ நகர்வுகளை தமது முக்கியமன விடயமாகக் கொண்டிருந்தார்கள். ஆயினும் பலாலியை விட காரைநகரில் விமானத்தளத்தை அமைத்தது மட்டுமல்லாது கட்டளைப் பீடங்களை பரவலாக்கல் செய்து சுதந்திர முடிவுகளுக்குத் தயார் செய்ததன் மூலம் நவீன பல்தேசியக் கம்பனிகள் தமது வியாபரப் பெருக்கத்திற்கென பல்வேறு கண்டங்களிலும் கொண்ட்ருக்கும் கட்டமைப்பை இராணுவக் கட்டமைப்பில் பின்பற்றுகின்றனர். அது மட்டுமல்லாது ஆட்லறி தளங்களை யாருமே எதிர்பார்க்காத வகையில் பரவலாக்கம் செய்திருக்கின்றனர். இக்கட்டமைப்பை புலிகள் உடைப்பது இலேசுப்பட்ட காரியம் அல்ல.

அதுமட்டுமல்லாது, புலிகளின் அரசியல் ரீதியான பலவீனங்களைக் கொண்டு சிங்கள் மக்கள் மத்தியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் தேசிய வெறி புலிகளைப் பொறுத்தவரை எதிர்பார்க்காத ஒன்று. இன்றிருக்கும் நிலையில் சிங்க மக்கள் மத்தியில் இருந்து தற்கொலைக் கொண்டுதாரிகளை உற்பத்தி செய்துவிடக் கூடியதான மனநிலைக்கு சிங்கள மக்களை அரசாங்கம் கொண்டு சென்று கொண்டிருக்கின்றது. இலங்கை அரசாங்கத்தின் பொருளாதாரத்தை ஆட்டம் காண வைப்பதன் மூலம் அவர்களை தள்ளாடச் செய்ய முடியும் என்ற புலிகளின் சமன்பாடு இவ்விடத்தில் தோற்றுப் போய்க்கொண்டிருக்கிறது.

இதன் அரசியல் பற்றிப் பார்ப்போமேயானால், திடீரென அரசாங்கம் இவ்வாறு அறிவித்ததில் கூட சில உள்நோக்கங்கள் இருக்கக் கூடும் என எதிர்பார்க்க வேண்டியுள்ளது. இதுவே அரசாங்கம் பயன்படுத்தப் போகும் இரசாயன ஆயுதங்களை நியாயப்படுத்த வேண்டி அரசாங்கத்தால் சோடிக்கப்பட்ட கதையாக இருக்கக் கூடும். குறுகிய நிலப்பரப்பினுள் அடைபெற்றவாறு இராணுவத்தை வன்னிக் காட்டுக்குள் உள்ளிளுக்கும் புலிகள் ஒரு கட்டத்தில் மூர்க்கமாக வெளிப்படுவார்கள். அது அரசாங்கத்திற்கு நன்றாகவே தெரியும். அதனை எதிர்கொள்வதற்கு மகிந்த தயாராயிருக்கிறார் போலுள்ளது. மென்போக்குள்ள அரசியல் தலமையால் புலிகள் அடுத்து வெளிப்படுத்த இருக்கும் மூர்க்கத்தனத்தை எதிர்கொள்ள முடியாது. மேற்கு சார்புடைய அரசியல் தலமையாலும் அதனை எதிர்கொள்ள முடியாது.

ஆயினும் சீனா, ஈரான், பாகிஸ்தான் கோட்டில் தன்னை அடையாளப்படுத்த எத்தனிக்கும் அரசியல் தலமையான மகிந்த இதனை எதிர்கொள்ளத் தயாரியிருப்பார் எனவே எண்ண வேண்டியுள்ளது. (இரு தரப்பு மக்களாலும் இக்கட்டத்தை எதிர்கொள்ளவே முடியாது என்பது பயங்கரத் துயரமானது. மகிந்தவாலும் புலிகளாலும் சில வகையான மாற்றுக்கருத்தாளர்களும் மட்டுமே இதனை ஜீரணித்துக் கொள்வார்கள். புலிகள், மகிந்த கூட தமது ‘தாய்நாடு’ என்ற தேசியக் கருத்தியல் ஊடாக இதனை உள்வாங்கிக் கொள்ள முடிந்தாலும் மாற்றுக்கருத்தாளர்களும் ஜனநாயகக் காவலர்களும் இதனை எதிர்கொள்ளும் விதம் மிகக் கேவலமானதாகவே இருக்கும். புலிகளுக்கு மக்களுக்கும் அவர்களில் மிகுந்த வெறுப்பை ஏற்படுத்தும்.)

பொருளாதார சிக்கல் மட்டுமல்ல இழப்புகளாலும் வாழ்வியல் நெருக்கடிகளாலும் பீடிக்கப்படும் இச்சிறுதீவு மக்கள் தமது உளநெருக்கடியை இன்னும் 20, 30 வருடங்களுக்கு மேலாக எதிர்கொள்ள வேண்டி வரலாம். பல்வேறு துறைகளிலும் துறைப்பிரிப்புக்களுடன் வேகமாக வளர்ந்து வரும் உலக மாந்தர்களை எம்மக்களால் எக்கட்டத்திலும் எட்டிப் பிடிக்க முடியாமலும் போகலாம். ஒரு வேளை யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்பான காலப்பகுதியில் தமிழ் மக்களால் வெளிநாட்டு உதவிகளால் பொருளாதார முன்னேற்றம் அடைய முடிந்தாலும் உளச்சிக்கல்களால் அவர்களால் இன்னும் 20, 30 வருடங்களுக்கு வெளிய வரவே முடியாது.

மக்களின் பிணங்களில் இருந்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள். மாற்றுக் கருத்து என்பது இன்று கொச்சையான வார்த்தையாகிக் கொண்டிருகிறது. ‘இலங்கை அரசே போரை நிறுத்து’ என்று 74 பேர் கையெழுத்து வைத்து அறிக்கை வெளியிட்டால் எம்மால் சந்தோசப்பட முடிந்திருக்கும்.

நண்பர்களே,
உங்களது பிரச்சனை வேறு. எமது பிரச்சனை வேறு.

-சுதா

சந்திரன்.ராஜா வினது பின்னூட்டம்.

அரசே!புலிகளுக்கான போரை தொடர்ந்து நடத்து!!
புலிகளின் அழிவில்லிருந்து தான் இலங்கைத்தீவின் மக்களுடைய ஜனநாயகஉரிமைகளையும் பேரினவாதத்தின் கொடுமைகளையும் வெல்லுவதற்கான புதிய- போராட்ட பணியையும் அமைத்துக் கொடுக்கும்.

சுதாவின் பதில்.

“அரசே!புலிகளுக்கான போரை தொடர்ந்து நடத்து!!” - chandran.raja

chandran.raja சொல்வது போல் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டால் அந்நேரத்தில் இலங்கையின் சனத்தொகையில் 200,000 வரை வீழ்ச்சி ஏற்படும். அதில் இருந்து தான் உங்களுக்கு தீர்வு வேண்டுமென்றால் அது உங்களது உண்மையான முகத்தை காட்டுகிறதாகவே அர்த்தப்படுத்த வேண்டும். ஏனெனில் உங்களது பல பின்னூட்டங்களை நான் நீங்கள் எழுத்தத் தொடங்கிய காலத்தில் இருந்து அவதானித்து வருகின்றேன். புலிகள் மீதுள்ள காழ்ப்புணர்வால் நீங்கள் ஜனநாயக முகமூடி அணிந்து கூறும் சற்றும் மனித உணர்வில்லாத பின்னூட்டங்கள் பல தடவைகள் எனக்கு எரிச்சலையும் கோபத்தையும் உண்டாக்கியிருக்கிறது. அஷ்ரப் அலி என்னும் ஒரு நபர் நீங்கள் செய்யும் அதே வேலையை தேசத்தில் பல மாதங்களுக்கு முன்னர் செய்து கொண்டிருந்தார். அந்நேரத்தில் ரகு, ரதன் மற்றும் நிர்மலன் போன்றோர்கள் அதற்கு பதிலளித்தார்கள். உங்களது கருத்துக்களுக்கு பதிலளிக்க யாரும் இல்லாத காரணத்தால் நீங்கள் தனித்தவில் வாசிக்கிறீர்கள்.

நான் யுத்தத்தை நிறுத்துமாறு கோரியிருப்பதற்கு உங்களது பதில் “அரசே!புலிகளுக்கான போரை தொடர்ந்து நடத்து” என்பதே அதன் விளைவுகளை கொஞ்சம் கூட யோசிக்காமல் நீங்கள் பதில் எழுதியிருக்கிறீர்கள். உங்களது குடும்பமோ உறவினர்களோ வன்னியில் இல்லை என்பதால் உங்களால் இவ்வாறு பேச முடிகின்றது.

உலகின் வேறு நாடுகளில் வேலை பார்ப்பதற்கான ஆய்ப்புக்கள் இருந்தும் அதனைத் தட்டிக் கழித்துவிட்டு அண்மைக் காலம் வரையும் யாழ்ப்பாணத்தில் தொழில் புரிந்த பேராசிரியர் தயா சோமசுந்தரம் இவை பற்றி தெளிவாக கூறியுள்ளார். Psychiatic cost of war என்பது பற்றிய ஆய்வுகள் இன்னும் வடக்கில் கொஞ்சம் கூடச் செய்யப்படவில்லை. எதிர்காலத்தில் அதற்கு எமது சமூகம் படப்போகும் கஸ்டம் பற்றிய எவ்வித புரிதலுமற்றுத்தான் உங்களைப் போன்றவர்கள் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

PTSD எனப்படும் மனவடு நோய், மனச்சோர்வு நோய் மற்றும் பலரில் கணப்படும் malignant PTSD எனப்படும் மிகை மனவடு நோய்கள் போன்றவற்றால் இன்றைய நிலையிலேயே எமது சமூக தனது ஆரோக்கியமான வளர்ச்சியை இன்னும் 20 வருடங்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாது. தற்போது பிறக்கும் பிள்ளைகள் எச்சமாக இன்னும் 50 வருடங்களுக்கு தமது மன அழுத்தததிக் காவித்திரிவார்கள். உங்களது பிள்ளை சிக்கன் பேர்கர் ஊட்டிவிட்டுக் கொண்டு ஜனநாயக முகமூடி அணிந்து கொண்டு நீங்கள் எழுதும் கருத்துக்களுக்காக சில தலைமுறைகள் தமது வாழ்வைத் தொலைக்க வேண்டும் என்பது முறையல்ல chandran.raja

கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களை இன்றிருக்கும் வடக்கு மாணவர்களால் இலகுவாகச் செய்ய முடியாதிருப்பதாக ஒரு இடத்தில் தயா சோமசுந்தரம் குறிப்பிட்டிருக்கிறார். அவ்வாறு செய்தால் கூட மற்றைய துறைகளுடன் அவர்களால் அதனை தொடர்புபடுத்த முடிவதில்லை என்பது மேலதிகமான கருத்து. இன்றைய உலகம் பிளவுபட்ட துறைகள் பல்வேறு வகைகளிலும் இடைவெட்டும் புள்ளிகளை புதிய துறையாக்கி முன்னேறுகின்றது. அதுவே எதிர்காலத்தின் கல்வி முறையாகவும் வளர்ச்சி பெறப்போகின்றது. பிறக்கும் போதே இக்குறைபாட்டுடன் பிறக்கும் பிள்ளைகள் எவ்வாறு தமது எதிர்காலத்தை ஆரோக்கியமாக கொண்டு செல்லப் போகின்றார்கள் என்பதைப் பற்றிய எதுவித புரிதலுமற்று உங்களது பின்னூட்டங்கள் இருக்கின்றது. போரைத் தொடர்ந்து செல் எனக் கூறக் கூடியதாக உங்களது ஜனநாயகச் சூழல் இருக்கின்றது என்றால் உங்களைப் பற்றிப் பேசுவதில் பிரயோசனம் இல்லை.

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னால் ஜனநாயகச் சக்திகள் மக்களைப் படுத்தப்போகும்பாடுகளை நினைத்தால் இன்னும் பயமக இருக்கிறது. ‘சமூக வடு’ மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களை சமநிலை அடைய விட்ட பின்னரே ‘சமூக மாற்றம்’ பற்றி யோசிக்கவே முடியும். அதற்கு மத வழிபாடுகள், சடங்குகள் அத்தியாவசியமானவை. அதன் வழி மட்டுமே சமநிலையை அடையமுடியும். அதன் பின்னரே சமூக மாற்றத்தைச் சிந்திக்க முடியும். ஆயினும் யுத்தம் முடிவுக்கு வந்தாலும் உடனடியாக தொடங்க இருக்கும் ஜனநாயக சக்திகளின் ‘சாதிப்போராட்டம்’ மக்களின் உளவியல் ரீதியாக நோய்க்கூறுகள் மிகுந்த ஒரு சமூகமாக எப்போதும் பேணுவது உறுதி. இதல்லாம் அவர்களுக்கு பிரச்சனையே அல்லவென்பது எமக்கொன்றும் புதிதும் அல்ல.

‘Communities tended to be more dependent, passive, silent, without leadership, mistrustful, and suspicious. Additional adverse effects included the breakdown in traditional structures, institutions and familiar ways of life, and deterioration in social norms and ethics. A variety of community level interventions were tried.’

நான் சாதிக்கட்டமைப்பிற்கு ஆதரவானவன் அல்ல. மிகவும் எதிரானவன். ஆயினும், சில வகையான அடிப்படைக் கட்டுமானங்களை மாற்றும் போது எமக்கு அவதானமும் கொஞ்சமாவது சமூக அக்கறையும் இருக்க வேண்டும். அதுதான் தமிழீழப் போராட்டத்திலும் நடந்தது. இனியும் நடக்கப் போகிறது.

சந்திரன் ராஜா உங்களைப் போன்றவர்களுடன் உரையாட நான் விரும்புவதில்லை. வேலைக்குப் போய்விட்டு வந்து பொழுது போகாத நேரங்களில் பின்னூட்டம் இட்டு நீங்கள் விளையாடுவது எமக்குப் புரிகிறது. ஆயினும் சில விடயங்கள் சொல்லப்பட வேண்டியவை நண்பரே..

மேலதிக வாசிப்பிற்கு சில தொடுப்புக்கள்.
1.
Collective trauma in northern Sri Lanka: a qualitative psychosocial-ecological study- Daya Somasundaram (2007)
–International Journal of Mental Health Systems
http://www.ijmhs.com/content/pdf/1752-4458-1-5.pdf

2.
தொடர் நெருக்கீடுகளினால் உளப்பிறள்வுற்று செல்கிறது சமூகம். - தயா சோமசுந்தரம்.
–மூன்றாவது மனிதன்- 15 (2002)
http://noolaham.net/wiki/index.php?title=மூன்றாவது_மனிதன்_15

3.
யாழ்ப்பாணத்தில் இந்திய ராணிவ நடவடிக்கையின் உளவியல் தாக்கங்கள் (1987ம் ஆண்டின் இறுதி.)- தயா சோமசுந்தரம்.
–முறிந்தபனை (1987)
http://noolaham.net/wiki/index.php?title=முறிந்த_பனை

–சுதா

சந்திரன் ராஜாவின் பதில்.

சுதா நீங்கள் கொண்டிருப்பது தமிழ் மக்கள் மேல் கொண்ட கருசரனை அல்ல.மாறாக..சுலநலம் அறியாமை …….
தமிழ்-மூஸ்லிம் மக்கள் அனுபவித்த துன்பங்கள் இழப்புகள் பின்னடைவுகள் சிங்களஅரசால் அனுபவித்ததைவிட பலமடங்கு கொடுமைகள் புலியால் அனுபவித்தவை.
உயிர்வாழ்வதற்கே! போராட்டம் செத்து மடிந்து போவதற்கல்ல!
உரியகல்வி அறிவு இல்லாதவன் நீதிபதியாகமாறி கோழிக்கள்ளனுக்கும் விபசாரிகளுக்கும் போராசியர்களும் அறிவாளிகளுக்கும் கப்பம்
கொடுக்க மறுத்தவர்களுக்கும் துரோகிப்பட்டம் கொடுத்து மரண தண்டனை கொடுக்கப்பட்டதின் விளைவே இன்றைய விளைவு.

Rapheal a.k.a Vincent Paul இனது பின்னூட்டம்.

புலிகள் இரசாயன ஆயுதம் பயன்படுத்துவது பற்றி அதிகம் - விகிதாச்சார அடிப்படையில் - செய்தி வெளியிடுவது நீங்களாகத்தான் -தேசம்- உள்ளது. இலங்கை அரசு செய்தி ஊடகங்களைவிட இது அதிகமாகவும் வேடிக்கையாகவும் உள்ளது.

புலிகளின்மேல் காழ்ப்புணர்வு உள்ளவர்கள் இவ்வாறு கூறலாம். நடுநிலை(:. )யில் இருப்பவர்களும் இப்படி எழுதுவத வாடிக்கை என்பது வெடிக்கை.
சுதா என்பவரின் கட்டுரை ஒன்று பின்னூட்டமாக இடப்பட்டிருக்கிறது

புலிகளின் மீது முன்னர் குழந்தைப் போராளிகள் குறித்த குற்றச்சாட்டு எழுப்ப்பபட்டதுபோல இலங்கை அரசு இரசாயன ஆயுதம் பற்றி ஓர் குற்றச்சாட்டை புலிகளின் மீது முன்வைக்க முற்படுகிறது என்ற ஐயத்தையே இது எழுப்புகிறது.

சந்திரன் ரயா என்பவருக்கு - தேசத்தில் பின்னூட்டமிடுபவருக்கு - இது முன்கூட்டியே தெரிந்திருக்கிறது? …கொன்ஸ்பிரசி தியரி?

ஒப்பீட்டளவில் -செய்திகள் என்ற வகையில் தேசத்தில்- இலங்கை அரசின் மற்றும் இலங்கை அரசு சார்புச் செய்திகள் வருகின்றதன் காரணணம் என்ன?

என்னைப் பொறுத்தவரை - இங்கே எனது பெயரை முழுமையாகக் குறிப்பிட்டிருக்கிறேன்- போர் உடனடியாக நிற்கவேண்டும். மனிதர்கள் இறப்பது-கொல்லப்படுவது இருதரப்பிலும் நிறுத்த்பபடவேண்டும் என்பதே உடனடியாகத் தேவை.
புலிகளின் தீவிர ஆதரவாளர் போல் போர் வெறியராகவோ அல்லது தேசத்துக்குப் பின்னூட்டமிடும் சிலர் சொல்வது போல்
// இலங்கை அரசை ஆதரிப்போம். போர் தொடரட்டும். புலிகள் ஒழியட்டும்// என்றோ … யாரும் கருத்து கூற முடியாது.
நன்றி